550 ஹெக்டேர் காடுகளை ஒற்றை ஆளாக உருவாக்கிய *காடுகளின் நாயகன் ஜாதவ் பயெங்க்!*

 



👤👈👌👍👏👏👏👏👏👏


550 ஹெக்டேர் காடுகளை ஒற்றை ஆளாக உருவாக்கிய *காடுகளின் நாயகன் ஜாதவ் பயெங்க்!*


அசாமில் ஒரு தரிசு நிலத்தில் அவர் தனியாக உருவாக்கிய காடு, 25 மரக்கன்றுகளுடன் தொடங்கப்பட்டது என்றால் நம்ப முடிகிறதா?


ஆம். மஜூலி என்ற தீவில், 1979 ஆம் ஆண்டு பருவமழையின் போது ப்ரம்மபுத்திரா ஆறு வழக்கம் போல் வெள்ளத்தில் மூழ்கியது.

இதனால் தீவு விரைவான வேகத்தில் அரிக்கப்பட்டு வருகிறது என்பதை உணர்ந்த அவர், அருகிலுள்ள கிராமத்தில் உள்ள பழங்குடி மக்களிடம் இதற்கு என்ன செய்ய முடியும் என்று கேட்டார். அவர்கள் கடுமையான சூழ்நிலைகளை தாங்கக்கூடியதாக இருப்பதால் மூங்கில் மரங்களை நட வேண்டும் என்று கூறி, 25 மரக்கன்றுகளையும் சில விதைகளையும் கொடுத்தார்கள்.


அவர் அந்த மரக்கன்றுகளை நட்டு கவனித்துக்கொண்டது  மட்டுமல்லாமல், அந்த பகுதியை ஒரு காடாக மாற்றும் முயற்சியில், சொந்தமாக அதிக மரங்களை நட்டார்.


இன்று  இந்த காட்டில்  வங்காள புலிகள், இந்திய காண்டாமிருகம் என பல மிருகங்களும், 100 க்கும் மேற்பட்ட மான் மற்றும் முயல்களும் உள்ளன.  மேலும் குரங்குகள் மற்றும் பல வகையான பறவைகள் உள்ளன. 50 முதல் 150 யானைகள் கொண்ட மந்தை, ஒரு வருடத்தில் கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் அந்தக் காட்டில் வருகை தருகின்றன.


காடு அழிப்பு எனும் உலகளாவிய பிரச்சினைக்கு ஜாதவ் ஒரு எளிய தீர்வைக் கொண்டுள்ளார். "இயற்கையை நேசிக்க நம் குழந்தைகளுக்கு கற்றுக்கொடுங்கள். மீதமுள்ளவை தானாகவே நடக்கும்" என்று அவர் கூறுகிறார்.

 

நம் குழந்தைகளுக்கு இயற்கையை நேசிக்க கற்று கொடுப்போமா?


🌳🌳🦁🕸🕷🐝🐞🐎🐦🐥🐂🐸🐇🐿🐢🐈🐯🐍🌳


Comments

Popular posts from this blog

SUGA Elite Cruise Travellers Club* SUGA Elite Cruise Travellers Club is in tie-ups with international Cruise T I'll keep you ours and Travels companies. We can travel with the following major cruise lines:

சிறுகதை: *வெங்கட்ராமன் முடிவு சரியா தப்பா??* வெங்கட்ராமன் நன்கு படித்த பிராமண பையன். நல்ல வேலை. ஆள் பார்க்க மிக நன்றாக இருப்பான். வயது 38. ஆனால் திருமணத்திற்கு பிராமண பெண் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இன்னும் சரியாக அமையவில்லை. அவர்கள் குடும்பம் பழமையான பிராமண குடும்பம். வெங்கட்ராமன் வீட்டுக்கு வந்து அம்மா அப்பாவிடம் பேசினான். "அப்பா, எல்லாம் நல்லபடியா முடிஞ்சது அந்த ஆபீசுக்கு போய் அந்த பொண்ணோட பேசிட்டேன்...

எனது பாட்டி -விஜயா பாரதி மகாகவி பாரதியின் பெயர்த்தியான திருமதி. விஜயா பாரதி, கனடாவில் வசிக்கிறார். பாரதியின் புகழ் பரப்பும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் அன்னாரது கட்டுரை இது... உங்களுக்கு என் தாத்தா பாரதியை நன்கு தெரிந்திருக்கலாம். அவரின் இறுதிக் காலத்தைப் பற்றி பலர் எழுதி இருக்கிறார்கள். ஆனால் என் பாட்டி செல்லம்மாள், என் தாத்தாவின் மரணத்துக்குப் பிறகு எப்படி வாழ்ந்தார், மறைந்தார் என்பது பலருக்கும் தெரியாது