தமிழக அரசியல் எத்தனையோ ஞானவான்களைப் பார்த்துள்ளது - ஆனால் அவர்களில் பலர் பயந்த சுபாவமாக இருந்தார்கள்! அல்லது நாலு கெட்ட வார்த்தையை அவர்கள் முன்பு கொச்சையாக வீசினால் நாகரிகம் கருதி கூச்சப்பட்டு ஒதுங்கிவிடுவார்கள்!

 






தமிழக அரசியல் எத்தனையோ ஞானவான்களைப் பார்த்துள்ளது - ஆனால் அவர்களில் பலர் பயந்த சுபாவமாக இருந்தார்கள்! அல்லது நாலு கெட்ட வார்த்தையை அவர்கள் முன்பு கொச்சையாக வீசினால் நாகரிகம் கருதி கூச்சப்பட்டு ஒதுங்கிவிடுவார்கள்! 


தமிழக அரசியல் எத்தனையோ தைரியசாலிகளைப் பார்த்துள்ளது - ஆனால் அவர்களது வீரம் என்பது சற்று முரட்டுத்தனம் கூடி இருந்ததே தவிர - பளிச் என்று நெற்றிப் பொட்டில் அடித்தாற்போல் பதில் சொல்லும் ஞானபலம் அவர்களிடம் இல்லை! 


பிரிவினைவாத, தேசவிரோத, ஹிந்து துவேஷ சக்திகள் இந்தப் போதாமையைத்தான் இதுவரை பயன்படுத்தி விளையாடின! வேரூன்றின! வளர்ந்தன! 


சொல்லுக்குச் சொல் - கருத்துக்குக் கருத்து எதிர்வாதம் வைப்பவனை - நாலு கெட்ட வார்த்தை, ஜாதிப் பெயர், குலத் தொழில் இவற்றில் ஏதோ ஒன்றைக் கொச்சைப்படுத்தி வைதால் - அவன் 'நமக்கேன் வம்பு' என்று ஒதுங்கிவிடுவான்! 


வெறும் முரட்டுத் தனம் மட்டுமே வீரம் என்று நினைப்பவனைத் தட்டி விழ வைப்பது எளிதானது - ஏதாவது ஒரு சொல் உணர்ச்சி வசப்பட்டு அவன் வாயை விடும்போது அதை வைத்தே எமோஷனலாக அவனை சிக்க வைக்கலாம்! 


இந்த இரண்டு வகை சூட்சுமங்களைக் கையாள்வதில் திராவிடியன்ஸ் கை தேர்ந்தவர்கள்! 


1) சொல்லுக்குச் சொல் இவர்களுக்கு அறிவுபூர்வமாக - தர்க்க ரீதியாக பதிலடி தந்து இவர்களை மண்டியிட வைக்கும் ஞானம். 


2) கை வைத்துப் பார்! நானாகத் தீண்ட மாட்டேன் - ஆனால் என்னைத் தீண்டினால் இறங்கி அடிப்பேன் - தைரியமிருந்தால் தொட்டுப் பார்! நீ அடித்தால் நானும் திருப்பி அடிப்பேன்! - என்னும் அசலான வீரம்! 


இந்த இரண்டும் கலந்த கலவை தமிழ்ச் சமூகம் நீண்ட நாளாகக் காணாதது! 


அதுவும் திராவிடியன்கள், லிபரல்கள், நக்சல்கள் என்ற மூன்று முடிச்சும் ஒன்றாகச் சேர்ந்த காலச் சூழலில் - மேற்கண்ட இரண்டு அம்சங்களும் பொருந்திய ஒரு சக்தி மிக்க தலைமைக்கு தமிழக தேசிய உணர்வாளர்கள் ஏங்கிக் காத்திருந்தனர்! 


நீண்ட பல ஆண்டுகளுக்கு முன்பு... 


பசும்பொன் முத்துராமலிங்கம் தேவர் திருமகனாரிடம் மேற்கண்ட இரண்டு அம்சங்களும் கூடி நின்றன! 


தேசியம் புறங்கை - தெய்வீகம் உள்ளங்கை என்று முழங்கிய அவர் காலத்தில் - பிரிவினைவாத ஹிந்து விரோத சக்திகள் வாய் திறக்க அஞ்சி ஒடுங்கிக் கிடந்தன! 


பசும்போன் தேவர் திருமகனாரைப் பார்த்திராத இன்றைய தலைமுறையினருக்கு... 


அவரது மறு உருவமாக... 


ஞானமும் வீரமும் கலந்த தேவர் திருமகனாரின் மறு உருவமாக...  


பிரிவினைவாத - ஹிந்து விரோத சக்திகளை அலற வைப்பவராக


இன்று அண்ணாமலை IPS விளங்குகிறார்! 


வாழ்க அண்ணாமலை நூறாண்டு! 


ஜெய் ஹிந்த்!

Comments

Popular posts from this blog

எனது பாட்டி -விஜயா பாரதி மகாகவி பாரதியின் பெயர்த்தியான திருமதி. விஜயா பாரதி, கனடாவில் வசிக்கிறார். பாரதியின் புகழ் பரப்பும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் அன்னாரது கட்டுரை இது... உங்களுக்கு என் தாத்தா பாரதியை நன்கு தெரிந்திருக்கலாம். அவரின் இறுதிக் காலத்தைப் பற்றி பலர் எழுதி இருக்கிறார்கள். ஆனால் என் பாட்டி செல்லம்மாள், என் தாத்தாவின் மரணத்துக்குப் பிறகு எப்படி வாழ்ந்தார், மறைந்தார் என்பது பலருக்கும் தெரியாது

Om NAMO NArendra MOdi Namaha*🔥🙏🪷 Shri Narendra Modi Ashtotra Namavali ஓம் ஸ்ரீ நரேந்த்ராய நமஹ (Salutations to the revered Narendra) 1. ஓம் விஶ்வ-நேத்ரே நமஹ – Salutations to the leader of the world stage. 2. ஓம் பாரத-பக்தாய நமஹ – Salutations to India’s devoted champion. 3. ஓம் ஜடூ-ஜப்பி-ப்ரதாய நமஹ – Salutations to the giver of world-famous hugs.

The sound of gunfire pierced the air of the quiet valleys. A terrorist attack took place near the Pahalgam market area — *turning a place like paradise into hell.* People screamed. Blood flowed. There was chaos everywhere. *👺 "The terrorists were asking for names and religions and then firing bullets."*