தேனோ, திரவியமோ தடவிய வார்த்தைகளைத் தேடுபவர்கள் இப்பொழுதே *விலகிச் சென்று* விடுங்கள். சில வருடங்களுக்கு முன் சென்னை *மேன்சன்களில்* தங்கியிருந்தவர்களுக்குக் கொஞ்சம் புரியும்.

 

ஸ்வச் பாரத்.


*என்னவோ எழவு புரியாத வார்த்தையில் #Swatch_Bharath  என்றான்,*  


எங்கிருந்தோ வந்தான்.


*இடைச்சாதி நான் என்றான்.*



*வலியை உணர்ந்த* ஒரு கிராமத்தானாக எழுதுகிறேன். 


தேனோ, திரவியமோ தடவிய வார்த்தைகளைத் தேடுபவர்கள் இப்பொழுதே *விலகிச் சென்று* விடுங்கள்.


சில வருடங்களுக்கு முன் சென்னை *மேன்சன்களில்* தங்கியிருந்தவர்களுக்குக் கொஞ்சம் புரியும். 


காலை எழுந்ததும், கழிவறையிலிருந்து ஒருவன் வெளியே வரும் வரை பிட்டத்தை இறுக்கிக் கொண்டு நெளிந்து கொண்டு காத்திருக்கும் அவஸ்த்தை. ஒவ்வொரு மனிதனும் ஒரு முறையாவது *மலத்தை அடக்கிக் கொண்டு*  அரை மணிநேரம் அலைக்கழிந்திருப்பான். 


கிராமங்களில், நம் சகோதரிகள், அம்மாக்கள், காலை *விடிவதற்குள்* காலைக் கடனைக் கழித்து விட வேண்டும். 

'

ஏதேனும் காரணத்தினால், தவறிவிட்டால், அன்று இரவு இருட்டும் வரை அடக்கிக் கொண்டே திரியணும். கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்.  நம்மால் அரை மணிநேரம் அடக்க முடியுமா என்று! 


சரி இரவு வந்தாச்சு, அடக்கி வைத்திருந்ததைக் கழிக்க ஓட்டமும் நடையுமாகச் சென்று சாலையோரம் உட்காரணும். 


அதுவும் சேலையை தரையைத் தொட்டும் தொடாமல் மானத்தையும் மலத்தையும் மறைத்துக் கொண்டு. காலையிலிருந்து அடக்கி வைத்திருந்ததை அவசரமாகக் கழிக்கும் போது, சாலையில் பஸ்ஸோ, வேனோ ஹைபீம் லைட் அடித்துக் கொண்டு கடப்பார்கள். தூரத்தில் தெரியும் வெளிச்சம் நெருக்கமாகத் தெரிந்தவுடன் பாதி கழித்துக் கொண்டிருக்கும் போதே உயிர் போக சட்டென எழுந்து மானத்தை மறைக்கணும். அப்படி பாதியில் எழும் போது அந்தப் பெண்ணின் மனதில் ஏற்படும் வலியை நினைத்துப் பார்த்திருப்பீர்களா என்றாவது ஒரு நாள்?


இதில் இன்னும் கொடுமை என்ன தெரியுமா? இருட்டில் இடம் பார்த்து உட்காருவதற்குள் ஏற்கனவே வந்து சென்றவர்களின் மலங்களை பல சமயங்களில் மிதித்துத் தொலைக்கணும். 


ஒரு சில மணி நேரத்திற்குள் ஒரு கூட்டமே அந்த இடத்திற்கு வந்து செல்லும் போது அங்கே எழும் கடும் துர்நாற்றத்தைச் சகித்துக் கொண்டு கழிக்க வேண்டும். இத்தனையும் தாண்டி வயிற்று பாரத்தை இறக்கி வைத்துவிட்டு, கழுவிக் கொள்ள வீடு வரை அரை மைல் நடந்து போகணும். 


படிக்கும் போதே அருவருப்பாக இருக்கிறதா? இருக்கும். 


ஆனால், இது நம் தேசத்து கிராமத்துப் பெண்களுக்கு அன்றாடம் தவிர்க்க முடியாத நிகழ்வு. இப்பொழுதும் கூட மோசமில்லை. 


இப்படியே படிப்பதை விட்டுவிட்டு *விலகி விடுங்கள்*. 


அடுத்த வரிகள் *இன்னும் மோசமாக* இருக்கப் போகின்றன. 


காலையிலிருந்து அடக்கி வைத்து இருட்டும் போது ஒதுங்கக் காத்திருக்கும் சகோதரிகளின் மனதிலும் வயிற்றிலும் விழும் பேரிடி என்ன தெரியுமா? இரவில் அடித்து ஊத்தும் மழை! கொஞ்சம் நினைத்துப் பாருங்கள் அவர்களின் மனநிலையை. வேறு வழியில்லாமல் மழையில் கூட ஒதுங்கினால், கீழே கிடக்கும் எல்லாம் கரைந்து கால்களில் புரண்டு ஓடும். அந்த இருட்டில் பாம்புகளும் பூரான் போன்ற ஊர்வனவைகளும் அவர்கள் அவசரமாக அமர்ந்த வேலைகளில் கால்களில் ஏறி ஊறிச் செல்லும் போது ஏற்படும் நரக வேதனையை நகரத்திலிருக்கும் நமக்கு சத்தியமாகப் புரியாது. 


இப்பொழுதும் கூட ஒருவேளை வயிற்றுப் போக்கு போகும் காலங்களில் கிராமத்துப் பெண்களின் நிலை என்னவாக இருக்கும் என்று உங்களுக்கு யோசிக்கத் தோன்றியிருக்காது.   


ஏனெனில், நாமெல்லாம் உலகப் பொருளாதாரமும், பெண்ணீயமும் *பேப்பர்களில் பேசுபவர்கள்.* நமக்கு வலிக்காது.


மகளோ, சகோதரியோ பெரிய மனுஷியான தருணங்களில் அவர்களின்  நடவடிக்கைகளைக் கவனித்தவராக இருப்பின், கொஞ்சமே கொஞ்சம் நான் சொல்லப் போவது புரியலாம். மாதவிடாய் காலங்களில் இருட்டில் ஒரு பெண் தன் கழிவுகளைக் கழித்து வரும் கொடுமையை இது நாள் வரை யாராவது அக்கறையுடன் களைய முற்பட்டிருக்கிறோமா? வாய் கிழிய, தொண்டை புடைக்க, பெண் விடுதலையும், தனிமனித சுதந்திரமும் இணையத்தில் பேசும் நாம் கடந்த அரை நூற்றாண்டு காலத்தில் இதைப் பற்றி என்றாவது பேசியிருக்கிறோமா? 


*65 ஆண்டு காலமாகப் போட்ட இந்திய பட்ஜெட்டினால் கிராமத்து பெண்களின் இந்தச் சிரமத்தைப் போக்க ஒரு ரூபாயாவது செலவு செய்திருக்கிறோமா?* 


ஆடு மாடுகள் நாய்களுக்கு இருக்கும் சுதந்திரம் கூட மனுச ஜென்மமாகப் பிறந்து தொலைந்த இந்த பெண்களுக்கு இல்லையே என்று ஒருநாள் *ஒருபொழுதாவது மாதர் சங்கங்கள் ஒரு வார்த்தை பேசியிருக்குமா?* 


33 சதவீத ஒதுக்கீடுக்கு வாய் கிழிய சபைகளில் சண்டை போட்ட புண்ணியவான்கள் யாராவது இவர்கள் ஒதுங்க 3க்கு 3 அடி இடம் ஒதுக்கணும்னு பேசினார்களா? 


*இதோ ஒரு மனுசன் வந்தான்,* 


எங்கிருந்தோ வந்தான்.


இடை சாதி நான் என்றான்.


*என்னவோ எழவு புரியாத வார்த்தையில் #Swatch_Bharath  என்றான்,*  


வழக்கம் போல நாம ஸ்வச்சு பாரத்து _ச்சு பாரத்து என்று *அதைக் கிண்டல் பண்ணினோம்.* 


அதுவும் தமிழ் நாட்டில் மட்டுமே அதை அதிக அளவில் கிண்டலும் கேலியும் செய்தோம். இதுவும் அரசியல் செய்யப்பட்டது.


அதிலும் *அரசியலை மட்டும் பார்த்தோம்*. 


அந்த மனுசன், இத்தனை கிராமத்துப் பெண்களின், ஒரு *மகனாக, சகோதரனாக, மகள்களின் அப்பனாக நின்று* அவர்களின் துயரம் *நீக்கியிருக்கிறான்.*


கட்டி முடிக்கப்பட்ட *கழிப்பறைகள் எத்தனையோ லட்சமாம்.* 


எண்ணிக்கை அவசியமில்லை. 


ஆனால் கட்டிக் காக்கப்பட்டது *பல கோடிப் பெண்களின் மானம்*.


மழைச் சேற்றிலும் பாம்புகளுக்கு நடுவிலும் கழித்துக் கொண்டிருந்த பெண்களுக்கு மட்டுமே தெரியும். இந்தக் *கழிவறைகள் எத்தனை பெரிய வரம் என்று!*


*ஒரு மகனாக, ஒரு தகப்பனாக, ஒரு சகோதரனாக, இத்தனை கோடி கிராமத்துப் பெண்களின் பரிதவிப்பைப் போக்கிய அந்த ஒற்றைக் காரியம் போதும்டா சாமி!* 


*இந்த ஒற்றைச் சாதனைக்கே பாரத அன்னை Narendra Modi   என்ற ஒரு மகத்தான பிள்ளையைப் பெற்றெடுத்ததற்கு மார்பும் வயிறும் குளிர்ந்திருப்பாள்.*


பாரதி தனக்காக வேண்டியதை நான் *இவனுக்காக* வேண்டுகிறேன்…


  “………………….இவனை(மோடியை)

 உய்யக் கொண்டருள வேண்டும் – அடி

உன்னைக் கோடி முறை தொழுவேன் – இனி

வையத் தலைமை இவனுக்கு அருள்வாய்!

அன்னை வாழி! நின்ன தருள் வாழி!” 


- திரு ஆனந்தன் அமிர்தன் 


#வந்தே_மாதரம்


🙏🙇‍♂️

Comments

Popular posts from this blog

எனது பாட்டி -விஜயா பாரதி மகாகவி பாரதியின் பெயர்த்தியான திருமதி. விஜயா பாரதி, கனடாவில் வசிக்கிறார். பாரதியின் புகழ் பரப்பும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் அன்னாரது கட்டுரை இது... உங்களுக்கு என் தாத்தா பாரதியை நன்கு தெரிந்திருக்கலாம். அவரின் இறுதிக் காலத்தைப் பற்றி பலர் எழுதி இருக்கிறார்கள். ஆனால் என் பாட்டி செல்லம்மாள், என் தாத்தாவின் மரணத்துக்குப் பிறகு எப்படி வாழ்ந்தார், மறைந்தார் என்பது பலருக்கும் தெரியாது

Om NAMO NArendra MOdi Namaha*🔥🙏🪷 Shri Narendra Modi Ashtotra Namavali ஓம் ஸ்ரீ நரேந்த்ராய நமஹ (Salutations to the revered Narendra) 1. ஓம் விஶ்வ-நேத்ரே நமஹ – Salutations to the leader of the world stage. 2. ஓம் பாரத-பக்தாய நமஹ – Salutations to India’s devoted champion. 3. ஓம் ஜடூ-ஜப்பி-ப்ரதாய நமஹ – Salutations to the giver of world-famous hugs.

The sound of gunfire pierced the air of the quiet valleys. A terrorist attack took place near the Pahalgam market area — *turning a place like paradise into hell.* People screamed. Blood flowed. There was chaos everywhere. *👺 "The terrorists were asking for names and religions and then firing bullets."*