*'நீட் தேர்வு' என்றால் என்ன?* அது குறித்த உண்மைகளும், விளக்கங்களும்... 1) நீட் தேர்வு ஒரு *'தகுதி காண் தேர்வு'* தான் (Qualifying test). அது ஒரு *'போட்டித் தேர்வு அல்ல'* (Not a competitive test)

 


*'நீட் தேர்வு' என்றால் என்ன?*


அது குறித்த உண்மைகளும், விளக்கங்களும்... 


1) நீட் தேர்வு ஒரு *'தகுதி காண் தேர்வு'* தான் 

(Qualifying test).


அது ஒரு *'போட்டித் தேர்வு அல்ல'* 

(Not a competitive test).


ஆகவே, 

'நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் அனைவருக்கும் மருத்துவ கல்லூரியில் இடம் கிடைக்கும்' என்ற எதிர்பார்ப்பு தவறு. 


2) மருத்துவக் கல்வியில் ஒரு *குறைந்தபட்ச தரத்தை* உருவாக்குவதும்... 

தனியார் கல்லூரிகளில் மருத்துவ இடங்களை நிரப்புவதில் *'ஓர் ஒழுங்காற்றை'* ஏற்படுத்துவதுமே நீட் தேர்வின் நோக்கம்.


(The sole purpose of NEET is to regulate the seat allotment).


இதனால்... 


முன்பு, 'பணம் படைத்தவர்கள் மட்டுமே மருத்துவ கல்லூரியில் சேர முடியும்' என்றிருந்த நிலையை மாற்றி... 


இப்போது, 

தகுதி பெறும் மாணவர்களுக்கு மட்டுமே மருத்துவ இடம் கிடைக்கும் என்ற நிலைக்கு நீட் கொண்டு வந்துள்ளது. 


இதனால் *பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களும்...*

எளிதில் 'மருத்துவம்' படிக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.


3) தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் உள்ள *சுமார் 2500 MBBS இடங்கள் நீட் தேர்வில் தேறியோரைக் கொண்டு மட்டுமே நிரப்பப் படும்.*


மேலும், 

*தனியார் கல்லூரி இடங்கள்* 

மற்றும் *நிகர்நிலை பல்கலைகளின் இடங்கள்* 

உட்பட தமிழ்நாட்டில் மொத்தமுள்ள அனைத்து இடங்களும் (PG மற்றும் UG)


*நீட் தேர்வில் தேறியோரைக் கொண்டு மட்டுமே நிரப்பப் படும்.*


4) மொத்த மருத்துவ இடங்களில் 85 சதவீதம் தமிழ்நாட்டில் வசிக்கும் மாணவர்களுக்கும்... 


15 சதவீதம் இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கும் வழங்கப்படும்.


இது ஏற்கனவே நடைமுறையில் இருந்து வருகிறது.


இது அப்படியே தொடரும்.


5) நீட் தேர்வு காரணமாக தமிழக மாணவர்களின் 

இடங்கள் பறிக்கப்பட்டு விடும்... 


அவை வெளி மாநில மாணவர்களுக்கு வழங்கப்பட்டு விடும் என்பதெல்லாம் உண்மையல்ல.


*தகுதி பெறும் மாணவர்களுக்கு...*

*'வரிசையாக தான்' இடம் கிடைக்கும்.*


ஆகவே, சிறந்த கல்வியறிவு பெற்ற மாநிலமான... 

தமிழ் நாட்டு மாணவர்கள் தான் இந்தியாவில் அதிக அளவில் இடம் பெற வாய்ப்பு உள்ளது. 


மேலும், 

மருத்துவ இடத்தைப் பெறுவதற்கு, தமிழ்நாட்டில் வசிக்க வேண்டும் என்ற நிபந்தனை எவ்வித மாற்றமும் இன்றி நீடிக்கிறது.


6) தமிழ்நாட்டில் 69 சதம் இட ஒதுக்கீடு வழங்கப் படுகிறது.

இது அப்படியே தொடரும். 


அதுபோல, ஒவ்வொரு மாநிலத்திலும் நடப்பிலுள்ள இட ஒதுக்கீடு அப்படியே தொடரும்.


7) குறைந்த மதிப்பெண் பெற்ற பணக்கார வீட்டுப் பிள்ளைகள், 


*50 லட்சம் முதல் ஒன்றரைக் கோடி ரூபாய் வரை கொடுத்து...*


*தனியார் கல்லூரி*

மற்றும் 

*நிகர்நிலைப் பல்கலைகளில் மருத்துவ இடங்களைப் பெறும் 'கொடிய வழக்கம்' 'நீட்'டினால் முடிவுக்கு வருகிறது.*


*பத்துக்கோடி ரூபாய் கொடுத்தாலும், நீட் தேர்வில் தேறாவிட்டால் மருத்துவ இடம் கிடைக்காது.*


இந்த நிலையை தான் நீட் தேர்வு உருவாக்கி இருக்கிறது. 


சுருங்கக் கூறின்... 


தனியார் மற்றும் 

நிகர்நிலைப் பல்கலைகளின் வாயிலாக... 


மருத்துவ இடங்களை விற்று... 


வருடம்தோறும் பல ஆயிரம் கோடிகள் வருமானம் பார்த்து வந்த 

"கல்வித் தந்தைகள்(?)" 


இப்போது நீட் தேர்வின் மூலம்... 

பணம் வசூலிக்க முடியாத நிலையில் தவித்து வருகின்றனர்.


மேலும், 

'மாநிலத்திற்கு உரிய இடங்கள், 

*இட ஒதுக்கீடு* முதலிய எந்த விஷயங்களுக்கும் நீட் தேர்வுக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை.'

என்பதால் 

*சமுதாயத்தில் பின்தங்கிய வகுப்பினர், மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு சாதகமான நிலையை நீட் ஏற்படுத்தி உள்ளது.*


8) நீட் தேர்வில் தேறியோர் பட்டியலை, அந்தந்த மாநில அரசுகளுக்கு, நீட் தேர்வை நடத்தும் அமைப்பு வழங்கும்.


அந்தப் பட்டியலில் உள்ளவர்கள் மட்டுமே 'வரிசையாக' மருத்துவக் கல்வி பெற முடியும்.


நன்றி : நியூட்டன் அறிவியல் மன்றம். 


சரி... 


*நீட் தேர்வை எதிர்பர்வர்கள் யார் யார்?* 


*ஏன் எதிர்க்கிறார்கள்?*


இதை முழுமையாக பார்ப்போம். 


எதிர்ப்பர்வர்கள்... 


*'தனியார்' மருத்துவ கல்லூரிகள்...*


இவர்கள் பின்னணியில் தான் இருக்கிறார்கள்.


அவர்களின் 'ஊதுகுழலாக' செயல்படுபவர்கள்... 


அவர்களால் பல *'வகை'* களில் லாபமடைந்து வருபவர்கள்.


உதாரணமாக... 

ஊழல் அரசியல்வாதிகள், ஊடகங்கள், இன்னும் பிற அமைப்புகள். 


காரணம்... 


'நீட்'க்கு முன்பு, 

தனியார் மருத்துவ கல்லூரிகள், அவர்களாகவே நுழைவு தேர்வு நடத்தியபொழுது... 


*நன்கொடை, Capitation fee* என்று ஒவ்வொரு சீட்டுக்கும்... 


*ரூபாய் 50 லட்சத்திலிருந்து 1 கோடி(!)* வரை பெற்றனர்.


நீட் தேர்வு முறையினால், *சாதாரண ஏழை மாணவர்களும் தகுதியின் அடிப்படையில் இப்போது மருத்துவ படிப்பில் சேர முடியும்.*


இதனால், பாதிக்கப்பட்ட தனியார் மருத்துவ கல்லூரி நிறுவனங்கள்... 


*மறைமுகமாக...*


பல *'வகை'* களில் போராட்டத்தை தூண்டி வருகின்றனர். 


'நீட்' பற்றிய தவறான புரிதலும் ஏற்படுத்தி வருகின்றனர்.


மறுபடியும் தெளிவாகி கொள்ளுங்கள்... 


'நீட் தேர்வு' என்பது அகில இந்திய தேர்வு. 


இருப்பினும், 

மெரிட் லிஸ்ட் *மாநில வாரியாக தான்.*


அந்தந்த மாநில அரசு மருத்துவ கல்லூரிகளில் உள்ள *85%* இடங்கள்... 


அந்த மாநிலங்களில் உள்ள பள்ளிகளில் படித்த மாணவர்கள் மட்டுமே சேர முடியும்.  


15% சீட்கள் மட்டுமே அகில இந்திய ஒதுக்கீடு. 


*நீட்க்கு முன்பும் இதே நிலை தான் இருந்தது...*

நீட் அமல்படுத்த பட்ட பின்பும் அதே நிலை  தான்.


மேலும் மாநிலத்தில் உள்ள *'இட ஒதுக்கீடும்'* தொடரும். 


உதாரணமாக தமிழகத்தில் உள்ள *69% இட ஒதுக்கீடு* தொடருகிறது.


மேலும், 

காங்கிரஸ் (+ திமுக) ஆட்சியில் தான் நீட் தேர்வு முறை வந்தது. 


அப்போது, 

மத்திய சுகாதார துறை  அமைச்சர்/இணை அமைச்சர்கள்... 


குலாம் நபி ஆஜாத் - காங்கிரஸ் 

காந்தி செல்வன் - திமுக 


(அரசாணை எண் - MCI -31(1)/2010-MED/49068) 


21டிசம்பர் 2010 ல் MCI (Medical Council of India) 'நீட் தேர்வின் மூலம்  மட்டும் தான் அணைத்து  மருத்துவ கல்லூரிகளின் சேர்க்கை நடைபெறும்' என்று அரசாணை  வெளியிட்டவுடன்... 


80 க்கு மேற்பட்ட தனியார் மருத்துவ கல்லூரிகள்... 


*தங்களது 'வருமானம்' பாதிக்கபடும்* என்பதால்... 


*'வழக்குகள்' தொடுத்தன.*


இதில் 2 மாநில அரசுகளும் (!) அடங்கும். 


*அங்கீகாரமே இல்லாத* DD  மருத்துவ கல்லூரியும் கூட... 

(2 ஆண்டுகள் @ 160 மாணவர்களின் வாழக்கையை பாழாக்கிய கல்லூரி) நீட்டுக்கு தடை கோரி வழக்கு தொடுத்தது.


உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது. 


தொடர்ந்து, 

2013இல் 'நீட் அரசாணையை செல்லாது' என்றும் அறிவித்தது.


அதனால், 

2011 இலிருந்து 2016 வரை நீட் அமலுக்கு வரவில்லை... 


இதை தொடர்ந்து, 

காங்கிரஸ் அரசு உச்ச  நீதிமன்றத்தில் *'சீராய்வு மனு'* போட்டது. 


அந்த தீர்ப்பு 2016 இல் தான் வந்தது. 


*'நீட் தேர்வு மூலம் தான் அணைத்து மருத்துவ கல்லூரிகளின் சேர்க்கையும் நடக்க வேண்டும்'* என்று உத்தரவிட்டது உச்ச நீதிமன்றம்.  


இதனால், 

2016ல் தனியார் மருத்துவ கல்லூரிகளுக்கும் நீட் தேர்வின் மூலம் மட்டுமே சேர்க்கை நடத்தப்பட்டது.


அரசு மருத்துவ கல்லூரிகளுக்கு 2017ல் இருந்து நீட் அமலானது.


இந்திய அரசியலமைப்பில் உள்ள ஏழாவது அட்டவணையில் உள்ள மத்திய பட்டியலில் உள்ள 66 Entry...


 "Co-ordination and determination of standards in institutions for higher education or research and scientific and technical institutions."  


அதாவது 

UGC, AICTE , NCVT ,NMC (முன்பு MCI ) ITI , polytechnic , பொறியியல் கல்லூரி, மருத்துவ கல்லூரி, கலை கல்லூரி (பல்கலைக்கழகம் ) - மத்திய அரசின்/மத்திய அரசின் நிறுவனங்களின்   அனுமதி தேவை.


அதன்படி, 

உயர் கல்வி தரத்தை முடிவு செய்வது மத்திய அரசு.


மாணவர்கள் சேர்க்கையில் தனியார் மருத்துவ கல்லூரிகளில் நடக்கும் முறைகேடுகள் பலரும் அறிந்ததே... 


இதை கதையாக வைத்து தான் 'எய்தவன், பைரவா' போன்ற திரைப்படங்கள் கூட வந்துள்ளது. 


'அப்பா' என்ற திரைபடம் பள்ளிகளின் குறைபாடுகளை சுட்டிக்காட்டி எடுக்க பட்ட படம். 


2016இல் கூட 

தமிழகத்தில் மருத்துவ கல்லூரி மாணவர் சேர்க்கை முறைகேட்டினால் கைதானார் - புதிய தலைமுறை தொலைக்காட்சி நிறுவனர். 


அவர் கைதாக நீட் தேர்வு தான் காரணம். 


*ஆக...*


நீட் தேர்வு... 

*ஏழை மாணவர்களுக்கு சாதகம்*


கல்லூரி நிறுவனங்கள் மற்றும் அவர்களால் மறைமுகமாக ஏதோ *'வகை'* யில் பயனை பெறுபவர்களுக்கு *பாதகம்.*


இந்த உண்மைகளை மறைக்க தான்... 


நயவஞ்சகர்கள் பொய் பிரச்சாரங்கள் மூலம்...


பல தவறான தகவல்களை கொடுத்து...


உருட்டி, புரட்டி மக்களை திசை திருப்பி வருகின்றனர்.


*ஏழை மாணவர்கள் வாழ்க்கை வளம் பெற...*


இந்த உண்மையை உணர்ந்த நாம்... 


நீட் தேர்வுக்கு ஆதரவாக... 

*உறுதுணையாக நிற்போம்.🤝*


*'தர்மம்' ஜெயித்தால் தான் நாம் தலை நிமிர்ந்து வாழ முடியும்.👍*


*நன்றி!🙏*

Comments

Popular posts from this blog

நான் கிட்டத்தட்ட 22 வயது வரை நாத்திகனாக இருந்தேன். கோவில்களுக்குச் செல்வது பிடிக்க வில்லை. நான் அவற்றை பிராமணர்கள் மற்றும் பிறர் பணம் சம்பாதிக்கும் இயந்திரங்களாகவே கருதினேன். ஒவ்வொரு அடியிலும் அவர்கள் எப்படி பணம் கேட்டார்கள் என்பதை நான் வெறுத்தேன்.

8th August 11am, Delhi: MAHA PANCHAYAT- 100Cr HINDU Movement for Abolition of totally Discrminatory HR&CE Act.1951, all over India. Temples should function as independently as MOSQUES & CHURCHES. Money taken/swindled should be given back by Govts.

1961 ஆம் வருடம் வெளிவந்த தேன்நிலவு படத்தில் உள்ள பாட்டு பாடவா என்ற மிக இனிய பாடல்... ஜெமினி கணேசன் வைஜெயந்தி மாலா நடித்த பாடல்.... அவ்வளவு இனிமையான பாடல்... ஆனால் படத்தில் பார்த்தால் இரண்டு பேரும் குதிரை மேல் உட்கார்ந்து கொண்டு மெல்ல குதிரை ஓட்டிக்கொண்டு செல்வார்கள்... ஆனால் இந்த காலத்து பசங்களும் அந்த பாட்டுக்கு கலக்கலாக நடனமாடி விட்டார்கள்... சில பல சாட்களை நான் இங்கே பப்ளிஷ் செய்துள்ளேன் பாருங்கள்... அந்தப் பாடலில் நடித்த வைஜெயந்திமாலா அப்போது எவ்வளவு அழகாக இருந்துள்ளார் பாருங்கள் மேலே போட்டோக்களை பார்க்கவும்