ஒரு நாள் மாடுகளை வெட்டும் இடத்தில் ஒருவன் பசுவை வெட்டுவதற்கு வந்தவுடன் அந்தப் பசு அவனை பார்த்து சிரித்தது

 


🙏 _*கோமாதாவின் கடனைத் தீர்ப்போம் !*_🙏

_*ஒரு நாள் மாடுகளை வெட்டும்  இடத்தில் ஒருவன் பசுவை வெட்டுவதற்கு   வந்தவுடன் அந்தப் பசு அவனை பார்த்து சிரித்தது.*_

_*அதற்கு, அந்தப் பசுவைப் பார்த்து  -  நான் உன்னை  வெட்ட வந்துள்ளேன், அது தெரிந்தும் கூட நீ எதற்காக சிரிக்கின்றாய் ? என்று கேட்டான்.*_

_*அப்பொழுது, அந்தப் பசு , நான்  ஒருபோதும் மாமிசத்தை உண்டதில்லை. ஆனாலும் என் மரணம் மிகவும் கோரமாக இருக்கப் போகிறது. எந்தத் தப்பும் செய்யாமல், யாருக்கும் எத்தகைய ஆபத்தையும் விளைவிக்காத என்னை, நீ கொன்று, என் மாமிசத்தை சாப்பிடும் உன் மரணம் எவ்வளவு கோரமாக இருக்குமோ என்று நினைத்துத் தான் சிரித்தேன் என்று சொன்னது !*_

_*பால் கொடுத்து உங்களை வளர்த்தேன். உங்கள் பிள்ளைளுக்கு பால் கொடுக்கிறேன்.   ஆனால் நான் சாப்பிடுவது புல்லை மட்டுமே ! பாலிலிருந்து வெண்ணை எடுத்தீர்கள். வெண்ணையிலிருந்து நெய்யை எடுத்தீர்கள்  ! என்னுடைய சாணத்தினால் வறட்டி செய்து சமையலுக்கு உபயோகித்தீர்கள். அதே போல் என்னுடைய சாணத்தினால் எருவினை தயார் செய்து விவசாயத்திற்கு பயன்படுத்தீனீர்கள். அந்த பணத்தினால் இன்பமான் வாழ்க்கையை வாழ்கிறீர்கள். ஆனால் எனக்கு மட்டும் அழுகிப் போன காய்றிளையும் காய்ந்து போன புல்லையும் தந்தீர்கள். என்னுடைய சாணத்தினால் கோபர் கேஸ் தயார் செய்து கொண்டு உங்கள் வீட்டை இருட்டிலிருந்து வெளிச்சத்திற்கு கொண்டு வந்தீர்கள். ஆனால் என்னை கசாப்புக் காரனாய்  கொல்ல வந்திருக்கிறாய்  என்னுடைய பாலிலிருந்து கிடைத்த சக்தியினால் தான் என்னை கொல்ல உன்னால் ஆயுதத்தை தூக்க முடிந்தது. அந்த ஆயுதத்தை தூக்கும் சக்தி உனக்கு கிடைத்தது என்னால் தான். என் மூலம் நிறைய சம்பாதித்து வீட்டை கட்டிக் கொண்டாய். ஆனால் என்னை மட்டும் ஒரு குடிசையில் வைத்தாய். உன்னை பெற்ற தாயை விட மேலாக உனக்கு அண்டையாக இருந்தேன். ஸ்ரீக்ருஷ்ண பகவானிற்கு ப்ரீதியானவள் நான். எனக்கு இவ்வளவு பெரிய தண்டனை கொடுக்கும் உன் கதி என்னவாகும்? உன் வருங்காலத்தை குறித்து நினைத்து  சிரித்தேன் என்று அந்தக் கோமாதா சொன்னது !*_


🙏 _*உங்களால் முடிந்த அளவு இதை எல்லோருக்கும் பகிர்ந்து கோமாதாவின் ருணத்தை (கடனை) த் தீர்த்து கொள்ளவும் !*_🙏


Comments

Popular posts from this blog

*RSS ப்ரார்தனா - RSS Prayer* *தமிழ் ஸ்லோகம் - தமிழ் மொழிபெயர்ப்பு* *நமஸ்தே ஸதா வத்ஸலே மாத்ரு பூமே* அன்பு காட்டும் தாய் நாடே! உன்னை நான் எப்பொழுதும் வணங்குகிறேன்🔥🙏🪷

*TENT DECOR CATERING EXPO 2024* - 4,5,6-Oct-2024 - Chennai Trade Centre, Nandambakkam Chennai

எனது பாட்டி -விஜயா பாரதி மகாகவி பாரதியின் பெயர்த்தியான திருமதி. விஜயா பாரதி, கனடாவில் வசிக்கிறார். பாரதியின் புகழ் பரப்பும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் அன்னாரது கட்டுரை இது... உங்களுக்கு என் தாத்தா பாரதியை நன்கு தெரிந்திருக்கலாம். அவரின் இறுதிக் காலத்தைப் பற்றி பலர் எழுதி இருக்கிறார்கள். ஆனால் என் பாட்டி செல்லம்மாள், என் தாத்தாவின் மரணத்துக்குப் பிறகு எப்படி வாழ்ந்தார், மறைந்தார் என்பது பலருக்கும் தெரியாது