பெண் என்றும் அடிமையில்லை. அவளை யாரும் அடக்கவுமில்லை இறைவன், உலகின் மதிப்பு மிக்க, கிடைக்கப் பெறாத மற்றும் அபூர்வப் பொருள்கள் எல்லாவற்றையும் மறைத்தே வைத்து உள்ளான். அவைகள் கடினமானவைகள்.

 



👩 பெண் என்றும் அடிமையில்லை. 


அவளை யாரும் அடக்கவுமில்லை


இறைவன், உலகின் மதிப்பு மிக்க, கிடைக்கப் பெறாத மற்றும் 

அபூர்வப் பொருள்கள் எல்லாவற்றையும் மறைத்தே வைத்து உள்ளான். 


அவைகள் கடினமானவைகள். 


மிகுந்த சிரமத்திற்கு பிறகே அவைகள் கிடைக்கப் பெறும்.


1. "வைரம்" ஆழமான நிலத்தின் கீழே மூடப்பட்டு, பாதுகாக்கப் படுவதால் அதன் மதிப்பு அதிகம்.


2. "தங்கம்" பாறை அடுக்குகளால் மூடப்பட்ட நிலையில் உள்ளது.


தங்கத்தினை பெற கடினமாக உழைக்க வேண்டும்.


3. "முத்து" ஆழ்கடலில் மறைக்கப்பட்டு, அழகான சிப்பிக்குள் பாதுகாக்கப்படுவதால் 


அதன் மதிப்பும் உயர்வாகின்றது.


அது போலத் தான்.... பெண்களும்


இயற்கை அமைப்பிலே பெண்கள் மிக மென்மையானவர்கள். 


தோற்றத்தின் மென்மையைப் போலவே, உள்ளமும் மென்மை வய்ந்தது. 


அவர்கள் இதயம் மலரினும் மென்மை உடையது. 


அன்பு, ஆதரிப்பு, பராமரிப்பு இவையே பெண்ணுக்குரிய வேலைகளாக உள்ளன. 

இவற்றில் அவள் பெற்ற திறமையை வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்திலும் காணலாம். 


பெண்ணின் மனமும் செயலும், மலரும் மணமும் போலப் பிரிக்க முடியாதபடி ஒன்றாகிவிட்டன.


பெண்களிடம் தாய்மை உணர்ச்சி உண்டு. 


அந்தச் செயலால் ஆண்கள் வளர்கிறார்கள். 


அடுத்தாற் போல் இங்கிதம். 


இங்கிதம் என்பது பெண்களுடன் கூடப்பிறந்த பொக்கிஷமாகும். 


அவர்களின் உள்ளத்திலே இங்கிதம், 

பேச்சிலே இனிமை, 

நடையிலே நளினம், 

தோற்றத்திலே அழகு....


- இவை அத்தனையும் பெண்களிடம் உள்ள கலைச் செல்வங்கள்.


இப்படியொரு அற்புதமான படைப்பை ஆணுக்குத் துணையாகப் படைத்தானே 


அந்த ஏக இறைவனுக்கு வாழ்நாள் முழுக்க ஆண்வர்க்கம் நன்றி சொன்னாலும் போதாது. 


பெண் என்றும் அடிமையில்லை. 


அவளை யாரும் அடக்கவுமில்லை. 


அவளே அடங்கி வாழ்ந்தாள்.


''மானிட வரலாற்றின் பின்னால் ஒரு பெண் இருப்பது உண்மை 


அது, 

அம்மாவாக, 

மனைவியாக, 

சகோதரியாக........


இன்னும் இன்னும் நீளும் பட்டியல்கள் 👩


👩‍🦰 பெண்மையின் தன்மயில் : உள் முக பயணம் 👩‍🦰

Comments

Popular posts from this blog

நான் கிட்டத்தட்ட 22 வயது வரை நாத்திகனாக இருந்தேன். கோவில்களுக்குச் செல்வது பிடிக்க வில்லை. நான் அவற்றை பிராமணர்கள் மற்றும் பிறர் பணம் சம்பாதிக்கும் இயந்திரங்களாகவே கருதினேன். ஒவ்வொரு அடியிலும் அவர்கள் எப்படி பணம் கேட்டார்கள் என்பதை நான் வெறுத்தேன்.

8th August 11am, Delhi: MAHA PANCHAYAT- 100Cr HINDU Movement for Abolition of totally Discrminatory HR&CE Act.1951, all over India. Temples should function as independently as MOSQUES & CHURCHES. Money taken/swindled should be given back by Govts.

1961 ஆம் வருடம் வெளிவந்த தேன்நிலவு படத்தில் உள்ள பாட்டு பாடவா என்ற மிக இனிய பாடல்... ஜெமினி கணேசன் வைஜெயந்தி மாலா நடித்த பாடல்.... அவ்வளவு இனிமையான பாடல்... ஆனால் படத்தில் பார்த்தால் இரண்டு பேரும் குதிரை மேல் உட்கார்ந்து கொண்டு மெல்ல குதிரை ஓட்டிக்கொண்டு செல்வார்கள்... ஆனால் இந்த காலத்து பசங்களும் அந்த பாட்டுக்கு கலக்கலாக நடனமாடி விட்டார்கள்... சில பல சாட்களை நான் இங்கே பப்ளிஷ் செய்துள்ளேன் பாருங்கள்... அந்தப் பாடலில் நடித்த வைஜெயந்திமாலா அப்போது எவ்வளவு அழகாக இருந்துள்ளார் பாருங்கள் மேலே போட்டோக்களை பார்க்கவும்