கோயம்புத்தூரிலிருந்து சென்னை செல்லும் விமானம்... கடவுளை நம்பாத ஒருவர் விமானத்தில் ஏறுகிறார். பக்கத்து சீட்டில் ஒரு சிறுமி பேப்பரில் விநாயகர் படம் வரைந்து கொண்டிருக்கிறாள்.

 





#படித்ததில்_மிகவும்_பிடித்தது 


கோயம்புத்தூரிலிருந்து சென்னை செல்லும் விமானம்...

கடவுளை நம்பாத ஒருவர் விமானத்தில் ஏறுகிறார். 


பக்கத்து சீட்டில் ஒரு சிறுமி பேப்பரில் விநாயகர் படம் வரைந்து கொண்டிருக்கிறாள். 


பேசத் துவங்கினார் அவர், “என்னம்மா பண்ற படம் வரையறாப்ல இருக்கு? 


இதுக்கு பதிலா நாம பேசிக்கிட்டே சென்னை வரைக்கும் போனோம்ன்னு வை நல்லா பொழுது போகும்ல...” 


சிறுமி கொஞ்சம் புன்னகைத்து பேப்பரை மூடி வைத்து விட்டு கை கட்டி கொண்டு கேட்டாள். 


“என்ன பேசலாம் அங்கிள்..? சொல்லுங்க...” 


“என்ன வேணா பேசலாம்மா. கடவுள் அப்படீங்கறத பத்தி பேசலாம்.


அது எவ்வளவு முட்டாள்தனம்னு பேசலாம். முன் ஜென்மம், மறு ஜென்மம் இதெல்லாம் எவ்வளவு அபத்தம்னு பேசலாம். இது மாதிரி விநாயகர் படம் வரையரதுக்கு பதிலா இப்படி பகுத்தறிவா கடவுள் பத்தி பேசலாம். உன்ன மாதிரி யங் ஜெனரேஷனுக்கு உதவுமா இல்லியா...?” 


சிறுமி கண்களில் பளபளப்பு....


"கண்டிப்பா அங்கிள் பேசலாம். ஆனா அதுக்கு முன்னாடி எனக்கு ஒரு டவுட்டு...” 


“கேளும்மா. எது வேணாலும் கேளு?” 


“குதிரை, மாடு, மான், ஆடு இதெல்லாம் ஒரே மாதிரியா புல்லு தான் திங்குது. ஆனா குதிரை சாணி வேற மாதிரி இருக்கு, ஆட்டுக்கு புழுக்கையா வருது,


மானுக்கு குண்டு குண்டா வருது, மாட்டுக்கு சாணி வேற மாதிரி வருது. ஏன் அங்கிள். எல்லாம் ஒரே மாதிரி தான சாப்பிடுது. அப்புறம் எப்படி இப்படி வித்தியாசமா வருது...” 


இந்தக் கேள்வியை எதிர்பார்க்கவில்லை அவர். 


யோசித்து... “ஹூம்.. ரொம்ப சிக்கலான கேள்வியா இருக்கே. தெரியலையேம்மா..”


என்று இழுத்தார். 


“ஏன் அங்கிள், கேலவம் ஒரு சாணியப் பத்தி கூட அடிப்படையா ஏன்னு தெரியலை உங்களுக்கு. உண்மையிலேயே, கடவுளையெல்லாம் பத்தி பேச தகுதி இருக்கா என்ன??” 

சிறுமி குனிந்து படம் வரையத் துவங்கினாள்.


வயிற்று பிழைப்புக்காக நாத்திகம் பேசுபவர்களுக்கு....


படித்ததில் பிடித்தது...

Comments

Popular posts from this blog

எனது பாட்டி -விஜயா பாரதி மகாகவி பாரதியின் பெயர்த்தியான திருமதி. விஜயா பாரதி, கனடாவில் வசிக்கிறார். பாரதியின் புகழ் பரப்பும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் அன்னாரது கட்டுரை இது... உங்களுக்கு என் தாத்தா பாரதியை நன்கு தெரிந்திருக்கலாம். அவரின் இறுதிக் காலத்தைப் பற்றி பலர் எழுதி இருக்கிறார்கள். ஆனால் என் பாட்டி செல்லம்மாள், என் தாத்தாவின் மரணத்துக்குப் பிறகு எப்படி வாழ்ந்தார், மறைந்தார் என்பது பலருக்கும் தெரியாது

Om NAMO NArendra MOdi Namaha*🔥🙏🪷 Shri Narendra Modi Ashtotra Namavali ஓம் ஸ்ரீ நரேந்த்ராய நமஹ (Salutations to the revered Narendra) 1. ஓம் விஶ்வ-நேத்ரே நமஹ – Salutations to the leader of the world stage. 2. ஓம் பாரத-பக்தாய நமஹ – Salutations to India’s devoted champion. 3. ஓம் ஜடூ-ஜப்பி-ப்ரதாய நமஹ – Salutations to the giver of world-famous hugs.

நான் கிட்டத்தட்ட 22 வயது வரை நாத்திகனாக இருந்தேன். கோவில்களுக்குச் செல்வது பிடிக்க வில்லை. நான் அவற்றை பிராமணர்கள் மற்றும் பிறர் பணம் சம்பாதிக்கும் இயந்திரங்களாகவே கருதினேன். ஒவ்வொரு அடியிலும் அவர்கள் எப்படி பணம் கேட்டார்கள் என்பதை நான் வெறுத்தேன்.