தடுப்பூசி போட்டால் மரணம் நிகழ்கிறது என பல பொய் பரப்புரைகளை கேள்விப்பட்டு இருப்பீர்கள். அது எப்படி சொல்வாங்க என்றால் எனக்கு தெரிந்த ஒருவர் அவருக்கு தெரிந்த ஒருவருடைய நண்பருடைய உறவினருக்கு தெரிந்தவர் சொன்னார் என சொல்லுவார்கள். நேரிடையாக பார்த்தவர்கள் இருக்கமாட்டார்கள்.

 




தடுப்பூசி போட்டால் மரணம் எனும் பொய் பரப்புரையை எப்படி புரிந்துகொள்வது? அப்படி நடக்கிறதா என எப்படி கண்டுபிடிப்பது? 


தடுப்பூசி போட்டால் மரணம் நிகழ்கிறது என பல பொய் பரப்புரைகளை கேள்விப்பட்டு இருப்பீர்கள். அது எப்படி சொல்வாங்க என்றால் எனக்கு தெரிந்த ஒருவர் அவருக்கு தெரிந்த ஒருவருடைய நண்பருடைய உறவினருக்கு தெரிந்தவர் சொன்னார் என சொல்லுவார்கள். நேரிடையாக பார்த்தவர்கள் இருக்கமாட்டார்கள். 


இது பொய்யா உண்மையா என்பதை கணிதம் மூலம் எளிமையாக கண்டுபிடிக்கலாம். 


நாட்டிலே இதுவரை 15 கோடிப்பேருக்கு மேல் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. நம்மோட கணக்குக்கு 15 கோடி என வைத்துக்கொள்வோம். 


இப்போ இந்த தடுப்பூசியிலே எவ்வளவு பேர் பாதிக்கப்பட்டிருக்கலாம் என ஒரு கணக்கு போடுவோம். 


தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களிலே 

நூறிலே ஒருவருக்கு பாதிப்பு, அதாவது ஒரு சதவீதம் அப்படீன்னா 15 கோடியில் 15 லட்சம் பேர் இறந்திருக்கவேண்டும். 

ஆயிரத்திலே ஒருவருக்கு பாதிப்பு என்றால் 0.1% அப்படீன்னா 15 கோடியிலே 1.5 லட்சம் பேர் இறந்திருக்கவேண்டும்.

பத்தாயிரத்திலே ஒருவருக்கு பாதிப்பு என்றால் 0.01% அப்படீன்னா 15 கோடியிலே பதினந்து ஆயிரம் பேர் இறந்திருக்கவேண்டும். 

லட்சத்திலே ஒருவருக்கு பாதிப்பு என்றால் 0.001% அப்படீன்னா 15 கோடியிலே ஆயிரத்து ஐநூறு பேர் இறந்திருக்கவேண்டும். 


ஏப்ரல் வரை 180 பேர் இறந்திருப்பதாக தகவல்கள் சொல்லுகின்றன. இது கோவிட் ஊசி போட்டுகொண்ட பின்பு இறந்தவர்கள் அனைவருமே. அவர்களுக்கு என்ன நடந்தது? என்ன வியாதி இருந்தது என ஏதும் தகவல் இல்லை. அதை விசாரித்து வருகிறார்கள். வாகன விபத்திலே இறந்திருந்தாலும் இந்த கணக்கிலே எழுதிவிடுவார்கள் என்பதையும் புரிந்துகொள்ளவும். 


இது இரண்டு மடங்கு என கொண்டாலும் 400 வரலாம். நான்கு மடங்கு என கொண்டாலும் 800 பேர் வரலாம். 


ஆனால் இங்கே பேசிக்கொள்வது போல ஊசி போட்டுக்கொள்ளும் நபர்களிலே ஆயிரத்திலே ஒருவருக்கு பாதிப்பு என்றால் கூட ஒன்றரை லட்சம் பேருக்கு பாதிப்பு வந்திருக்கவேண்டும் அல்லது இறந்திருக்கவேண்டும். 


அது எவ்வளவு பெரிய விஷயமாக ஆகியிருக்கும். ஏன் ஊசிபோட்டுக்கொண்ட பத்தாயிரம் பேரிலே ஒருவர் இறக்கின்றார் என வைத்துகொண்டால் கூட பதினைந்து ஆயிரம் பேர் இறந்திருக்கவேண்டும் அல்லவா? 


அப்படி ஏதும் நடந்திருக்கீறதா? கிடையாது. 


ஆனால் இந்த அரசாங்கம் சொல்லும் கணக்கு தப்பா இருந்தால், ஊசி போட்டுக்கொண்டவர்கள் இறந்ததை மூடி மறைத்தால் என்ன செய்வது? 


இதையும் கணக்குப்போட்டே கண்டுபிடித்துவிடலாம். 


கொரோனாவுக்கு முன்னால் சராசரியாக இறப்பு விகிதத்தை நகரம் வாரியாக, மாவட்டம் வாரியாக ஒரு குத்து மதிப்பாககூட எடுக்கமுடியும். 


அதையும் இப்போது கொரோனோ காலகட்டத்திலே நடக்கும் இறப்புகளோடு ஒப்பிட்டு பார்த்தால் தெரிந்துவிடபோகிறது? 

சுடுகாட்டிலேயும் இடுகாட்டிலேயும் என்ன நடக்கிறது என பார்த்தால் போதுமே? 


அரசின் கணக்கீட்டிலே கொஞ்சம் தவறலாம். நடப்பதை பாதியாக கூட குறைத்து சொல்லலாம். நூறு பேருக்கு பாதிப்பு என்றால் 50 பேருக்கு என கணக்கு காட்டலாம். 


ஆனால் ஆயிரம் பேருக்கு பாதிப்பு என்றால் 50 பேர் என கணக்கு காட்ட முடியுமா? முடியாதே? 


இந்த கணக்கிலே இருந்து நமக்கு தெரிவது என்ன? 


தடுப்பூசி போட்டுக்கொண்ட லட்சத்திலே ஒருவருக்கு கூட தடுப்பூசியால் மரணம் என்பது நிகழவில்லை.

தடுப்பூசி போட்டுக்கொண்ட பின்னர் இறந்தவர்களின் மரணத்திற்கான காரணிகள் அலசி ஆராயப்பட்டு வருகிறது. எனவே முழு முடிவுகள் வந்தபின்பு என்ன காரணம் என தெரியவரும். பல காலம் நோய்வாய்ப்பட்டவர்கள், வாகன விபத்திலே இறந்தவர்கள் என்றெல்லாம் இருப்பதால் முழு ஆராய்ச்சிக்கு பின்பே தெரியவரும். 


எனவே தடுப்பூசி பாதுகாப்பானது. உங்கள் முறை வரும்போது போட்டுக்கொள்ளுங்கள். 


தடுப்பூசி கிடைப்பதில்லை என சொல்லவேண்டியதில்லை. மாதத்திற்கு 3 கோடி தடுப்பூசிகள் எனும் அளவிலே தயாரிப்புகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. 


பதிவர் - ராஜசங்கர் விஸ்வநாதன்


Comments

Popular posts from this blog

நான் கிட்டத்தட்ட 22 வயது வரை நாத்திகனாக இருந்தேன். கோவில்களுக்குச் செல்வது பிடிக்க வில்லை. நான் அவற்றை பிராமணர்கள் மற்றும் பிறர் பணம் சம்பாதிக்கும் இயந்திரங்களாகவே கருதினேன். ஒவ்வொரு அடியிலும் அவர்கள் எப்படி பணம் கேட்டார்கள் என்பதை நான் வெறுத்தேன்.

8th August 11am, Delhi: MAHA PANCHAYAT- 100Cr HINDU Movement for Abolition of totally Discrminatory HR&CE Act.1951, all over India. Temples should function as independently as MOSQUES & CHURCHES. Money taken/swindled should be given back by Govts.

1961 ஆம் வருடம் வெளிவந்த தேன்நிலவு படத்தில் உள்ள பாட்டு பாடவா என்ற மிக இனிய பாடல்... ஜெமினி கணேசன் வைஜெயந்தி மாலா நடித்த பாடல்.... அவ்வளவு இனிமையான பாடல்... ஆனால் படத்தில் பார்த்தால் இரண்டு பேரும் குதிரை மேல் உட்கார்ந்து கொண்டு மெல்ல குதிரை ஓட்டிக்கொண்டு செல்வார்கள்... ஆனால் இந்த காலத்து பசங்களும் அந்த பாட்டுக்கு கலக்கலாக நடனமாடி விட்டார்கள்... சில பல சாட்களை நான் இங்கே பப்ளிஷ் செய்துள்ளேன் பாருங்கள்... அந்தப் பாடலில் நடித்த வைஜெயந்திமாலா அப்போது எவ்வளவு அழகாக இருந்துள்ளார் பாருங்கள் மேலே போட்டோக்களை பார்க்கவும்