ஹிஸ்புலின் இரு தளபதிகளை தீர்த்துக்கட்ட ஆபரேஷன் இப்திகார் என்னும் ஒரு ரகசிய ராணுவ நடவடிக்கை எடுக்க ராணுவம் தயாரானது.. அந்த ரகசிய ஆபரேஷனின் கதாநாயகன் நமது ஹீரோ தான். அவர் இப்திகார் பட் என்று தனது பெயரை மாற்றி காஷ்மீரின் ஷோபியான் மாவட்டத்தில் தீவிரவாதிகளின் இருப்பிடம் தேடி கிராமம் கிராமமாக அலைந்தார்

 



ஒரு இளம் ராணுவ அதிகாரி தீவிரவாதிபோல் உருமாறி தீவிரவாத  இயக்கத்திற்குலேயே புகுந்து அதிரடி காட்டி அவர்களின் இயக்கத்தையே முடக்கிப்போட்டார்.. என்று கேட்கும்போதே சும்மா அதிருதில்ல..  ஆம் நண்பர்களே அந்த ஒப்பற்ற மாவீரனின் வீர சாகசங்களை உங்களுடன் பகிர்கிறேன்.  காஷ்மீரில்  ஹிஸ்புல் இயக்கத்தின் தளபதிகளான அபு தோறாரா மற்றும் அபு சப்ஜார் ஆகிய இருவரின் தலைமையின் கீழ் தீவிரவாதிகள் இந்திய ராணுவத்தின் மீதும், பொதுமக்கள்  மீதும் கடும் தாக்குதல் நடத்தி வந்தனர்.. இந்திய ராணுவமும், உளவு அமைப்புகளும் எவ்வளவோ முயன்றும்  இவர்கள் இருவர் இருக்கும் இடம் கண்டுபிடிக்கமுடியவில்லை. நாளுக்கு நாள் காஷ்மீரில் தீவிரவாத செயல்கள்  கட்டுக்கடங்காமல் சென்றது. ஹிஸ்புலின் இரு தளபதிகளை தீர்த்துக்கட்ட  ஆபரேஷன் இப்திகார் என்னும் ஒரு ரகசிய ராணுவ நடவடிக்கை எடுக்க ராணுவம் தயாரானது.. அந்த ரகசிய ஆபரேஷனின் கதாநாயகன் நமது ஹீரோ தான். அவர் இப்திகார் பட் என்று தனது பெயரை மாற்றி காஷ்மீரின் ஷோபியான் மாவட்டத்தில் தீவிரவாதிகளின் இருப்பிடம் தேடி கிராமம் கிராமமாக அலைந்தார், அவர் செல்லும் கிராமங்களில் டீ கடையில், சாப்பிடுமிடத்தில், புகையிலை கடைகளில் எல்லாம் தனது இளைய சகோதரனை ராணுவம் கொன்றுவிட்டது எனவே இந்திய ராணுவத்தை நான் பழிவாங்கவேண்டும் என்று உணர்ச்சி பொங்க பேசி எவனாவது தீவிரவாத இயக்கத்துடன் தொடர்புடையவன் சிக்குவானா என்று வலைவிரித்து காத்திருந்தார். அவரது எதிர்பார்ப்பு வீண் போகவில்லை ஒரு  தீவிரவாத தொடர்புடையவன் சிக்கினான் அவனிடம் தான் இந்திய ராணுவ செக்போஸ்டை தகர்க்க விரும்புவதாகவும் தனக்கு ஆயுதம் மற்றும் வெடிபொருட்கள்  தேவை எனவும், தான் இனி தீவிரவாத இயக்கத்தில் சேர்ந்து ராணுவத்தை கடுமையாக எதிர்க்கப்போவதாகவும் கூறினார், இதை நம்பிய அவன் இவரை வேறு ஒருவனுக்கு அறிமுகப்படுத்தி வைக்கிறான். இப்படியே நான்கு மாதம் தீவிரவாதிகளுடன் சுற்றி கடைசியாக ஹிஸ்புலின் தளபதிகளுடன் அறிமுகம் கிடைக்கிறது, அவர்கள் இவரை எளிதில் நம்பவில்லை கேள்விமேல் கேள்விகள் கேட்டுக்கொண்டிருந்தார்கள்,  ஒரு மாதகாலம் அவர்களுடனே சுற்ற ஆரம்பித்து அதன் பின்னும் அவர்கள் இவரை நம்பவில்லை,நம்ம சினிமா படத்துல வரது போல் என் மேல் நம்பிக்கை வரவில்லை என்றால் என்னை சுட்டுக்  கொன்றுவிடுங்கள்  என்று நெஞ்சை நிமித்தி நின்றார், நாட்கள் செல்லச் செல்ல  தீவிரவாத தளபதிகளுக்கு இவர்மீது நம்பிக்கை பிறந்தது,  ராணுவத்தின் மீது தாக்குதல் நடத்த உனக்கு வேண்டிய  ஆயுதங்கள் தருகிறோம் நீ வெற்றிகரமாக தாக்குதல் நடத்திவிட்டு வா என்று அவருக்கு ஆயுத பயிற்சியளிக்கிறார்கள், இவர்களை சரியான நேரம் பார்த்து தீர்த்துக்கட்ட வேண்டும் என்று சரியான தருணத்திற்காக காத்திருந்தார். பாக்கிஸ்தான் செல்வதற்காக ஹிஸ்புல் தளபதிகள் இருவரும் ரகசியமாக கிளம்பி பாக்கிஸ்தான் எல்லை அருகே இருக்கும் ஒரு கிராமத்திற்கு சென்று பதுங்கி இருக்கிறார்கள், இவர்களை பின்தொடர்ந்து தனியாளாக சென்ற நம்ம ஹீரோ அதிரடியாக வீட்டிற்குள் சென்று இருவருடனும் மோதி அவர்கள் இருவரையும் தீர்த்து கட்டிவிட்டு அவர்கள் வைத்திருந்த ஆயுதங்கள் வெடிபொருட்கள் அனைத்தையும் எடுத்துக்கொண்டு அருகிலுள்ள இந்திய ராணுவத்தளத்திற்கு தப்பி வந்துவிடுகிறார்.. இவரது சாகசச் செயல்களைப் பாராட்டி இந்திய ராணுவம் இவருக்கு சேனா மெடல் அறிவித்தது.  ஹிஸ்புல் தளபதிகள் சுட்டுக்கொல்லப்பட்டபின் அங்கு தீவிரவாதம் சற்று குறைந்தது.. இவரின் தலைக்கு விலை வைத்தது தீவிரவாத இயக்கம். இவரை கொல்பவருக்கு இனாம் அறிவித்தது. இந்திய ராணுவம் மேற்கொண்ட பல அதிரடி நடவடிக்கைகளில் பங்குபெற்று பல பதக்கங்களை வென்றார்.

மார்ச்சு 21, 2009ம் ஆண்டு பாகிஸ்தானில் பயிற்சிபெற்ற தீவிரவாதிகள் குப்புவாரா மாவட்டத்தில் உள்ள ஹபஹ்ருதா காடுகளில் ஊடுருவியிருப்பதாக செய்தி வருகிறது, அவர்களை வேட்டையாட தனது குழுவுடன் புறப்பட்டு செல்கிறார்.  மிகவும் மோசமான வானிலை, தீவிரவாதிகள் பாதுகாப்பாக பதுங்கி இருக்கிறார்கள் அவர்களை தேடிச் சென்று ஒரு கட்டத்தில் அவர்களுடன் கடும் துப்பாக்கி சண்டை நடைபெறுகிறது. தனது சகாக்களை தங்களுக்கு காவேரிங் பயர் தர சொல்லிவிட்டு எதிரிகளின் கூடாரத்தை நோக்கி நகர்ந்து செல்கிறார். தன்னுடன் நான்கு வீரர்களையும் அழைத்துச் செல்கிறார். தன்னந்தனியாக   தீவிரவாதிகளின் பதுங்கு குழிக்குள் புகுந்து அங்கு பதுங்கியிருந்த இரண்டு தீவிரவாதிகளை சுட்டுக்கொன்றுவிட்டு தப்பி ஓடும் தீவிரவாதிகளை தனது சகாக்களுடன் விரட்டிச் செல்கிறார். மறைந்திருந்து தீவிரவாதிகள் சுட்டதில் தன்னுடன் வந்த இரண்டு வீரர்கள் கடுமையாக காயமுற்றார்கள். அவர்களை காப்பாற்றுவதற்காக ஊர்ந்து சென்று அவர்கள் இருவரையும் மீட்டு பின்வாங்கும்போது இவரது தோள்பட்டையில் துப்பாக்கி குண்டு பதம் பார்த்துவிடுகிறது.. ஒரு மறைவிடத்தில் தனது சகாக்களை அமர்த்திவிட்டு, மீண்டும் தனது தாக்குதல்களை தொடுக்கிறார்.  கீழிருந்த தனது சகாக்களை மேலே வந்து காயம்பட்ட இரு ராணுவவீரர்களை காப்பாற்ற சொல்கிறார். மீண்டும் தீவிரவாதிகளுடன் ஏற்பட்ட துப்பாக்கி சண்டையில் இரண்டு தீவிரவாதிகளை சுட்டுக் கொன்றுவிட்டு தானும் வீர மரணமடைகிறார்.


இவரது மனைவியும் ராணுவ அதிகாரி, இந்திய அரசாங்கம் இவரது வீர சாகசங்களைப் பாராட்டி அமைதிக்காலத்தில் வழங்கப்படும் உயரிய விருதான அசோக் சக்ரா விருது கொடுத்து கொரவித்தது.


தன்னலம் பாராமல் தாய்நாட்டிற்காக தனது உயிரை தியாகம் செய்த அந்த ராணுவ அதிகாரியின் பெயர் மோஹித் சர்மா. யாராவது நண்பர்கள் இவரை மோஹித் என்று அழைத்தால் நான் மோஹித் அல்ல இப்திகார் என்று சொல்வாராம். இவரது இப்திகார் என்னும் பெயர் காஷ்மீரி இளைஞர்களிடையே மிகவும் பிரபலம். இவர் நமது மெட்ராஸ் ரெஜிமென்ட் படைப்பிரிவை சேர்ந்தவர்.


இவரது தியாகத்தின் நினைவாக டெல்லி ராஜேந்தர் நகர் மெட்ரோ ஸ்டேஷனுக்கு மேஜர் மோஹித் சர்மா மெட்ரோ ஸ்டேஷன் என்று அரசாங்கம் பெயரிட்டு மரியாதை செய்தது.


இவரது வீரத்தைப் போற்றும் வகையில் இப்திகார் என்னும் ஹிந்தி திரைப்படம் தயாராகி வருகிறது.  


அவர் தீவிரவாதிகளுடன் சுற்றியபோதும், ராணுவத்தில் பணிபுரிந்தபோதும் எடுத்த புகைப்படங்களை இங்கே காணலாம்.


இவரது நினைவுதினம் - 21 March ....வீர வணக்கம் மாவீரனே


Comments

Popular posts from this blog

நான் கிட்டத்தட்ட 22 வயது வரை நாத்திகனாக இருந்தேன். கோவில்களுக்குச் செல்வது பிடிக்க வில்லை. நான் அவற்றை பிராமணர்கள் மற்றும் பிறர் பணம் சம்பாதிக்கும் இயந்திரங்களாகவே கருதினேன். ஒவ்வொரு அடியிலும் அவர்கள் எப்படி பணம் கேட்டார்கள் என்பதை நான் வெறுத்தேன்.

8th August 11am, Delhi: MAHA PANCHAYAT- 100Cr HINDU Movement for Abolition of totally Discrminatory HR&CE Act.1951, all over India. Temples should function as independently as MOSQUES & CHURCHES. Money taken/swindled should be given back by Govts.

1961 ஆம் வருடம் வெளிவந்த தேன்நிலவு படத்தில் உள்ள பாட்டு பாடவா என்ற மிக இனிய பாடல்... ஜெமினி கணேசன் வைஜெயந்தி மாலா நடித்த பாடல்.... அவ்வளவு இனிமையான பாடல்... ஆனால் படத்தில் பார்த்தால் இரண்டு பேரும் குதிரை மேல் உட்கார்ந்து கொண்டு மெல்ல குதிரை ஓட்டிக்கொண்டு செல்வார்கள்... ஆனால் இந்த காலத்து பசங்களும் அந்த பாட்டுக்கு கலக்கலாக நடனமாடி விட்டார்கள்... சில பல சாட்களை நான் இங்கே பப்ளிஷ் செய்துள்ளேன் பாருங்கள்... அந்தப் பாடலில் நடித்த வைஜெயந்திமாலா அப்போது எவ்வளவு அழகாக இருந்துள்ளார் பாருங்கள் மேலே போட்டோக்களை பார்க்கவும்