சார் ஓரு நிமிடம் ப்ளீஸ் .. கொஞ்சம் பேசி யோசிப்போமா ??? 15 நிமிடமா? அல்லது நம் ஆயுளா? எது வேண்டும் CHOICE IS YOURS !!!

 

சார் ஓரு நிமிடம் ப்ளீஸ் .. கொஞ்சம் பேசி யோசிப்போமா ???



15 நிமிடமா? அல்லது நம் ஆயுளா? 

எது வேண்டும் 

CHOICE IS YOURS !!!  


ஒரு நிமிடம் ப்ளீஸ்.!

👏👏👏👏👏👏👏

*வாகனத்தில் 50 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் ஒருவர் ஒரு மணிநேரத்தில் 50 கிலோமீட்டர் தூரம் கடந்து இருப்பார்.*


*அப்படி போகும் போது அலைபேசி அடிக்க, அதை அப்படியே பேசியவாரே செல்கிறார் (இப்படி செல்லுவதால் 3 நிமிடம் சேமித்து உள்ளார்.*


*அப்படி போகும் போது ஒரு இடத்தில் ஒரு 🚛 லாரியை முந்திசெல்ல முயலுகிறார், அப்போது ஒரு 🚌 பேருந்து வேகமாக வருகிறது அதை பொருட்படுத்தாமல் 🚛 லாரியை முந்திவிட்டார், இதனால் அவருக்கு 3 நிமிடம் மிச்சம் ஆகியது*


*இன்னொரு இடத்தில் டிராபிக் ஜாம், அதையும் பொருட்படுத்தாமல் புகுந்துகிகுந்து சென்றுவிட்டார். இதனால் அவருக்கு 3 நிமிடம் மிச்சம் ஆகியது*


*ஒரு இடத்தில் சிக்னலில் மஞ்சள் விழுந்து, சிவப்பு விளக்கு விழுகிறது, அதிலும் நிற்காமல் சொல்லுகிறார். இதனால் அவருக்கு இங்கேயும் 3 நிமிடம் மிச்சம் ஆகியது*


*ஆக மொத்தம் 12 நிமிடங்கள் மிஞ்சம் ஆகிவிட்டது.*


*இந்த 4-க்கு இடத்தில் ஏதாவது ஒரு இடத்தில் விபத்துக்கு உள்ளாகிறார் என வைத்துக் கொள்ளுவோம், அப்படியென்றால் அவருடைய குடும்பத்தின் வாழ்க்கை தரம் 5 ஆண்டுக்கு பின்னோக்கி செல்லுகிறது, மேலும் உடலில் பல்வேறு அவஸ்தைகள், பணம் செலவு, வருவாய் இழப்பு, குடும்ப நிம்மதி இழப்பு மற்றும் பல*


*ஏதாவது ஒரு இடத்தில் விபத்தில் இறந்துவிட்டார் என வைத்துக் கொள்ளுவோம். அவருடைய குடும்பத்தின் வாழ்க்கை தரம் 20 ஆண்டுக்கு பின்னோக்கி செல்லுகிறது.*


*5 மற்றும் 20 ஆண்டுகள் வாழ்க்கை தரம் பின்னோக்கி செல்கிறது என்பது ஓர் ஆய்வறிக்கை ஆகும்.*


*இறந்தால் காப்பீடு மூலமாக இழப்பீடு கிடைக்கலாம்.*


*ஆனால் மனைவிக்கு கணவர் கிடைப்பாரா?*


*பிள்ளைகளுக்கு அப்பா கிடைப்பாரா?*


*பெற்றோருக்கு பிள்ளை கிடைப்பாரா?*

*உடன்பிறப்புக்கு சகோதரன் கிடைப்பாரா?*


*ஒரு மணிநேரத்தில் 50 கிலோமீட்டர் தூரம் சென்றோம் என்றால், 12 நிமிடத்தில் 10 கிலோமீட்டர் (50 கிலோமீட்டர் / 60 நிமிடம் * 12 நிமிடம். அதாவது 50/60*12= 10 கிலோமீட்டர்) தூரம் தான்*


*10 கிலோமீட்டர் தூரம் முந்தி செல்வதில் எதையும் சாதித்துவிடுவது இல்லை அல்லவா?*


*சில நேரங்களில் நேரம் ஆகிட்டு என்று வேகமாக போகிறோம், அப்படி செல்வதில் 5 நிமிடம் சேமிக்கிறோம் என்றால் 4.15 கிலோமீட்டர் தான் முன்னால் சென்று உள்ளோம். அப்படி வேகமாக செல்வதினால் நமக்கு நாமே எமனாகி விடுகிறோம் அல்லது எதிரே வந்தவருக்கோ நாம் எமனாய் மாறிவிடுகிறோம்.*


*சிந்திப்பீர்*

*செயல்படுவீர்*


*கருத்து:*


*வேகம் என்பது விவேகம் அல்ல.*


*5 நிமிடத்தில் ஒன்றுமே சாதித்துவிட போவதில்லை.*


*வேகத்தினால் நம் குடும்பத்தினரை அல்லது எதிரே வந்த நபரின் குடும்பத்தினரை கஷ்டப்படுத்தாதீர்கள்*


*ஒரு இடத்திற்கு செல்ல வேண்டும் என்றால் 5 நிமிடம் முன்னதாகவே கிளம்பினால் எவ்வித பிரச்சினையும் இல்லை அல்லவா, ஆதலால் சரியான நேரத்தில் அல்லது 5 முதல் 10 நிமிடம் முன்கூட்டியே கிளம்புவோம்.*


*நம்மில் இனி மாற்றம் உருவாக்குவோமா?*


*திருப்புமுனையை செயல்படுத்துவோம்*                      


*விவேகமற்ற அதிவேகத்தில் செல்லும் முன், நமது குழந்தைகளையும் குடும்பத்தையும் ஒருமுறை நினைத்துப் பார்த்தால்., வேகம் தானாக குறைந்து விடும்!*

Comments

Popular posts from this blog

நான் கிட்டத்தட்ட 22 வயது வரை நாத்திகனாக இருந்தேன். கோவில்களுக்குச் செல்வது பிடிக்க வில்லை. நான் அவற்றை பிராமணர்கள் மற்றும் பிறர் பணம் சம்பாதிக்கும் இயந்திரங்களாகவே கருதினேன். ஒவ்வொரு அடியிலும் அவர்கள் எப்படி பணம் கேட்டார்கள் என்பதை நான் வெறுத்தேன்.

8th August 11am, Delhi: MAHA PANCHAYAT- 100Cr HINDU Movement for Abolition of totally Discrminatory HR&CE Act.1951, all over India. Temples should function as independently as MOSQUES & CHURCHES. Money taken/swindled should be given back by Govts.

1961 ஆம் வருடம் வெளிவந்த தேன்நிலவு படத்தில் உள்ள பாட்டு பாடவா என்ற மிக இனிய பாடல்... ஜெமினி கணேசன் வைஜெயந்தி மாலா நடித்த பாடல்.... அவ்வளவு இனிமையான பாடல்... ஆனால் படத்தில் பார்த்தால் இரண்டு பேரும் குதிரை மேல் உட்கார்ந்து கொண்டு மெல்ல குதிரை ஓட்டிக்கொண்டு செல்வார்கள்... ஆனால் இந்த காலத்து பசங்களும் அந்த பாட்டுக்கு கலக்கலாக நடனமாடி விட்டார்கள்... சில பல சாட்களை நான் இங்கே பப்ளிஷ் செய்துள்ளேன் பாருங்கள்... அந்தப் பாடலில் நடித்த வைஜெயந்திமாலா அப்போது எவ்வளவு அழகாக இருந்துள்ளார் பாருங்கள் மேலே போட்டோக்களை பார்க்கவும்