சினிமாக்காரன், டிவி பிரபலம் இன்னும் அரசியல் ஆசாமிகளுக்கே பத்மவிருது கிடைத்த தமிழகத்தில் முதல் முதலாக ஒரு விவசாய பெண்ணுக்கு அந்த விருது கிடைத்திருப்பது மோடி ஆட்சியின் மிகசிறந்த விஷயம்

 


சினிமாக்காரன், டிவி பிரபலம் இன்னும் அரசியல் ஆசாமிகளுக்கே பத்மவிருது கிடைத்த தமிழகத்தில் முதல் முதலாக ஒரு விவசாய பெண்ணுக்கு அந்த விருது கிடைத்திருப்பது மோடி ஆட்சியின் மிகசிறந்த விஷயம்


அந்த மூதாட்டியின் பெயர் பாப்பாம்மாள், மேட்டுபாளையத்தை சேரந்தவர், வாழ்வில் அவர் அளவு வறுமையினை கண்டவர் யாருமில்லை


கூலி வேலை செய்து மளிகைகடை நடத்தி அதில் கொஞ்சம் நிலம் வாங்கி விவசாயம் செய்து சகோதரிகளை வளர்த்து கரையேற்றி அவர்களின் பிள்ளைகளையும் வளர்த்து கரையேற்றி இன்று நிலம் ஒன்றே தன் வாழ்வு என விவசாயம் செய்துவரும் பாப்பாம்மாளுக்கு வயது 103


ஆம் கிட்டதட்ட 75 வருடமாக விவசாயம் செய்யும் அந்த மகராசிக்கு மோடி அரசு மிகபெரிய கவுவரத்தை அளித்திருக்கின்றது


பத்ம விருதுகள் என்றால் என்ன? யார் இந்நாட்டுக்கு தன் துறையில் மிகசிறந்த சேவையினை செய்கின்றார்களோ அவர்களை கவுரவிப்பது


இதுகாலமும் மக்கள் முகம்படும் நடிகர், நடிகையர் என அதன் தன்மையே வேறாய் இருந்தது


இப்பொழுதுதான் 70 வருடமாக இந்நாட்டு மக்களுக்கு தன்னால் முடிந்த அளவு நெல்லும், வாழையும், காய்கறியும், பயிரும் கொடுத்து சேவை செய்த விவசாய பென்ணுக்கு மிகபெரிய கவுரவம் வழங்கபட்டிருக்கின்றது


மோடி அரசின் மிக சிறந்த மக்கள் அவதானிப்புக்கும் கவனிப்புக்குமான சான்று இது


இவ்வளவுக்கும் பாப்பாம்மாள் பாஜக அல்ல, அவர் திமுகவின் மேல் பற்று கொண்டவர், கருணாநிதியினை சந்திக்க துடியாய் துடித்தவர்


அவருக்கு கட்சி பேதமற்று நாட்டின் நீண்டகால விவசாயி எனும் வகையில் பத்ம‌ஸ்ரீ கொடுத்த மோடி அரசை எவ்வளவு பாராட்டினாலும் தகும்


முன்பெல்லாம் பத்மவிருதுகளில் திமுக, அதிமுக அரசியலும் இன்னும் பலவும் இருந்தது அதையெல்லாம் உடைத்து எளிய மக்களுக்கும் சாதனையாளர்களுக்கும் விருதை கொடுத்து கவுரவிகின்றது மோடி அரசு


அப்படித்தான் 11 தமிழர்களுக்கு பத்மவிருது கிடைத்திருகின்றது, அதில் பாப்பாம்மாள் மகா முக்கியமானவர் முழு தகுதியுமானவர்

Comments

Popular posts from this blog

SUGA Elite Cruise Travellers Club* SUGA Elite Cruise Travellers Club is in tie-ups with international Cruise T I'll keep you ours and Travels companies. We can travel with the following major cruise lines:

சிறுகதை: *வெங்கட்ராமன் முடிவு சரியா தப்பா??* வெங்கட்ராமன் நன்கு படித்த பிராமண பையன். நல்ல வேலை. ஆள் பார்க்க மிக நன்றாக இருப்பான். வயது 38. ஆனால் திருமணத்திற்கு பிராமண பெண் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இன்னும் சரியாக அமையவில்லை. அவர்கள் குடும்பம் பழமையான பிராமண குடும்பம். வெங்கட்ராமன் வீட்டுக்கு வந்து அம்மா அப்பாவிடம் பேசினான். "அப்பா, எல்லாம் நல்லபடியா முடிஞ்சது அந்த ஆபீசுக்கு போய் அந்த பொண்ணோட பேசிட்டேன்...

எனது பாட்டி -விஜயா பாரதி மகாகவி பாரதியின் பெயர்த்தியான திருமதி. விஜயா பாரதி, கனடாவில் வசிக்கிறார். பாரதியின் புகழ் பரப்பும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் அன்னாரது கட்டுரை இது... உங்களுக்கு என் தாத்தா பாரதியை நன்கு தெரிந்திருக்கலாம். அவரின் இறுதிக் காலத்தைப் பற்றி பலர் எழுதி இருக்கிறார்கள். ஆனால் என் பாட்டி செல்லம்மாள், என் தாத்தாவின் மரணத்துக்குப் பிறகு எப்படி வாழ்ந்தார், மறைந்தார் என்பது பலருக்கும் தெரியாது