பெண் என்றும் அடிமையில்லை. அவளை யாரும் அடக்கவுமில்லை இறைவன், உலகின் மதிப்பு மிக்க, கிடைக்கப் பெறாத மற்றும் அபூர்வப் பொருள்கள் எல்லாவற்றையும் மறைத்தே வைத்து உள்ளான். அவைகள் கடினமானவைகள்.

 



👩 பெண் என்றும் அடிமையில்லை. 


அவளை யாரும் அடக்கவுமில்லை


இறைவன், உலகின் மதிப்பு மிக்க, கிடைக்கப் பெறாத மற்றும் 

அபூர்வப் பொருள்கள் எல்லாவற்றையும் மறைத்தே வைத்து உள்ளான். 


அவைகள் கடினமானவைகள். 


மிகுந்த சிரமத்திற்கு பிறகே அவைகள் கிடைக்கப் பெறும்.


1. "வைரம்" ஆழமான நிலத்தின் கீழே மூடப்பட்டு, பாதுகாக்கப் படுவதால் அதன் மதிப்பு அதிகம்.


2. "தங்கம்" பாறை அடுக்குகளால் மூடப்பட்ட நிலையில் உள்ளது.


தங்கத்தினை பெற கடினமாக உழைக்க வேண்டும்.


3. "முத்து" ஆழ்கடலில் மறைக்கப்பட்டு, அழகான சிப்பிக்குள் பாதுகாக்கப்படுவதால் 


அதன் மதிப்பும் உயர்வாகின்றது.


அது போலத் தான்.... பெண்களும்


இயற்கை அமைப்பிலே பெண்கள் மிக மென்மையானவர்கள். 


தோற்றத்தின் மென்மையைப் போலவே, உள்ளமும் மென்மை வய்ந்தது. 


அவர்கள் இதயம் மலரினும் மென்மை உடையது. 


அன்பு, ஆதரிப்பு, பராமரிப்பு இவையே பெண்ணுக்குரிய வேலைகளாக உள்ளன. 

இவற்றில் அவள் பெற்ற திறமையை வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்திலும் காணலாம். 


பெண்ணின் மனமும் செயலும், மலரும் மணமும் போலப் பிரிக்க முடியாதபடி ஒன்றாகிவிட்டன.


பெண்களிடம் தாய்மை உணர்ச்சி உண்டு. 


அந்தச் செயலால் ஆண்கள் வளர்கிறார்கள். 


அடுத்தாற் போல் இங்கிதம். 


இங்கிதம் என்பது பெண்களுடன் கூடப்பிறந்த பொக்கிஷமாகும். 


அவர்களின் உள்ளத்திலே இங்கிதம், 

பேச்சிலே இனிமை, 

நடையிலே நளினம், 

தோற்றத்திலே அழகு....


- இவை அத்தனையும் பெண்களிடம் உள்ள கலைச் செல்வங்கள்.


இப்படியொரு அற்புதமான படைப்பை ஆணுக்குத் துணையாகப் படைத்தானே 


அந்த ஏக இறைவனுக்கு வாழ்நாள் முழுக்க ஆண்வர்க்கம் நன்றி சொன்னாலும் போதாது. 


பெண் என்றும் அடிமையில்லை. 


அவளை யாரும் அடக்கவுமில்லை. 


அவளே அடங்கி வாழ்ந்தாள்.


''மானிட வரலாற்றின் பின்னால் ஒரு பெண் இருப்பது உண்மை 


அது, 

அம்மாவாக, 

மனைவியாக, 

சகோதரியாக........


இன்னும் இன்னும் நீளும் பட்டியல்கள் 👩


👩‍🦰 பெண்மையின் தன்மயில் : உள் முக பயணம் 👩‍🦰

Comments

Popular posts from this blog

*RSS ப்ரார்தனா - RSS Prayer* *தமிழ் ஸ்லோகம் - தமிழ் மொழிபெயர்ப்பு* *நமஸ்தே ஸதா வத்ஸலே மாத்ரு பூமே* அன்பு காட்டும் தாய் நாடே! உன்னை நான் எப்பொழுதும் வணங்குகிறேன்🔥🙏🪷

*TENT DECOR CATERING EXPO 2024* - 4,5,6-Oct-2024 - Chennai Trade Centre, Nandambakkam Chennai

எனது பாட்டி -விஜயா பாரதி மகாகவி பாரதியின் பெயர்த்தியான திருமதி. விஜயா பாரதி, கனடாவில் வசிக்கிறார். பாரதியின் புகழ் பரப்பும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் அன்னாரது கட்டுரை இது... உங்களுக்கு என் தாத்தா பாரதியை நன்கு தெரிந்திருக்கலாம். அவரின் இறுதிக் காலத்தைப் பற்றி பலர் எழுதி இருக்கிறார்கள். ஆனால் என் பாட்டி செல்லம்மாள், என் தாத்தாவின் மரணத்துக்குப் பிறகு எப்படி வாழ்ந்தார், மறைந்தார் என்பது பலருக்கும் தெரியாது