இளைஞர்களின் குரலாக பாஜக திருநெல்வேலி கங்கைகொண்டான் சிப்காட் தொழிற்சாலைகளில் ஏற்கனவே உத்திரவாதம் அளித்த குறிப்பின்படி உள்ளூர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டி மாபெரும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் திருநெல்வேலி வடக்கு மாவட்டம் பாரதிய ஜனதா கட்சி சார்பாக நடைபெற்றது.

 

இளைஞர்களின் குரலாக பாஜக 


திருநெல்வேலி கங்கைகொண்டான் சிப்காட் தொழிற்சாலைகளில் ஏற்கனவே உத்திரவாதம் அளித்த குறிப்பின்படி உள்ளூர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டி மாபெரும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் திருநெல்வேலி வடக்கு மாவட்டம் பாரதிய ஜனதா கட்சி சார்பாக  நடைபெற்றது. 


பொதுவாகவே தென் மாவட்டங்களில் தொழிற்சாலைகள் மிகக் குறைவு அதனால் இளைஞர்கள் மனநிலை சில சமூக விரோதிகளால் சிந்திக்கவிடாமல் போதை கலாச்சாரம், கொலைகள் , 

ஜாதிய பிரச்சினைகளுக்குள் சிக்குகின்றன.


இதற்கு ஒரு காரணம்

வேலைவாய்ப்பின்மையும்.


 20 வருடங்களுக்கு முன்பே கங்கைகொண்டான் சிப்காட் தொழிற்சாலை வளாகம் ஆரம்பிக்கப்பட்டது.

 அதற்காக உள்ளூர் மக்களின் நிலங்கள் பயன்படுத்த பட்டன,

அவர்களுக்கு வேலை வாய்ப்பு உறுதி அளித்ததின் அடிப்படையில் தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன ஆனால் சிப்காட் உள்ளூர் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை அளிக்காமல் அறிமுகமே இல்லாத மேற்கு வங்காளம் என்று சொல்லி  போலியான முகவரியுடன் சுற்றி வரும் பங்களாதேஷ் அந்நியர்களுக்கு வேலைகளை வழங்கியும் உள்ளூர் இளைஞர்களின் வளர்ச்சியின் எந்த முன்னேற்ற முயற்சி இல்லாமல் செயல்பட்டு வருகிறது இதை கண்டித்து ஒரு மாதம் முன்பே  கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் தயாரானது ஆனால் இந்த த்ராவிடன்ஸ் மாடல் தடை விதித்தது.


மதுரை ஐகோர்ட் வரை சென்று ஆர்ப்பாட்டத்திற்கான உத்தரவை பெற்று நடைபெற்றுள்ளது இன்று. 


கங்கைகொண்டான் சிப்காட் வளாகத்தில் 

இதுவரை 156 தொழிற்சாலைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

60 தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன.

30 தொழிற்சாலைகள் கட்டிட கட்டுமானத்தில் இருக்கின்றன.

66 தொழிற்சாலைகள் அனைத்து வேலைகளும் முடிந்து தயாராகி இருக்கின்றன. 


19-11-22 அன்று சிப்காட் வளாகத்தில் மத்திய அரசின் பிரதான் மந்திரி கிசான் சம்படா யோஜனா திட்டத்தின் நிதி உதவியின் கீழ் 77 கோடி ரூபாய்க்கான 50 ஏக்கரில் 'உணவு பூங்கா' ஏற்படுத்த செயல்திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. 


இதே போல நாங்குநேரி சிப்காட் 1999 ஆண்டு தொடங்கப்பட்டது 2500 உள்ளூர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் என்று அறிவிக்கப்பட்டு தற்போது வரை கிடப்பில் உள்ளது. 


தற்போதைய த்ரவிடியன்ஸ் மாடல் அமைச்சர் தென் மாவட்டங்களில் 913 கோடி ரூபாயில் 7300 இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்று கூறி வருகின்றனர் அதில் எந்தவித முன்னேற்றமும் இல்லை பொய்யான வாக்குறுதியாகவே கடந்து விடுகிறது. 


சிறு பெரு தொழில் முனைவர்கள் 

தென் மாவட்டங்களில் கவனம் கொடுத்து இளைஞர்களின் வாழ்வில் முன்னேற்றத்துடன் தொழில் வளர்ச்சியும் பெற வழிவகை செய்ய வேண்டும். 


தென் மாவட்டங்கள் பொதுமக்களின் பார்வையில் முன்பு இருந்ததை விட தற்போது படித்த இளைஞர்கள் அதிகம் பேர் வெளிநாடுகள் வேலைக்கு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.


அரசும் தொழில் முனைவர்களும் கவனம் செலுத்துவது நல்லது.

Comments

Popular posts from this blog

நான் கிட்டத்தட்ட 22 வயது வரை நாத்திகனாக இருந்தேன். கோவில்களுக்குச் செல்வது பிடிக்க வில்லை. நான் அவற்றை பிராமணர்கள் மற்றும் பிறர் பணம் சம்பாதிக்கும் இயந்திரங்களாகவே கருதினேன். ஒவ்வொரு அடியிலும் அவர்கள் எப்படி பணம் கேட்டார்கள் என்பதை நான் வெறுத்தேன்.

8th August 11am, Delhi: MAHA PANCHAYAT- 100Cr HINDU Movement for Abolition of totally Discrminatory HR&CE Act.1951, all over India. Temples should function as independently as MOSQUES & CHURCHES. Money taken/swindled should be given back by Govts.

1961 ஆம் வருடம் வெளிவந்த தேன்நிலவு படத்தில் உள்ள பாட்டு பாடவா என்ற மிக இனிய பாடல்... ஜெமினி கணேசன் வைஜெயந்தி மாலா நடித்த பாடல்.... அவ்வளவு இனிமையான பாடல்... ஆனால் படத்தில் பார்த்தால் இரண்டு பேரும் குதிரை மேல் உட்கார்ந்து கொண்டு மெல்ல குதிரை ஓட்டிக்கொண்டு செல்வார்கள்... ஆனால் இந்த காலத்து பசங்களும் அந்த பாட்டுக்கு கலக்கலாக நடனமாடி விட்டார்கள்... சில பல சாட்களை நான் இங்கே பப்ளிஷ் செய்துள்ளேன் பாருங்கள்... அந்தப் பாடலில் நடித்த வைஜெயந்திமாலா அப்போது எவ்வளவு அழகாக இருந்துள்ளார் பாருங்கள் மேலே போட்டோக்களை பார்க்கவும்