மோடியின் பின்னால் கைகோர்ப்போம், இந்தியாவை கரை சேர்ப்போம்!

 










M DEEPAK KUMARAN:

இந்தியாவின் வளர்ச்சியை புரிந்துகொள்ள தெரியாத கண்ணிருந்தும் குருடர்கள், காதிருந்தும் செவிடர்கள்! 


இன்றும் இந்தியாவை பாகிஸ்தானோடும், இலங்கையோடும் ஒப்பீடு செய்பவர்களுக்கு , உலகத்தின் பெரிய அண்ணன் அமெரிக்க ஜனாதிபதியே மருந்து மாஃபியா எனும் Pharmaceutical Mafia வின் கரங்களுக்குள் ஒடுங்கி போய்விட்டார்கள்.


6.5 டிரில்லியன் $ வர்த்தகத்தில் இயங்கும் அந்த மாபெரும் சக்தியின் கொரானா மருத்துவத்தால் எதிர்பார்க்கப்பட்ட வருமானம் மட்டும் குறைந்த பட்சம் 1.5 டிரில்லியன் $. அப்படிப்பட்டவர்கள் ஏதோ மாத்திரை, மருந்து விற்பது மட்டுமல்ல அவர்கள் புதிய நோயினை தோற்று விற்கக்கூடியவர்கள்.


கொரானாவின் ஆரம்பமே ஒரு Biological Research Lab லிருந்து ஏற்பட்ட விபத்து என்று சந்தேகிக்கப்பட்டாலும் அதன் பிண்ணனியில் இருக்கும் மர்மங்கள் ஒரு தொடர்கதை. அந்த ஆராய்ச்சி மையம் சீனாவில் இருந்தாலும் அது அமெரிக்காவின் Pfizer நிறுவனத்திற்கு சொந்தமானது என்கிறார்கள். அது மட்டுமல்ல இன்று அதற்கான தடுப்பு மருந்தை தயாரித்த அத்தனை  நிறுவனங்களும் Pfizer உடன் சம்பந்தப்பட்டது என்று ஆணித்தரமாக சொல்கிறார்கள். 


உலகம் முழுவதும் கொரானாவல் முடங்கிப்போய் கிடக்க சில நூறு மைல்களுக்கு அப்பால் இருக்கும் சீனத்தலை நகரிலும், அதன் வர்த்தக தலைநகரிலும் பாதிப்பு இல்லை என்பது எவ்வளவு ஆச்சர்யம்! அது மட்டுமல்ல ஒரு சீன கம்யூனிச அரசின்னல் உயர் அதிகாரிகூட பாதிக்கப்படவில்லை என்பது ஆச்சர்யத்திலும் ஆச்சர்யம் அல்லவா? அவர்கள் தயாரித்த வைரஸுக்கு, வடிகால் தேட அவர்களுக்கு தெரியாதா?


அது சரி, அமெரிக்க ஜனாதிபதியே அவர்கள் கைக்குள் இருக்கிறார்கள் என்பது எந்த வகையில் உண்மை?


அக்டோபர்  இரண்டாம் வாரம் வரை முண்ணனியில் இருந்த ட்ரம்ப், ஏன் பத்திரிக்கைகளின் கணிப்பில் ஏன் சறுக்கினார்? 


மருந்துலகின் கட்டுப்பாட்டில் கட்டுபடாத அவர் சீன வைரஸ் என்றும், மீண்டும் ஆட்சிக்கு வந்தபின் சீனாவை உலகத்தின் முன் நிறுத்துவோம் என்று சொன்ன ட்ரம்ப், அப்படி சீனாவை முன்னால் நிறுத்தினால் அது கைகாட்டப்படும் இடம் மீண்டும் அமெரிக்க மருந்துலகமாகத்தானே இருக்கும். அது மட்டுமல்ல இதுவரை எந்த ஜனாதிபதியும் எதிர்க்காத அளவிற்கு பத்திரிக்கைகளை கடுமையாக விமர்சித்தவர் ட்ரம்ப்.  விளைவு, இந்த மருந்துலக மாஃபியா, பத்திரிக்கை உலகம், அதன் பின்னால் நிற்கும் சீனா மூன்றும் கை கோர்த்தது ட்ரம்பை காலி செய்தார்கள். 


அப்பேர்பட்ட ஒரு உலகத்தின் மிக சக்தி வாய்ந்த ஒரு அரக்கனை மோடி எதிர்க்கிறார் என்றால் அவரை சும்மா விடுவார்களா இந்த மாஃபியா சக்தி?!?


அவர்கள் ஏன் மோடியை எதிர்க்க வேண்டும்?


கொரானாவால் பாதிக்கப்பட்ட இந்த உலகை மீண்டும் நிமிர்த்த குறைந்த பட்ச தடுப்பூசி விற்பனை 1.5 டிரில்லியன் $ ஆக அதை மாஃபியா நிர்ணயித்து அதற்காக காத்திருந்தது. அதாவது இதே மருந்துலக மாஃபியாதான் இந்த வைரஸுக்கு காரணம், அவர்களே மருந்தும் தயாரித்து விற்பார்கள். அந்த வைரஸ்களை வளர்த்தவர்கள் எங்களைத்தவிர யாருக்கும் அதை அழிக்கும் மருந்து கண்டு பிடிக்க முடியாது என்று நினைத்திருந்த அவர்கள், அவர்கள் தயாரிக்கும் அந்த தடுப்பூசி ஒன்றின் விலை குறைந்த பட்சம் $40 (₹2800) என்று கணித்திருந்த மாஃபியாவின் வாயில் மண்ணள்ளிப்போட்டது இந்தியாவின் எதிர்பாராத தடுப்பூசி கோவேக்ஸின். ஆம் அது வெறும் $3 எனும்போது அது கோபப்படத்தானே செய்யும். அது மட்டுமல்ல அதன் ஆராய்ச்சியில் 2DG என்ற மருந்தையும் இந்தியா தயாரித்தது. இது போன்ற ஆராய்ச்சிகள் கடந்த காலத்திலும் நடப்பது உண்டு. ஆனால் அவர்களை இந்த மாஃபியாக்கள் இந்தியாவின் கறைபடிந்த ஆட்சியாளர்கள் மூலம் அதற்கு நிதி ஒதுக்கீடு போன்ற பல குறுக்கீடுகளை செய்து அதை தடுத்து விடுவார்கள். ஆனால் இன்று இந்தியாவின் நலனை மட்டும் கவனத்தில் வைத்திருக்கும் மோடி அவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்துகொடுத்து அந்த மருந்தை வெற்றிகரமாக தயாரித்தது. அதுதான் அவர்களுக்கு மிகப்பெரிய எரிச்சல் மட்டுமல்ல அவர்கள் டிரில்லியன் $ பிஸினசில் ஏற்படுத்திய மிகப்பெரிய அ தாக்கம் சும்மா விடுமா? 


அது மட்டுமல்ல இன்று அமெரிக்காவில் ஃப்ளூ ஜூரம் என்று வருடா வருடம் தடுப்பூசிகளை மக்களை பயமுறுத்தி வியாபாரம் செய்த அவர்கள் கொரானா மூலம் அதை உலக வர்த்தகம ஆக்க நினைத்தது. அதாவது உறுமாற்றம் பெரும் கொரானாவை தடுக்க இந்த தடுப்பூசி மட்டுமல்ல ஒவ்வொரு வருடமும் தடுப்பூசி போடவேண்டும் என்ற நிலையை ஏற்படுத்த நினைத்து திட்டமிட்டிருந்தது.


அதற்கு பிரச்சினை என்றால் என்னவாகும்?விளைவு அவர்கள் இன்றய கை கோர்த்திருப்பது இந்தியாவின் எதிரி சீனா, உலக மீடியா, இந்திய மீடியா, விலை போன எதிர்கட்சிகள் என்று இந்தியாவின் துரோகிகளின் எண்ணிக்கை கூடிக்கொண்டே போகிறது. அத்தோடு மக்களை இந்த அரசுக்கு எதிராக திசை திருப்பவது அவர்கள் நோக்கம். 


உலகத்தின் சாஃப்ட்வேர் என்பதே இந்தியர்கள் இல்லாமல் இல்லை எனும்போது நம்மால் ஒரு சக்திவாய்ந்த சாஃப்ட்வேரைக்கூட தயாரிக்க முடியவில்லை என்று காலகாலமாக வருந்தும் நாம், அதற்கு காரணம் தெரியாதவர்களாக இருக்கிறோம். நம் அறிஞர்கள், இளைஞர்கள் காரணமல்ல, அதை செய்ய முயலும் ஒவ்வொருவரையும் ஆரம்பத்திலேயே நம் கறைபடிந்த அரசாங்கத்தின் மூலமே கிள்ளி எறிந்துவிடுகிறது மேற்கத்திய அரசாங்கம் என்பதை நாம் புரிந்து கொள்வதில்லை. இது சாஃப்ட்வேருக்கு மட்டுமல்ல  ஒவ்வொரு தொழில்களுக்கும் மிகப்பொருந்தும். மோடி ஆட்சிக்கு வந்தபின் நம் நாடு இன்று சுய சார்பு நிலையை நோக்கி செல்ல, வெறும் அரசாங்கத்தின் பாலிஸி மட்டுமல்ல நம் அரசாங்கமும் அதற்கு பக்க பலமாக உள்ளது என்பதை புரிந்து கொள்ளுங்கள். 


அப்படி அமெரிக்க ஜனாதிபதியையே புரட்டிப்போட்ட அந்த சக்தி மோடியை சும்மா விடுமா? அடுத்த வல்லரசு நாந்தான் என்று கனவு கொண்டிருந்த சீனா சும்மா விடுமா?


மேற்கத்திய மீடியாக்கள் இந்தியாவின் மருந்து தரமற்றது என்று அதை தடுக்க நினைத்தது. இது நடக்கும் என்று முன்னரே எதிர்பார்த்த  இந்தியா, அதற்காக நம் தடுப்பூசியை மற்ற நாடுகளுக்கு கொடுத்து அதை சிறப்பானது என்று நிரூபித்தது. வாயடைத்துப்போன மீடியா இன்று இந்தியாவில் ஆக்ஸிஜன் இல்லை என்று எதிர்கட்சிகள், இந்திய மீடியா, சோஷியல் மீடியா என்று எல்லாம் ஒருசேர ஆர்ப்பரித்தது. நீதித்துறையில் இருந்த கறுப்பு ஆடுகள் கூட கத்தியது. அதை சரி செய்ததும் இந்தியா முழுவதும் பிணங்கள் என்று ஒப்பாரி.. இது மட்டுமா, இன்னும் பார்க்கவேண்டியது பல உள்ளன. ஆனால் மக்களாகிய நாம் இன்னுமொரு சுதந்திர போராட்டாதிற்கு போராட வேண்டியதில்லை, திறமையான தலைமை இன்று இந்தியாவை ஆள்கிறது. அதன் பின் நிற்போம். மீடியாவை புறக்கணிப்போம். 


இதனை உணர்ந்து செயல்பட்டால் G7 இன்று G11 ஆகி இந்தியாவின் எல்லை விரிந்தது போல நம் வல்லரசை நோக்கிய பயணமும் எளிதாக நிஜமாகும். 


இதை தடுக்க பெட்ரோல் விலையை காரணம், தடுப்பூசியை காட்டுவார்கள், அது கட்டுப்படுத்த தெரியாத அரசல்ல இது, அதைத்தாண்டி எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு நம்மை மாற்றி பெட்ரோலுக்காக நாம் கொடுக்கும் அன்னிய செலவானியை வருங்காலத்தில் தடுக்க  நீண்டகால நோக்கில் கொண்டுவரப்படும் மிகப்பெரிய யுக்திகள் அவை. அதனால் இன்று நமக்கு வலிகள் இருக்கும் ஆனால் எதிர்காலத்தில் அதன் பயனை அனுபவிக்கும்போது அதன் அர்த்தம் புரியும். 


மோடியின் பின்னால்

கைகோர்ப்போம், இந்தியாவை கரை சேர்ப்போம்!


Comments

Popular posts from this blog

எனது பாட்டி -விஜயா பாரதி மகாகவி பாரதியின் பெயர்த்தியான திருமதி. விஜயா பாரதி, கனடாவில் வசிக்கிறார். பாரதியின் புகழ் பரப்பும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் அன்னாரது கட்டுரை இது... உங்களுக்கு என் தாத்தா பாரதியை நன்கு தெரிந்திருக்கலாம். அவரின் இறுதிக் காலத்தைப் பற்றி பலர் எழுதி இருக்கிறார்கள். ஆனால் என் பாட்டி செல்லம்மாள், என் தாத்தாவின் மரணத்துக்குப் பிறகு எப்படி வாழ்ந்தார், மறைந்தார் என்பது பலருக்கும் தெரியாது

Om NAMO NArendra MOdi Namaha*🔥🙏🪷 Shri Narendra Modi Ashtotra Namavali ஓம் ஸ்ரீ நரேந்த்ராய நமஹ (Salutations to the revered Narendra) 1. ஓம் விஶ்வ-நேத்ரே நமஹ – Salutations to the leader of the world stage. 2. ஓம் பாரத-பக்தாய நமஹ – Salutations to India’s devoted champion. 3. ஓம் ஜடூ-ஜப்பி-ப்ரதாய நமஹ – Salutations to the giver of world-famous hugs.

The sound of gunfire pierced the air of the quiet valleys. A terrorist attack took place near the Pahalgam market area — *turning a place like paradise into hell.* People screamed. Blood flowed. There was chaos everywhere. *👺 "The terrorists were asking for names and religions and then firing bullets."*