இசைஞானி இளையராஜா ஏற்கனவே பகவானால் தேர்ற்தெடுக்கப்பட்ட ஆத்மா, அதனால்தான் பகவானின் பிரதிநிதியான மோடியைப் புரிந்துகொண்டார், வாழ்த்துகிறார்

 



எனக்குச் சரியாக நினைவில்லை, இரண்டு, மூன்று வருடங்களுக்கு முன்பு நமது இசைஞானி இளையராஜா ஒரு பொதுமேடையில் ஏசுவை ஒரண்டையிழுத்தார்-


இரண்டாயிரம் வருடங்களாக வருகிறேன், வருகிறேன் என்று கூறி ஒருவர் உலகை ஏமாற்றி வருவதாத பகிரங்கமாகப் பேசினார்-


அப்பொழுது வழக்கம்போல தமிழகமெங்கும் RSB மீடியாக்கள் அலறின, மிஷநரிகள் ராஜா பகிரங்க மன்னிப்புக் கேட்கவேண்டும் என்று மிரட்டின_


ராஜா கூலாக அறிக்கை விட்டார், ஏசு நேரடியாக வந்து வருத்தப்பட்டால் மன்னிப்புக் கேட்கிறேன் என்று-


அது ஆண்டாள் சர்ச்சையில் வைரமுத்து சிக்கிய அதே நேரம், மீடியா பலம், திமுக பலம், இருந்ததால் வைரமுத்து கடைசிவரை மன்னிப்புக் கேட்கவில்லை மாறாக ஆண்டாள் நேராக வந்து கேட்டால், மன்னிப்புக் கேட்கிறேன் என்றான், -


அந்த நேரத்தில்தான் ராஜா வைரமுத்து போட்ட அதே wide பாலை சிக்ஸராக்கினார் -


நம்மிள் பலருக்கு இது மறந்திருக்கும் அந்த வீடியோவை நானும் சேமித்து வைக்கவில்லை -


ஆனால், இளையராஜா போன்ற கம்யூனிஸ சித்தாந்தத்தில் வளர்ந்த, பா.ரஞ்சித், மாரிசெல்வராஜ், திருமா போன்றோர்கள் கூறும் ஒதுக்கப்பட்ட, நசுக்கப்பட்ட, பிதுக்கப்பட்ட ஒரு சமூகத்தில் பிறந்த ஒருவர் எப்படி இப்படி மோடி மஸ்தான் எனும் செப்படி வித்தைக்கு மயங்கினார் என்று_


கீதையில் பகவான் கூறுகிறான்-


அர்ஜுனா, என்னை அறிந்துகொள்ள வேண்டும் என்று ஒருவன் தேடலை ஆரம்பித்து விட்டாலே, நான் அவனுக்கு உதவுவேன், ஒருவேளை அவன் அந்தப் பிறவியில் சமூக சூழ்நிலை, குடும்ப சூழ்நிலை, பொருளாதார சூழ்நிலையால் என்னை அறிந்து கொள்ளும் வாய்ப்பை இடையிலே நிறுத்துகிறான் அல்லது தொடர முடியவில்லையென்றால், நான் அவனது அடுத்த பிறவியில் அதற்கான வாய்ப்பை உருவாக்கித் தருவேன் என்கிறார் -


அதாவது, பகவானை அடைய முயற்சி செய்த அந்த ஜீவ ஆதமா அடுத்த ஜென்மாவில் நன்றாக நல்ல வசதியான பொருளாதாரம் பற்றிய கவலை இல்லாத வாழ்க்கைக்கு வரும், அப்பொழுது அதை உணரும் சக்தியுடைய ஆத்மா தொடர்ந்து முயற்சித்து பகவானின் கோலோகத்தை அடையும் -


ராஜா இதை உணர்ந்துள்ளார், அதனால்தான் விடாப்பிடியாக ஹிந்துதர்மத்தைக் கட்டிக்கொண்டிருக்கிறார்-


கவியரசு கண்ணதாசன் கூட நாத்திகவாதியாக இருந்து பகவத்கீதை படித்த பிறகு அர்த்தமுள்ள ஹிந்துமதம் படைத்தார், இன்று சர்வ நிச்சயமாக கோலோகத்தில் பகவானின் திருவடிகளில் வாழ்ந்துவருவார் -


ஆதலால் -


ராஜா ஏற்கனவே பகவானால் தேர்ற்தெடுக்கப்பட்ட ஆத்மா, அதனால்தான் பகவானின் பிரதிநிதியான மோடியைப் புரிந்துகொண்டார், வாழ்த்துகிறார் -


பகவான் ஏற்கனவே (10வது அத்தியாத்தி) இந்த உலகில் சிறந்தவைகளைப் பட்டியலிட்டு, மாதங்களில் நான் மார்கழி, தேவர்களில் நான் இந்திரன், பசுக்களில் நான் சுரபி, யானைகளில் நான் ஐராவதம், கந்தர்வர்களில் நான் மன்மதன், குதிரைகளில் நான் அசுவம், என்று தொடர்ந்து மனிதர்களில் நான் மன்னன் என்று கூறுகிறார் ஆம், மன்னர் கூட கிருஷ்னரின் அம்சம்தான் -


ஒருவேளை பகவானின் பத்தாவது அவதாரம் முடிந்தபின் ஒதக் கூடிய கீதையின் புதிய ஏற்பாட்டில், மனிதர்களில் நான் மோடி என்றுகூடக் கூறுவார் -


ஆகவே, மோடியுடன் ஒப்பிடக்கூடிய மனிதன் இங்கே இன்றுவரை எவனும் பிறக்கக்கூட இல்லை, இளையராஜா போன்ற மாமனிதர்கள் அம்பேத்கர் போன்ற சிறந்த ஆனால் மோடியுடன் ஒப்பிட முடியாத தலைவர்களை மோடியுடன் ஒப்பிட வேண்டாம், Please_


மோடி = மனிதருள் சிறந்த மனிதர், அவர் மட்டுமே-


கலியுகத்தில் உதித்த கடவுள் எங்கள் மோடிஜி -


தேசப்பணியில் என்றும்🙏

Comments

Post a Comment

Popular posts from this blog

*RSS ப்ரார்தனா - RSS Prayer* *தமிழ் ஸ்லோகம் - தமிழ் மொழிபெயர்ப்பு* *நமஸ்தே ஸதா வத்ஸலே மாத்ரு பூமே* அன்பு காட்டும் தாய் நாடே! உன்னை நான் எப்பொழுதும் வணங்குகிறேன்🔥🙏🪷

*TENT DECOR CATERING EXPO 2024* - 4,5,6-Oct-2024 - Chennai Trade Centre, Nandambakkam Chennai

எனது பாட்டி -விஜயா பாரதி மகாகவி பாரதியின் பெயர்த்தியான திருமதி. விஜயா பாரதி, கனடாவில் வசிக்கிறார். பாரதியின் புகழ் பரப்பும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் அன்னாரது கட்டுரை இது... உங்களுக்கு என் தாத்தா பாரதியை நன்கு தெரிந்திருக்கலாம். அவரின் இறுதிக் காலத்தைப் பற்றி பலர் எழுதி இருக்கிறார்கள். ஆனால் என் பாட்டி செல்லம்மாள், என் தாத்தாவின் மரணத்துக்குப் பிறகு எப்படி வாழ்ந்தார், மறைந்தார் என்பது பலருக்கும் தெரியாது