நீதிமன்றத்தில், தான் ஏன் சுட்டேன் என்பதை ஆணிதரமாக சொன்னான். அவன் மறுக்கவில்லை. வழக்கறிஞர் வைக்கவில்லை. ''தண்டனை வேண்டாம்'' - என சொல்லவில்லை. ''எனக்கொரு தாய் உண்டு. அவளுக்காய் நான் மணம் செய்ய வேண்டும்'' - என கெஞ்சவில்லை. காந்தியால் இத்தேசம் எவ்வளவு இழந்தது என்பதையும், எவ்வளவு பெரும் நம்பிக்கையினை காந்தி சிதைத்தார் என்பதையும், ''இந்துக்களுக்கு காந்தி பெரும் எதிரி'' என்பதையும், அவரின் அரசியல் ஒரு காலமும் இந்தியாவில் அமைதி நிலவவிடாது... - என்பதை தெளிவாக சொன்னான்.

 









சயனைடு கடிக்கவில்லை. 


மாறாக அங்கேயே நின்றான்.


நீதிமன்றத்தில், தான் ஏன் சுட்டேன் என்பதை ஆணிதரமாக சொன்னான். 


அவன் மறுக்கவில்லை. 


வழக்கறிஞர் வைக்கவில்லை. 


''தண்டனை வேண்டாம்'' - என சொல்லவில்லை.


''எனக்கொரு தாய் உண்டு. அவளுக்காய் நான் மணம் செய்ய வேண்டும்'' -  என கெஞ்சவில்லை.


காந்தியால் இத்தேசம் எவ்வளவு இழந்தது என்பதையும், 


எவ்வளவு பெரும் நம்பிக்கையினை காந்தி சிதைத்தார் என்பதையும், 


''இந்துக்களுக்கு காந்தி பெரும் எதிரி'' என்பதையும், 


அவரின் அரசியல் ஒரு காலமும் இந்தியாவில் அமைதி நிலவவிடாது... 


- என்பதை தெளிவாக சொன்னான்.


*


''ஜின்னாவுக்கு, பாகிஸ்தான் எனும் #இஸ்லாமிய_நாடு கேட்க உரிமை உள்ள பொழுது... எங்களுக்கு #இந்து_நாடு கேட்க உரிமை இல்லையா?'' 


''5 கோடி பாகிஸ்தானியருக்கு தனி நாடு என்றால்,  மீதி 45 கோடி இந்துக்களுக்கு ஒரு நாடு இல்லையா?'' 


- என அவன் கேட்டபொழுது நீதிபதியிடம் பதில் இல்லை


அந்த சபையே மவுனித்து நின்றது.


*


கோட்சே தெளிவாக பேசினான். அது பல பக்கங்களுக்கான விளக்கம். 


ஆம். #இந்துக்களின்_பிரதிநிதியாக_வலியினை சொல்லிவிட்டு.... 


தூக்குமேடை நோக்கி சென்றான்.


நிச்சயம் அவன் செய்தது கொலை. அதற்கான தண்டனையினை அவன் பெற்றான். 


 வெள்ளையனிடம் இருந்து ஆட்சி, 

வெள்ளையனின் ரகசிய பிரதிநிதிகளுக்கு கைமாறி.... 

இத்தேசம் இரண்டாம் அடிமையாக சிக்கியபொழுது, 


முதல் போரை #அவனே தொடங்கி வைத்தான்.


அதுதான் இன்று #மோடி தலமையில் தனிபெரும் இந்தியாவாக வலுவாக நிற்கின்றது.


*


ராமர் கோவில் , 

காசி சீரமைப்பு, 

காஷ்மீரிய இந்துக்களுக்கு காவல், 

சீன எல்லையில் பலமான நிலை 


- என இப்பொழுதுதான் தேசம் சுதந்திரத்தின் அவசியத்தை அரங்கேற்றிகொண்டிருக்கின்றது.


இக்காட்சியினை 1947லே கனவு கண்டவன் கோட்சே.


*


கோட்சேவினை நாம் நியாயபடுத்தவில்லை. 


அவன் கொல்லாவிட்டாலும் காந்தியினை கொல்ல இன்னும் பலர் தயாராக இருந்தார்கள்.


*


கோட்சே வழக்கில் மர்மமும் உண்டு. 


அவன் இஸ்மாயில் என கையில் பச்சை குத்தி கொண்டான் என்பதெல்லாம் பொய்.


காந்தி சுடபட்டதும், ரேடியோ ''காந்தியினை கொன்றவன் இஸ்லாமியன் அல்ல'' என அலறியது. 


காரணம், இங்கு தேசபிரிவினையில் காந்திமேல் கொந்தளிப்பு அப்படி இருந்தது.


அப்பொழுதும் இங்கு இஸ்லாமியரை காக்கவே காங்கிரஸ் பாடுபட்டது. 


ஆம். கலவரம் வந்து இந்துக்கள் இஸ்லாமியரை அடித்துவிட கூடாது என முந்தி கொண்டது.


பாகிஸ்தான் எனும் இஸ்லாமிய தேசம் காந்தியால் கொடுக்கபட்டபின்னும் அவரை கொல்ல இஸ்லாமியருக்கு என்ன பைத்தியமா?


கோட்சே இஸ்மாயில் என பச்சை குத்தி கொண்டான் என்பது பொய்.  


ஆம். அதன் பின் அவன் நீதிமன்றம் நின்றான். 


மரண தண்டனை கைதியின் உடல் அங்கத்தை ஆவணபடுதுவார்கள்.


அதில் பச்சை குத்தல் சமாச்சாரம் இல்லவே இல்லை. குத்தியிருந்தால் நிச்சயம் அது குறிக்கபட்டிருக்கும்.


*


கோட்சே இங்கு கொடியவனோ மாபெரும் குற்றவாளியோ அல்ல. 


ஒரு நல்ல இந்தியனுக்கு, இந்துவுக்கு என்ன கோபம் வருமோ அதுதான் அவனுக்கும் வந்தது.


அவன், 


- இந்துக்களின் பிரதிநிதியாக, 

- பஞ்சாபிலும் வங்கத்திலும் செத்த கோடிகணக்கான இந்துக்களின் ஆன்மாவாக, 

- கற்பிழந்த ஏகபட்ட இந்து பெண்களின் மானமுள்ள சகோதரனாக அதை செய்தான்.


நிச்சயம் அவன் இல்லாவிட்டாலும் வெகுசில நாட்களில் இன்னும் வேறு யாராவது காந்தியினை கொன்றிருப்பார்கள். 


அவர் ஏற்படுத்தி இருந்த வெறுப்பு அப்படி.


*


ஆனால் ஒரு தவறு நடந்தேறிற்று.


காந்திக்கு அப்பொழுது 78 வயதாகி இருந்தது. மக்களிடம் பெரும் அதிருப்தியினை சம்பாதித்தார் காந்தி.


அவரின் இஸ்லாமிய பாசமும், கடைசி கால ஆராய்ச்சியும் மக்களிடம் அவரின் தோற்றத்தை காரி துப்ப வைத்திருந்தது.


''ராம் ராம்'' -  என பேசியதெல்லாம் பொய், நடிப்பு, பசப்புதனம். 


அப்படி ''அவரின் ராம பக்தி உண்மையென்றால், ஏன் இத்தேசம் #இந்துதேசம் என அறிவிக்க தயக்கம்'' என்றெல்லாம் கேள்வி எழுந்தது.


காந்தியின் முகமூடி கிழிந்து தொங்கியது.


1920களின் ஆக்ரோஷமான இந்திய போராட்டத்தை அழிக்க.... 


''பிரிட்டிசாரால் உருவாக்கபட்ட கைகூலி காந்தி'' -  எனும் கருத்து, உண்மை என்பதை தேசம் உணர்ந்தது.


78 வயதான காந்தி அப்படியே அவமானத்தால் செத்திருப்பார். 


தேசம் தூற்றி விரட்டி அடித்திருக்கும்.


ஆனால் கோட்சே அவரை தேசபிதாவாக்கிவிட்டு சென்றுவிட்டான்.


கோட்சே தன்னை அறியாமல் செய்த பெரும் தவறு அது. 


*


தானாக செத்திருக்க வேண்டிய காந்தியினை, அல்லது பிடித்து தள்ளினாலே செத்திருக்க வேண்டிய காந்தியினை.... கொன்று அவன் பழி ஏற்றான்.


அந்த பழியினை காங்கிரஸ் நுட்பமாக பயன்படுத்தி #இந்துமகா_சபை, #ஆர்_எஸ்_எஸ் போன்றவற்றை #மதவாத_சக்தி என சொல்லி காட்சியினை மாற்றியது.


அடுத்த 17 ஆண்டுகளுக்கு நேரு பெரும் சக்தியாக இருக்கவும், 


ஆர்.எஸ்.எஸ் போன்றவற்றின் எழுச்சி முளையிலே அடக்கவும் இதுதான் காரணம்.


#திராவிடமெல்லாம் தெற்கே எழும்ப இதுதான் காரணம்.


*


ஆனால் பொய்கள் நெடுங்காலம் நிலைக்காதல்லவா? 


நேரு வெகுவிரைவிலே சிக்கினார். 


- காஷ்மீரிய இஸ்லாமிய பாசம், 

- பாகிஸ்தானுடன் கள்ளகாதல் 


என நாடகமாடி ஒருவித இந்திய ஐரோப்பியனாக வாழ்ந்த நேருவினை செருப்பால் அடித்தது சீனா.


*


''சுதந்திரம் பெற்றபின்னும் பிரிட்டிஷ் ஆட்சியாளர் படம் இந்திய பார்லிமென்டில் இருப்பதா? இதென்ன மானங்கெட்ட தனம்''  - என சொல்லி #சூ_என்_லாய் கேட்டபொழுது, 


நேருவின் நாட்டுபற்று வாய்விட்டு சிரித்தது.


ஆம், இதெல்லாம் இந்துமகா சபையும் ஆர்.எஸ்.எஸும் கேட்ட வார்த்தைகள். 


ஆனால்,  சீனன் கேட்டபொழுதுதான்.... 


நேருவின் புகழ் சந்தி சிரித்தது.


*


நேருவிற்கு பின் #சாஸ்திரி, நல்ல பிரதமராய் இருந்தார். 


#இந்திராவும் நல்ல தலைவராக சரியானவர். ஆனால் கடைசிவரை #இந்துக்கள்_மனநிலை_உணராதவராக இருந்தார்.


வேறுவழியின்றி அவரை தேசம் ஆதரித்தது. 


அதிலும் தனக்கான முடிவினை தானே தேடி கொண்டார்.


நிச்சயம் சீக்கியர்களின் சில கோரிக்கைகளை அவர் ஆதரித்திருக்க வேண்டும். 


ஆம் காந்தியிடமும் நேருவிடம் மன்றாடியதைத்தான் சீக்கியர் இந்திராவிடமும் கேட்டனர்.  


ஆனால் மதம் என ஒருவார்த்தையில் அவர்களை விரட்டினார் இந்திரா.


விளைவு பிந்த்ரன்வாலேயினை அவரே உருவாக்கினார். 


அவனின் அடிபொடிகள் இந்திராவினை முடித்தன‌.


இதன் பின்பு, 


#ஆர்_எஸ்_எஸ்,  #பாஜக எனும் முகமூடியுடன்.... வளர்ந்து, இன்று மிகபெரும் சக்தியாக ஆட்சியில் இருக்கின்றது.


*


ஆக, கோட்சே என்பவன் செய்த கொலையால்.... 


இங்கு இந்துதர்மமும், வலுவான தலைவனும் வர.... 


கிட்டதட்ட 70 ஆண்டுகள் ஆகிவிட்டன‌.


இதுதான் துயரம். மாபெரும் இந்திய சோகம்.


*


1950களில் இருந்த இந்திய #தேசிய_எழுத்தாளர்கள் சொல்வது இதுதான்..,


"காந்தி அதற்குமேலும் இருந்திருந்தால்.... மிகபெரும் கலவரங்களுக்கு காரணமாக இருந்திருப்பார். 


கோட்சே என்ன...? பாரதியும் நேதாஜியும் உயிரோடு இருந்திருந்தால் கோட்சேவுக்கு அந்த வாய்ப்பு கிடைத்திருக்காது. 


கோட்சே கொன்றிருக்க வேண்டியது காந்தியினை அல்ல. அவரை விட ஆபத்தானவர்கள் அங்கே இருந்தார்கள்"


*


இன்னும் ஒரு #ஆன்மீக_மடாதிபதி அழகாக சொன்னார்,


"வெள்ளையன் நம்மை சாம பேத தான தண்டம் எனும் வகையால் நுட்பமாக பிரித்து ஆண்டு கொண்டிருந்தான். 


நம் பாரத இந்துதர்ம படி பக்தி, அறிவு, ரவுத்திரம், ஒற்றுமை, உழைப்பு இவற்றை கொண்டே அவனை விரட்டி இருக்க வேண்டும்.


சுருக்கமாக சொன்னால் பிராமண, வைசிக, சத்திரிய,சூத்திர எனும் அந்த ஒற்றுமை கொண்டே நாம் அவரவர் கடமையினை செய்து வெள்ளையனை விரட்டி இருக்க வேண்டும்.


வ.உ.சி ஒரு வைசிகனாக தன் கடமையினை செய்தார். 


காந்திக்கு பொறுக்கவில்லை. 


வாஞ்சிநாதன் முதல் நேதாஜி வரை சத்திரிய கடமையினை செய்தார்கள். 


காந்திக்கு பொறுக்கவில்லை.


பகத்சிங், சூத்திரர் எனும் உழைக்கும் மக்களை திரட்டினால் காட்சி மாறும் என நம்பினான். சில கம்யூனிஸ்டுகளும் நம்பினர். 


அதுவும் காந்திக்கு பொறுக்கவில்லை.


மாறாக.... 


#அஹிம்சை எனும் ஒரு #சாதுவின்_குணத்தை தேசமெல்லாம் #திணித்தார். 


அது வெறும் ஆன்மீகம். ஒரு சாமியாருக்கு இருக்க வேண்டிய குணம்.


அதை ஆட்சிக்கு கொண்டுவந்து, வலுகட்டாயமாக அவர் அரசியலில் திணித்ததே.... 


தேசம் பிரியவும், 

மாபெரும் அழிவுகள் ஏற்படவும் காரணம்.


ஆம் அவரின் அஹிம்சை பாகிஸ்தான் பிரிவதை கூட தடுக்க வலுவற்றதாய் இருந்தது. 


இதை உணர்ந்து அவரே மெல்ல செத்து கொண்டிருந்தார். அதை கோட்சே அவசரபட்டு முடித்து வைத்தான்"


*


ஆம் காந்தியினை வாழவிட்டு மனதால் கொன்றிருக்க வேண்டும். 


அதைவிட பெரும் தண்டனை இருந்திருக்க முடியாது. 


அவ்வகையில் கோட்சே காந்திக்கு மிகபெரும் உதவி செய்தான்.


ஆக, வரலாற்றை எப்படி புரட்டினாலும்... 


காந்தி மரியாதையாக சாக, 

இன்னும் புகழோடு இருக்க‌... 

பெரும் உதவி செய்த காந்தியவாதிதான் கோட்சே என்றுதான் முடிகின்றது.


*


இன்று #தியாகிகள்_தினம்!


அஹிம்சை பேசிய காந்தி கடைசிவரை.... 


பகத்சிங், நேதாஜி என எத்தனையோ இந்திய உயிர்கள் கொடூரமாக வதைக்கபட்டபொழுது, அமைதி காத்தது ஒன்றே அவரின் முரண்பாடான கொள்கைக்கு உதார்ணம்.


காந்தி நல்லவரா.. இல்லையா... என்பது விஷயம் அல்ல. 


அவரின் உலகமும் சிந்தனையும் வேறு. 


அந்த சிந்தனை நாட்டை நடத்தும் ஒரு தலைவனுக்குரியது அல்ல. 


அப்படிபட்ட தலைவனை வைத்து கொண்டு தேசம் நன்மை அடைய முடியாது.


அதுவும் இந்தியா போன்ற நாடுகளில் அவரின் கொள்கை ஒரு காலமும் பயன்படாது. 


யாராலும் புரிந்து கொள்ளமுடியாத சிக்கல் நிறைந்த மனநிலை கொண்ட ஒருவர், சிக்கல் நிறைந்த ராஜரீகத்தை சுமக்கவும் முடியாது. 


மக்களுக்கும் நாட்டுக்கும் நல்வழி காட்டவும் முடியாது.


*


காந்தி தன் கொள்கையில் எங்கும் முழு வெற்றிபெற்றவர் அல்ல. 


உரிமை வாங்க வேண்டிய இடத்தில் சோறு வாங்குவதுதான் அவரின் போராட்டமும் கொள்கையுமாக இருந்தது. 


தென்னாப்ரிக்கா முதல் இந்தியா வரை அதைத்தான் செய்தார்.


அவர் சரியான தலைவராக இருந்திருந்தால்.... 


- ஜின்னா எழும்பியிருக்கமாட்டார். 

- தேசம் உடைந்திருக்காது. 


மிக பெரிய சிக்கல் இங்குவந்திருக்காது, இன்னும் அவரால் உருவான சிக்கல் ஏராளம்.


*


கோட்சே செய்தது மாபெரும் குற்றமாக இருக்கலாம். 


ஆனால் அந்த குற்றத்தை செய்ய தூண்டியது யாரென்றால் சாட்சாத் காந்திதான். 


லட்சகணக்கான இந்து இளைஞர்களின் கோபமேதான் கோட்சே வடிவில் பிர்லாவின் துப்பாக்கியாக வெடித்தது.


ஞான மொழியில் சொல்வதென்றால்,  


இந்தியர் தங்கள் விடிவெள்ளியாக காந்தியினை கண்டனர்; 

இந்தியரின் ஆத்மபலத்தில் காந்தி உருவானார்;  

ஆனால் மெல்ல மெல்ல அவர் இந்தியரின் ஆத்மபலம் எனும் பெரும் சக்தியினை இழந்தார்.


அதுவும் 1940முதல்.... தேசபிரிவினைவரை, 


இந்தியமக்கள் அவரை மனதால் கைவிட்டனர். 


அவரின் செயல்கள் பெரும் கண்ணீரும் அவநம்பிக்கையும் கொடுத்தன. 


இந்தியரின் ஆத்மபலம் அவரை கைவிட்டது. 


மொத்த மக்களின் ஒன்றுபட்ட மனமும் அவரை வெறுக்க தொடங்க காந்தி வீழ்ந்தார்.


*


ஆத்மபலம் அவ்வளவு வலுவானது. 


பெருவாரி மக்களின் வெறுப்பை, இந்து மக்களின் மனமார்ந்த கண்ணீரை காந்தி வாங்கியிருக்க கூடாது. 


அதுதான் பலித்தது. 


'கோட்சே இல்லையென்றால் இன்னொருவனின் தோட்டா காந்தியினை நிச்சயம் காவுவாங்கியிருக்கும்' -  என்பதுதான் வரலாறு பதிவு செய்திருக்கும் உண்மை.


*


இன்னொரு காந்தி இங்கு வராமலே போகட்டும். 


ஒரு காந்தியாலே தேசம் கண்ட பெரும் பின்னடைவுகள் அவ்வளவு கடுமையானவை. 


இப்பொழுதுதான் அவை சரிசெய்யபட்டு வருகின்றது.


''புத்தனை கைவிட்ட சீனா எழும்பியது''' போல.... 


என்றைக்கு காந்தியினை முழுக்க இத்தேசம் கைவிடுமோ... 


அன்றுதான் இத்தேசம் பெரும் எழுச்சி பெறும். 


இது சத்தியம். 


https://www.facebook.com/101414721232325/photos/a.101713764535754/699138711459920/

Comments

Popular posts from this blog

எனது பாட்டி -விஜயா பாரதி மகாகவி பாரதியின் பெயர்த்தியான திருமதி. விஜயா பாரதி, கனடாவில் வசிக்கிறார். பாரதியின் புகழ் பரப்பும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் அன்னாரது கட்டுரை இது... உங்களுக்கு என் தாத்தா பாரதியை நன்கு தெரிந்திருக்கலாம். அவரின் இறுதிக் காலத்தைப் பற்றி பலர் எழுதி இருக்கிறார்கள். ஆனால் என் பாட்டி செல்லம்மாள், என் தாத்தாவின் மரணத்துக்குப் பிறகு எப்படி வாழ்ந்தார், மறைந்தார் என்பது பலருக்கும் தெரியாது

Om NAMO NArendra MOdi Namaha*🔥🙏🪷 Shri Narendra Modi Ashtotra Namavali ஓம் ஸ்ரீ நரேந்த்ராய நமஹ (Salutations to the revered Narendra) 1. ஓம் விஶ்வ-நேத்ரே நமஹ – Salutations to the leader of the world stage. 2. ஓம் பாரத-பக்தாய நமஹ – Salutations to India’s devoted champion. 3. ஓம் ஜடூ-ஜப்பி-ப்ரதாய நமஹ – Salutations to the giver of world-famous hugs.

The sound of gunfire pierced the air of the quiet valleys. A terrorist attack took place near the Pahalgam market area — *turning a place like paradise into hell.* People screamed. Blood flowed. There was chaos everywhere. *👺 "The terrorists were asking for names and religions and then firing bullets."*