*ஏன் கனி தரும் மரங்கள் மட்டும் இல்லை ?* அரசும் மீடியாவும் பிரபலங்களும்... *'மரம் நிழல் தரும், காற்று தரும், மழை தரும்'னு சொல்லுவாங்க...!* ஆனா *"கனி தரும்னு மட்டும்" சொல்லவே மாட்டாங்க.* ஏன்? இப்ப சாலையோரம் வைத்திருக்கும் மரம், அரசுப் பள்ளி, மருத்துவமனை, அலுவலகங்கள் இங்கெல்லாம் இருக்கும் மரங்களைக் கவனியுங்கள்.... அங்கு *கனி தரும் மரங்கள் எதுவுமே இருக்காது.* ஏன்?

 










*ஏன் கனி தரும் மரங்கள் மட்டும் இல்லை ?*


அரசும்  

மீடியாவும்

பிரபலங்களும்...


*'மரம் நிழல் தரும், காற்று தரும், மழை தரும்'னு சொல்லுவாங்க...!*


ஆனா


 *"கனி தரும்னு மட்டும்" சொல்லவே மாட்டாங்க.*


ஏன்?


இப்ப 


சாலையோரம் வைத்திருக்கும்


 மரம், 

அரசுப் பள்ளி,

 மருத்துவமனை,

 அலுவலகங்கள்


 இங்கெல்லாம் இருக்கும் மரங்களைக் கவனியுங்கள்....


 அங்கு 

*கனி தரும் மரங்கள் எதுவுமே  இருக்காது.*


ஏன்? 


எங்கெல்லாம் 

*புளிய மரம் நிறைய உள்ள சாலைகள் உள்ளதோ*

அந்தச் சாலைகளையெல்லாம் 


விரிவு படுத்துகின்றேன் என்று 


அரசு 


அந்தப்

 புளிய மரங்களை வெட்டிவிடும்.


 விரிவாக்கத்திற்குப் பின் வெற்றுமரங்களையே நடும். 


*அரசும் தொண்டு நிறுவனங்களும் வெற்று மரங்களை மட்டுமே நடும்.*


பொதுமுடக்கத்தில் பல ஆயிரம் பேர் பல கல் தொலைவு

சாலையில் பசியோடு நடந்து சென்றனர்.


 அப்பொழுதும் கூட அந்த மக்கள் 

*காய் கனி மரங்கள் இருந்தால் பசிக்கு உணவாகுமே என்று சிந்திக்கவில்லை.*


எனக்குத் தெரிந்து ...


*ஏன் கனி தராத மரங்களை மட்டுமே நடுகின்றனர்* 

என எவரும் சிந்திக்கவில்லை.


நாமெல்லாம் குரங்கிலிருந்து பிறந்தோம் என்றால் *நமது முதன்மையான உணவே பழம்தானே.*


 ஆனால் நாமே சிந்திக்கவில்லையே. 


*மா பலா நாவல் அத்தி கொய்யா....*

 என்று எத்தனை மரங்கள் உள்ளன.


 அவையெல்லாம் ஏன் நடப்படவில்லை..?


 நம் சிந்தனையை எப்படி மழுங்கடித்தனர்.


*காரணம்...*

MMMC: mass media mind control.


*"மரம் கனி தரும்" என்ற வரியை எல்லா வகையிலும் மறைத்தனர்.*


தொடர்ந்து 

*மரம் நிழல் தரும் காற்று தரும் மழை தரும் என்று மட்டுமே* சொன்னார்கள்....


 அதை மட்டுமே மனிதனும் நினைத்துக்

 கனியை மறந்தான்.


கனி நமக்கான ஊட்டச்சத்து நிறைந்த உணவு .


ஆனால் இதையெல்லாம் தடுத்து 

*கார்ப்பரேட், ஊட்டச்சத்து உணவு என்று கண்ட குப்பைகளை நம்மிடம் திணிக்கிறது.*


 அதையெல்லாம் ஏதோ 

'ராயல் ஃபேமிலி' போல 'ஸ்டைலா' வாங்கித்

 தின்னு 

உடம்பு நாசமாப் போனதுதான் மிச்சம்.


 கார்ப்பரேட்டுக்கோ பெரும் இலாபம்.


நல்லா புரிஞ்சிக்குங்க...

 *'இயற்கையிலிருந்து நாம் இலவசமாக எதையும் பெற்றுவிடக்கூடாது' என்று கார்பரேட் தெளிவா செயல்படுறாங்க.*


மண்ணில் பிறந்த *அனைத்து உயிரினங்களுக்கும்* இயற்கையாகவே உணவு படைக்கப்பட்டிருக்கிறது.


அதை முழு முற்றாகத் தடுத்து,


*'பணத்தால் மட்டுமே எதையும் வாங்க முடியும்' என்ற நிலையை உருவாக்குகிறது கார்ப்பரேட்..*


நீங்கள் கற்பனை பண்ணிப் பாருங்கள்...


கருவை மரங்கள் உள்ள இடங்களிலும்

 மற்றும் 

அனைத்து இடங்களிலும் 


மா, பலா, வாழை, நாவல் போன்ற மரங்கள் இருந்தால் இந்த இடமே அருமையாகக் காட்சி அளிக்கும். 


தை மாதங்களில் பூத்துக் குலுங்கும்.


*உணவுப் பஞ்சம் என்ற ஒன்றே இருக்காது.*


நம் மனநிலையே

மகிழ்வாக இருக்கும்.


உண்மையான இன்பத்தை நாம் உணரலாம்.


நீங்கள் 

மீண்டும் மீண்டும்

 இதே போல் கற்பனை செய்து வெளி உலகத்துக்கு வந்து பாருங்கள்....


அப்பொழுது *'உங்களுக்குத. தெரிவதெல்லாம் கிரிக்கட் மைதானங்களும் கருவை மரங்களும் மற்ற வெற்று மரங்களும் உள்ள வறண்ட பூமியைத்தான்.'*


ஓர் உயர்ந்த மண்ணை

 இப்படி நரகமாக்கிவிட்டு,


 ரேசன் கடையில் புழுத்துப்போன அரிசிக்கு வரிசையில் நிற்கிறோம்.


*ஊடகங்கள் சொல்வன மட்டுமே உலகில் உள்ளதாகவும் நடப்பதாகவும் நம்புவது அறியாமையின் உச்சம்.*


அவை ஒட்டுமொத்த உண்மையையும் மறைத்துள்ளன.


*ஊடகம் ஓர் ஈவு இரக்கமற்ற மாபெரும் பயங்கரவாதி.*


கார்ப்பரேட் அறிவாளியல்ல... 


நாம் சிந்திக்கவில்லை அவ்வளவே.


*'மனிதன் சிந்திக்காதவரை' "இவையெல்லாம் தொடர்ந்து கொண்டேதான் இருக்கும்."*


இப்படிக்கு..


மரங்கள்..!


🌴🌾🌳🌲🦧🍍🥬🌤️💐


படித்தது...


பட்டது..


உணர்ந்தது..!

🙁🤨😒


சிந்திக்க வைத்த Nandha Kumar K G அவர்களுக்கு நன்றி.

Comments

Popular posts from this blog

8th August 11am, Delhi: MAHA PANCHAYAT- 100Cr HINDU Movement for Abolition of totally Discrminatory HR&CE Act.1951, all over India. Temples should function as independently as MOSQUES & CHURCHES. Money taken/swindled should be given back by Govts.

*RSS ப்ரார்தனா - RSS Prayer* *தமிழ் ஸ்லோகம் - தமிழ் மொழிபெயர்ப்பு* *நமஸ்தே ஸதா வத்ஸலே மாத்ரு பூமே* அன்பு காட்டும் தாய் நாடே! உன்னை நான் எப்பொழுதும் வணங்குகிறேன்🔥🙏🪷

*TENT DECOR CATERING EXPO 2024* - 4,5,6-Oct-2024 - Chennai Trade Centre, Nandambakkam Chennai