சேலம் கோட்டை மாரியம்மன் திருக்கோயில் சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்பு சேர நாட்டைச் சேர்ந்த சிற்றரசர்கள் ஆண்ட காலத்தில் இப்போது கோட்டை என்று சொல்லும் இடத்தில் ஒரு கோட்டை அமைத்து ஆட்சி செய்தபோது இந்த மாரியம்மன் கோயிலையும், ஒரு பெருமாள் கோயிலையும் அமைத்தார்கள்.

 


சேலம் கோட்டை மாரியம்மன் கோவில்......


எட்டுப்பேட்டைகளைக் கட்டியாளும் அன்னை கோட்டை மாரி” என்ற சிறப்புப் பெயரும் உண்டு.


சேலம் கோட்டை மாரியம்மன் திருக்கோயில் சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்பு சேர நாட்டைச் சேர்ந்த சிற்றரசர்கள் ஆண்ட காலத்தில் இப்போது கோட்டை என்று சொல்லும் இடத்தில் ஒரு கோட்டை அமைத்து ஆட்சி செய்தபோது இந்த மாரியம்மன் கோயிலையும், ஒரு பெருமாள் கோயிலையும் அமைத்தார்கள்.


இந்த அம்மன் கோயிலை கோட்டை வீரர்கள் எல்லாம் ஒரு காவல் தெய்வமாக வணங்கி வழிபட்டு வந்தார்கள். கோட்டையில் இருந்த வீரர்களுக்கு மாரி காவல் தெய்வமாக இருந்திருக்கிறாள். ஆனால் இன்று அந்த கோட்டை இல்லை. கோட்டை இருந்ததற்கு அடையாளமாக கோட்டைமேடு என்ற பகுதி மட்டுமே இன்று உள்ளது.


கோட்டை மாரியம்மன் குறித்துத் தெரிந்து கொள்ளும் முன், இந்த 7 மாரியம்மன்களை


அம்மாப்பேட்டை, மாரியம்மன்


செவ்வாய்ப்பேட்டை, மாரியம்மன்


சஞ்சீவிராயன்பேட்டை, மாரியம்மன்


சின்னக் கடைவீதி, சின்னமாரியம்மன்


குகை, மாரியம்மன்


அன்னதானப்பட்டி, மாரியம்மன்


பொன்னம்மாப்பேட்டை, மாரியம்மன்


இந்த எட்டு மாரியம்மன்களில் கோட்டை மாரியம்மன் தான் சக்தி வாய்ந்த அம்மன் என்பது நம்பிக்கை. இதனாலேயே கோட்டை பெரிய மாரியம்மன் என்று பக்தர்களால் அழைக்கப்படுகின்றது. சேலத்தில் உள்ள எட்டு மாரியம்மன்களுக்கும் தலைமையாக விளங்குவதால் “எட்டுப்பேட்டைகளைக் கட்டியாளும் அன்னை கோட்டை மாரி” என்ற சிறப்புப் பெயரும் உண்டு.


அம்மன் ஈசாணி மூலையை பார்த்தபடி உள்ளது 


தமிழ்நாட்டிலேயே சிறிய கருவறை உள்ள அம்மன் கோயில் இதுவாகத்தான் இருக்கும் .எவ்வளவு பெரிய அந்தஸ்து உள்ளவர்களும் குனிந்து மண்டியிட்டு தலை வணங்கி கும்பிடவேண்டும் என்பதற்காக இவ்வாறு இருப்பதாக கூறப்படுகிறது.


மற்ற அம்பாள் தலங்களில் மனித தலை இருப்பது போல் அல்லாமல் இந்த அம்மனின் காலடியில் தாமரை மொட்டு உள்ளது.


நைவேத்தியம் படைக்கப்படுவதில்லை. மாறாக இத்தலத்தில் எடுத்து அம்பாளுக்கு ஊட்டியே விடப்படுகிறது என்பது சிறப்பம்சம்.


சேலம் மாநகரின் மத்தியில் பெரிய கோபுரம் உள்ள இந்தக் கோயிலுக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் தினமும் வருகை தருகிறார்கள்.


இந்த திருக்கோவில் மணிமுத்தாறு நதிகரையில் அமைத்துள்ளது,கோட்டைமாரியம்மன் அக்னி திசையை நோக்கியவாறு வலது மேல்கரத்தில் நாகபாசமும் உடுக்கையும் கொண்டு, இடது மேல்கரத்தில் அங்குசமும் அமுத சின்னமும் கொண்டு வலது முன்கரத்தில் சூலமும் இடது முன்கரத்தில் கபாலமும் கொண்டு காட்சிதருகிறாள்..


ஆடி மாதத்தில் அம்மனுக்கு பூச்சாட்டலுடன் விழா தொடங்கி 22 நாட்கள் நடைபெறும். இங்கு அம்மனுக்கு பூச்சாட்டப்பட்ட பூ கொண்டே மற்ற அம்மன் கோவிலில் பூச்சாட்டல் நடைபெறுவது வழக்கம்..


பண்டிகையின் போது கோட்டை பெருமாள் கோவிலில் இருந்து தங்கையான கோட்டை மாரியம்மனுக்கு சீர்வரிசை வருகிறது..


மண் உரு சாத்துதல்...


அம்மை நோய் கண்டவர்கள் அம்மனின் தீர்த்தத்தை வாங்கிச் சென்று நோய் குணமான பின்பு நேர்த்திக்கடனாக பொம்மை உருவங்களை தம் தலை மீது சுமந்து கொண்டு கோயிலை மூன்று முறை வலம் வர வேண்டும். 


கண்ணடக்கம் சாத்துதல்...


கண்ணில் பூ விழுந்தாலோ அல்லது வேறு சில நோய்கள் ஏற்பட்டாலோ அம்மனிடம் வேண்டிக்கொண்டால் குணமடையும். நேர்த்திக்கடனாக அம்மனுக்கு பொன்னாலோ அல்லது வெள்ளியாலோ தகடுகளாலோ கண்ணடக்கம் செய்து அம்மனுக்கு சாத்துவர்.


உருவாரம் சாத்துதல்....


நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அம்மனை வேண்டிக்கொண்டு குணமாகிய பின்பு நோயின் காரணமாக எந்த பகுதி பாதிக்கப்பட்டதோ அதே போன்ற உருவ பொம்மையை காணிக்கையாக அளிப்பர்.


அடியளந்து கொடுத்தல்......


பக்தர்கள் தங்கள் வேண்டுதல் நிறைவேற ஒவ்வொரு அடியாக எடுத்து வைத்து மூன்று முறை திருக்கோயிலை சுற்றி வருகின்றனர்.இதற்கு அடியளந்து கொடுத்தல் என்று பெயர்.


உப்பு மிளகு போடுதல்......


பக்தர்கள் தங்களுக்கு ஏற்பட்ட குறையோ அல்லது நோயோ நீங்கிட வேண்டும் என்று வேண்டிக்கொண்டவர்கள் குங்குமம் கலந்த உப்பை பலிபீடத்தின் மீது போட்டு நீர் ஊற்றுவார்கள்.நீருடன் கலந்து உப்பு எவ்வாறு கறைந்து விடுகிறதோ அதேபோன்று நோயும் நீங்கிவிடுவதாக ஐதீகம்.


இத்தலத்தில் வழிபட்டால் கல்யாணபாக்கியம்,குழந்தை பாக்கியம் கைகூடுகிறது


பூப்போட்டுப் பார்த்தல்


இத்திருக்கோயிலில் பூப்போட்டு கேட்டல் பிரசித்த மானது. குடும்பத்தில் சிக்கல் தீர, திருமணம் நடைபெற, நோய் தீர, உத்தியோகம் கிடைக்க...இப்படி தங்கள் பல்வேறு பிரச்சினைகளைத் தீர்க்க பக்தர்கள் வெள்ளை , சிவப்பு நிறங்களில் உள்ள பூக்களை தனித்தனி பொட்டலங்களில் கட்டி அம்மன் திருவடிகளில் வைத்து எடுப்பார்கள். தாம் நினைத்த நிறப் பூ வந்து விட்டால் தாம் எண்ணி வந்த செயல்கள் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.


ஆடித்திருவிழா....


இது இத்தலத்தின் மிகப்பெரிய விழா ஆகும்,இவ்விழாவின் போது பூச்சாட்டுதல் என்னும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.இந்த பூச்சாட்டுதலின் போது சேலத்தில் உள்ள ஏனைய ஏழு மாரியம்மன் திருக்கோயில்களுக்கும் இங்கிருந்துதான் பூ எடுத்துச் சென்று பிற மாரியம்மன் திருக்கோயில்களில் பூச்சாட்டுதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.இது தொன்று தொட்டு வரும் நிகழ்ச்சி ஆகும்.இத்திருவிழா மொத்தம் 15 நாட்கள் நடைபெறும்.பூச்சாட்டுதல், கம்பம் நடுதல், சக்தி அழைப்பு, சக்தி கரகம், உருளுதண்டம், பொங்கலிடுதல், மகா அபிசேகம் ஆகியவை முக்கிய அம்சங்கள் ஆகும்.இவ்விழாவின்போது 7லட்சம் பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வணங்குவது பிரம்மாண்டமான காட்சி ஆகும்.அம்மன் அருள் பெறும் வகையில் அரசு ஆண்டு தோறும் ஆடிமாதம் மூன்றாம் செவ்வாய்க்கிழமைக்கு மறுநாள் உள்ளூர் விடுமுறை அறிவிக்கிறது.


இவை தவிர இத்திருக்கோயிலில் விநாயகர் சதுர்த்தி, நவராத்திரி, தீபாவளி, திருக்கார்த்திகை, தைப்பொங்கல், மகாசிவராத்திரி, தமிழ் ஆங்கில வருடப்பிறப்பு ஆகிய விசேச தினங்களில் அம்மனுக்கு சிறப்பு அபிசேக அர்ச்சனைகளை ஆயிரக்கணக்கான பக்தர்கள் செய்கின்றனர்.


 

நன்றி : சேலம் மணி.


Comments

Popular posts from this blog

நான் கிட்டத்தட்ட 22 வயது வரை நாத்திகனாக இருந்தேன். கோவில்களுக்குச் செல்வது பிடிக்க வில்லை. நான் அவற்றை பிராமணர்கள் மற்றும் பிறர் பணம் சம்பாதிக்கும் இயந்திரங்களாகவே கருதினேன். ஒவ்வொரு அடியிலும் அவர்கள் எப்படி பணம் கேட்டார்கள் என்பதை நான் வெறுத்தேன்.

8th August 11am, Delhi: MAHA PANCHAYAT- 100Cr HINDU Movement for Abolition of totally Discrminatory HR&CE Act.1951, all over India. Temples should function as independently as MOSQUES & CHURCHES. Money taken/swindled should be given back by Govts.

1961 ஆம் வருடம் வெளிவந்த தேன்நிலவு படத்தில் உள்ள பாட்டு பாடவா என்ற மிக இனிய பாடல்... ஜெமினி கணேசன் வைஜெயந்தி மாலா நடித்த பாடல்.... அவ்வளவு இனிமையான பாடல்... ஆனால் படத்தில் பார்த்தால் இரண்டு பேரும் குதிரை மேல் உட்கார்ந்து கொண்டு மெல்ல குதிரை ஓட்டிக்கொண்டு செல்வார்கள்... ஆனால் இந்த காலத்து பசங்களும் அந்த பாட்டுக்கு கலக்கலாக நடனமாடி விட்டார்கள்... சில பல சாட்களை நான் இங்கே பப்ளிஷ் செய்துள்ளேன் பாருங்கள்... அந்தப் பாடலில் நடித்த வைஜெயந்திமாலா அப்போது எவ்வளவு அழகாக இருந்துள்ளார் பாருங்கள் மேலே போட்டோக்களை பார்க்கவும்