வீட்டு திண்ணையில் அமர்ந்தபடி , கண்களை மூடியவாறு ராம ஜபம் செய்து கொண்டிருந்த தியாகராஜர் , குரல் கேட்டு சட்டென்று கண் விழித்தார்.

 


ராமநவமி ஸ்பெஷல். 

*************************

வீட்டு திண்ணையில் அமர்ந்தபடி , கண்களை  மூடியவாறு ராம ஜபம் செய்து கொண்டிருந்த தியாகராஜர் , குரல் கேட்டு சட்டென்று  கண் விழித்தார்.

எதிரே ஒரு  வயதான தம்பதி அருகே, கூப்பிய கரங்களுடன் ஒரு இளைஞன். மெல்லிய குரலி ல் அந்த முதியவர்  பேச ஆரம்பித்தார்.

'' ஸ்வாமி, நாங்கள் வடக்கே ரொம்ப தூரத்திலி ருந்து கால்நடையாய்  ஷேத்ராடனம்   பண்ணி ட்டு வரோம். நாளை ராமேஸ்வரம் போகணும். இன்று ஒரு ராத்திரி மட்டும் உங்க இடத்துல  தங்கிவிட்டு ,  காலை பொழுது விடிந்ததும் கிளம்பிடறோம். தயவுசெய்து எங்களுக்கு உதவி செய்யணும்.."'

மெல்லிய குரலில் , பேசினார் அவர்; வயதான அந்த தம்பதியின்   அழுக்கு படிந்த உடைகள்  , முகங்களில் தெரிந்த களைப்பு , வாட்டம் மற்று ம், பேச்சில் தெரிந்த ஆயாசம் இவையெல்லா வற்றையும் தாண்டி , அம்மூவரின் முகலாவண் யமும் , தெய்வீக அம்சமும் தியாகராஜரை என்னவோ செய்ய அவருக்கு ஒரு வித பக்தி மயக்கம் ஏற்பட்டது.

ஒருகணம் நிலை தடுமாறியவர் பின், மெலிதா ன புன்னகையுடன் , இரு கரங்களையும் கூப்பி அவர்களை வணங்கினார் ; 

'' அதற்கென்ன  பேஷாய் தங்கலாம். இரவு போ ஜனம் பண்ணிட்டு நிம்மதியாய் தூங்குங்கோ"

அவர்களை உள்ளே அழைத்து சென்று அமர செய்தவர் பின், அடுக்களையை நோக்கி, உரத் த குரலில் , 

'' கமலா,குடிக்க தீர்த்தம் கொண்டு வா ..''

என்றார் ; அடுத்த கணம் தீர்த்த சொம்பு சகிதம் அங்கே வந்த கமலாம்பாளின் கண்கள், அங்கு அமர்ந்திருந்த புதியவர்களை கண்டு வியப்பி ல் விரிந்தன.

' யார் இவர்கள் ?'

'' கமலா ...'' தியாகராஜரின் குரல் அவளை தட்டியெழுப்பியது ; 

''கமலா இவர்கள் நமது விருந்தாளிகள். இன்று  நமது கிருஹத்தில் தங்க போகிறார்கள் ..இரவு உணவை இவர்களுக்கும் சேர்த்து தயார் செய்''

தீர்த்த சொம்பை அவளிடமிருந்து வாங்கியவா றே இயல்பாய்  பேசினார் அவர் ;

' அடடா, வீட்டில் இரண்டு பேர்களுக்கு போது மான அரிசியே இல்லை .இப்போது,  ஐந்து  பேர்களுக்கு உணவு தயாரிக்க வேண்டுமானா ல் அரிசிக்கு என்ன செய்வது ? பக்கத்து வீட்டு க்கு சென்று அரிசி வாங்கி வர வேண்டியது தான் '  

உள்ளுக்குள் எண்ணியவள்  , பின் எதையும் வெளிக்காட்டாமல், புன்னகையுடன் அவருக்கு தலையசைத்து விட்டு , அடுக்களையை நோ க்கி விரைந்தாள் ; போன வேகத்திலேயே, அங்கிருந்த பாத்திரங்களில் ஒன்றை  கையில் எடுத்தவள்,  பின் அதை  யார் கண்ணிலும் படாமலிருக்க  புடவையால் மறைத்தவாறு    அங்கிருந்து   வெளியே வந்த அக்கணம் அந்த சிறிய கூடத்தில் அமர்ந்திருந்த அந்த முதியவ ரின் குரல் அவளை தடுத்து நிறுத்தியது ; 

'' அடடா, எங்கே செல்கிறீர்கள் அம்மா?எங்களு க்காக  சிரமப்பட வேண்டாம். எங்களிடம் , வே ண்டிய அளவு தேனும், தினை மாவும் இருக்கி றது. இரண்டையும் பிசைந்து ரொட்டி தட்டி , நாம் அனைவரும் சேர்ந்தே சாப்பிடலாம்.'' அவ ளின் மனதை படம் பிடித்து காட்டியது போன்று  பேசியவரை, வியப்புடனும் , தர்மசங்கடத்துட னும் அவள் பார்த்து கொண்டிருக்கும் போதே, அவள் சற்றும் எதிர்பாராத கையில் , தேனும் , தினை மாவும் அடங்கிய ஒரு சிறிய பையை  அவளிடம் நீட்டினார்  அந்த முதியவர்.

தயக்கத்துடனும், சங்கோஜத்துடனும்  அதனை பெற்று கொண்ட அவள், உணவுத்தயாரிக்க அடுக்களையை நோக்கி விரைந்தாள்.

அன்று இரவு, அனைவரும் அந்த ரொட்டியை சாப்பிட்டு பசியாற  தியாகராஜர்,  அவர்களுட ன்  விடிய விடிய பேசிக்கொண்டிருந்து விட்டு  ,   பின், ஒரு கட்டத்தில் உறங்கி போனார்.

பொழுது  விடிந்தது, காலைக்கடன்களை முடித்து விட்டு, கூடத்தில் அமர்ந்து, வழக்கம் போல கண்களை மூடியவாறு, ராம நாமத்தை ஜபித்தவாறிருந்த  தியாகராஜர் , குரல் கேட்டு கண்களை திறந்தார..

"  ஸ்வாமி .." எதிரே புன்னகையுடன் அந்த முதியவர். அருகே, அவரின் பார்யாளும், மற்று ம் அந்த இளைஞனும் . அந்த முதியவர்  தொடர்ந்தார்.

'' ரொம்ப சந்தோஷம், நாங்க காவேரியில் ஸ்நானம் பண்ணிட்டு அப்படியே கிளம்பறோம்  இரவு தங்க இடம் கொடுத்து வாய்க்கு ருசியா ய் ஆகாரமும் கொடுத்து அன்பாய் உபசரித்தத ற்கு மிக்க நன்றி ..''

கூப்பிய கரங்களுடன் அந்த முதியவர் பேச,

அருகே அந்த மூதாட்டியும், இளைஞனும் அவரி ன் வார்த்தைகளை ஆமோதிப்பது போன்று தலையசைத்தவாறு  நின்றிருந்தனர சொல்லி விட்டு  மூவரும் அங்கிருந்து கிளம்ப,  தியாகரா ஜரும் அவர்களை வழியனுப்பும் நிமித்தமாய் , அவர்களுடன் வாசலுக்கு வந்தார்.

அவர்கள் மூவரும் வாசலை கடந்து , தெருவில் இறங்கி நடக்க ஆரம்பிக்க,  அவர்கள் செல்வ தை கண் இமைக்காமல் பார்த்தவாறு நின்றிரு ந்த தியாகராஜரின் கண்களில் ' சட்டென்று ' ஒரு தெய்வீக காட்சி இப்போது அந்த வயோதி கர் ஸ்ரீ ராமனாகவும் அந்த மூதாட்டி, சீதையாக வும், அந்த இளைஞன் அனுமனாகவும் தோற்ற மளிக்க அவருக்குள் இனம் புரியாத ஒரு பதை பதைப்பு.

கண்கள் பனிசோர நா தழுதழுக்க தன்னை மற ந்து பக்தி பரவசத்தில் ஆனந்த கூத்தாடினார்.

'' என் தெய்வமே, தசரதகுமாரா, ஜானகி மணா ளா, நீயா என் இல்லத்துக்கு வந்தாய்?. என்னே நாங்கள் செய்த பாக்கியம் அடடா, வெகு தூரத் திலிருந்து நடந்து வந்ததாய் சொன்னாயே ,  உன் காலை பிடித்து அமுக்கி, உன் கால் வலி யை  போக்குவதை விடுத்து , உன்னை தூங்க விடாமல் விடிய விடிய  பேசிக்கொண்டே இருந் தேனே. மகாபாவி நான், என் வீட்டில் தரித்திரம் தாண்டவமாடறதுன்னு தெரிஞ்சு , ஆகாரத்தை யும் கொண்டு  வந்ததுடன், ஒரு தாய் தகப்பனா யிருந்து எங்கள்  பசியையும்  போக்கினாயே ! உனக்கு  அநேக கோடி நமஸ்காரம்''

நடு வீதி   என்பதையும் மறந்து கண்ணீர் மல்க  கதறி அழுதார் தியாகராஜர்.அப்போது அவர் திருவாயினின்று, அனிச்சையாய் ,  

'' சீதம்ம.....மாயம்ம...''

என்கிற கீர்த்தனை பிறந்தது...

ஸ்ரீ ராம் ஜெய ராம்.  ஜெய ஜெய சீதாராம்.🙏


Comments

Popular posts from this blog

நான் கிட்டத்தட்ட 22 வயது வரை நாத்திகனாக இருந்தேன். கோவில்களுக்குச் செல்வது பிடிக்க வில்லை. நான் அவற்றை பிராமணர்கள் மற்றும் பிறர் பணம் சம்பாதிக்கும் இயந்திரங்களாகவே கருதினேன். ஒவ்வொரு அடியிலும் அவர்கள் எப்படி பணம் கேட்டார்கள் என்பதை நான் வெறுத்தேன்.

8th August 11am, Delhi: MAHA PANCHAYAT- 100Cr HINDU Movement for Abolition of totally Discrminatory HR&CE Act.1951, all over India. Temples should function as independently as MOSQUES & CHURCHES. Money taken/swindled should be given back by Govts.

1961 ஆம் வருடம் வெளிவந்த தேன்நிலவு படத்தில் உள்ள பாட்டு பாடவா என்ற மிக இனிய பாடல்... ஜெமினி கணேசன் வைஜெயந்தி மாலா நடித்த பாடல்.... அவ்வளவு இனிமையான பாடல்... ஆனால் படத்தில் பார்த்தால் இரண்டு பேரும் குதிரை மேல் உட்கார்ந்து கொண்டு மெல்ல குதிரை ஓட்டிக்கொண்டு செல்வார்கள்... ஆனால் இந்த காலத்து பசங்களும் அந்த பாட்டுக்கு கலக்கலாக நடனமாடி விட்டார்கள்... சில பல சாட்களை நான் இங்கே பப்ளிஷ் செய்துள்ளேன் பாருங்கள்... அந்தப் பாடலில் நடித்த வைஜெயந்திமாலா அப்போது எவ்வளவு அழகாக இருந்துள்ளார் பாருங்கள் மேலே போட்டோக்களை பார்க்கவும்