தமிழக அரசியல் எத்தனையோ ஞானவான்களைப் பார்த்துள்ளது - ஆனால் அவர்களில் பலர் பயந்த சுபாவமாக இருந்தார்கள்! அல்லது நாலு கெட்ட வார்த்தையை அவர்கள் முன்பு கொச்சையாக வீசினால் நாகரிகம் கருதி கூச்சப்பட்டு ஒதுங்கிவிடுவார்கள்!

 






தமிழக அரசியல் எத்தனையோ ஞானவான்களைப் பார்த்துள்ளது - ஆனால் அவர்களில் பலர் பயந்த சுபாவமாக இருந்தார்கள்! அல்லது நாலு கெட்ட வார்த்தையை அவர்கள் முன்பு கொச்சையாக வீசினால் நாகரிகம் கருதி கூச்சப்பட்டு ஒதுங்கிவிடுவார்கள்! 


தமிழக அரசியல் எத்தனையோ தைரியசாலிகளைப் பார்த்துள்ளது - ஆனால் அவர்களது வீரம் என்பது சற்று முரட்டுத்தனம் கூடி இருந்ததே தவிர - பளிச் என்று நெற்றிப் பொட்டில் அடித்தாற்போல் பதில் சொல்லும் ஞானபலம் அவர்களிடம் இல்லை! 


பிரிவினைவாத, தேசவிரோத, ஹிந்து துவேஷ சக்திகள் இந்தப் போதாமையைத்தான் இதுவரை பயன்படுத்தி விளையாடின! வேரூன்றின! வளர்ந்தன! 


சொல்லுக்குச் சொல் - கருத்துக்குக் கருத்து எதிர்வாதம் வைப்பவனை - நாலு கெட்ட வார்த்தை, ஜாதிப் பெயர், குலத் தொழில் இவற்றில் ஏதோ ஒன்றைக் கொச்சைப்படுத்தி வைதால் - அவன் 'நமக்கேன் வம்பு' என்று ஒதுங்கிவிடுவான்! 


வெறும் முரட்டுத் தனம் மட்டுமே வீரம் என்று நினைப்பவனைத் தட்டி விழ வைப்பது எளிதானது - ஏதாவது ஒரு சொல் உணர்ச்சி வசப்பட்டு அவன் வாயை விடும்போது அதை வைத்தே எமோஷனலாக அவனை சிக்க வைக்கலாம்! 


இந்த இரண்டு வகை சூட்சுமங்களைக் கையாள்வதில் திராவிடியன்ஸ் கை தேர்ந்தவர்கள்! 


1) சொல்லுக்குச் சொல் இவர்களுக்கு அறிவுபூர்வமாக - தர்க்க ரீதியாக பதிலடி தந்து இவர்களை மண்டியிட வைக்கும் ஞானம். 


2) கை வைத்துப் பார்! நானாகத் தீண்ட மாட்டேன் - ஆனால் என்னைத் தீண்டினால் இறங்கி அடிப்பேன் - தைரியமிருந்தால் தொட்டுப் பார்! நீ அடித்தால் நானும் திருப்பி அடிப்பேன்! - என்னும் அசலான வீரம்! 


இந்த இரண்டும் கலந்த கலவை தமிழ்ச் சமூகம் நீண்ட நாளாகக் காணாதது! 


அதுவும் திராவிடியன்கள், லிபரல்கள், நக்சல்கள் என்ற மூன்று முடிச்சும் ஒன்றாகச் சேர்ந்த காலச் சூழலில் - மேற்கண்ட இரண்டு அம்சங்களும் பொருந்திய ஒரு சக்தி மிக்க தலைமைக்கு தமிழக தேசிய உணர்வாளர்கள் ஏங்கிக் காத்திருந்தனர்! 


நீண்ட பல ஆண்டுகளுக்கு முன்பு... 


பசும்பொன் முத்துராமலிங்கம் தேவர் திருமகனாரிடம் மேற்கண்ட இரண்டு அம்சங்களும் கூடி நின்றன! 


தேசியம் புறங்கை - தெய்வீகம் உள்ளங்கை என்று முழங்கிய அவர் காலத்தில் - பிரிவினைவாத ஹிந்து விரோத சக்திகள் வாய் திறக்க அஞ்சி ஒடுங்கிக் கிடந்தன! 


பசும்போன் தேவர் திருமகனாரைப் பார்த்திராத இன்றைய தலைமுறையினருக்கு... 


அவரது மறு உருவமாக... 


ஞானமும் வீரமும் கலந்த தேவர் திருமகனாரின் மறு உருவமாக...  


பிரிவினைவாத - ஹிந்து விரோத சக்திகளை அலற வைப்பவராக


இன்று அண்ணாமலை IPS விளங்குகிறார்! 


வாழ்க அண்ணாமலை நூறாண்டு! 


ஜெய் ஹிந்த்!

Comments

Popular posts from this blog

8th August 11am, Delhi: MAHA PANCHAYAT- 100Cr HINDU Movement for Abolition of totally Discrminatory HR&CE Act.1951, all over India. Temples should function as independently as MOSQUES & CHURCHES. Money taken/swindled should be given back by Govts.

*RSS ப்ரார்தனா - RSS Prayer* *தமிழ் ஸ்லோகம் - தமிழ் மொழிபெயர்ப்பு* *நமஸ்தே ஸதா வத்ஸலே மாத்ரு பூமே* அன்பு காட்டும் தாய் நாடே! உன்னை நான் எப்பொழுதும் வணங்குகிறேன்🔥🙏🪷

*TENT DECOR CATERING EXPO 2024* - 4,5,6-Oct-2024 - Chennai Trade Centre, Nandambakkam Chennai