அந்த காலம் தான் நன்றாக இருந்தது.. ஆரத்தி எடுக்க போட்டி போட்ட மதினிமார்கள் இருந்தார்கள்.. தாய்க்கு நிகராய் காவல் காத்த தாய் மாமன்கள் இருந்தார்கள்.. ஜரிகை குறைவான வேட்டி வாங்கி தந்ததற்காக சண்டை போட்ட பங்காளிகள் இருந்தார்கள்..

 

வாழ்கை வாழுகிறோமா!!! வசிக்கிறோமா???


அந்த காலம் தான் நன்றாக இருந்தது..


ஆரத்தி எடுக்க போட்டி போட்ட மதினிமார்கள் இருந்தார்கள்..


தாய்க்கு நிகராய் காவல் காத்த தாய் மாமன்கள் இருந்தார்கள்..


ஜரிகை குறைவான வேட்டி வாங்கி தந்ததற்காக சண்டை போட்ட பங்காளிகள் இருந்தார்கள்..


இழவு விழுந்த வீடுகளில் உறவினர் இடுகாடு வரை போனார்கள்..


அடுத்தடுத்து பெண்களுக்கு திருமணம் செய்தும்


மாறி மாறி பிள்ளைப் பேற்றிற்கு பெண்கள்


வந்தாலும் அம்மாக்கள் ஓய்வின்றி உழைத்தார்கள்


ஐந்தாறு பிள்ளைகள் இருந்தாலும் அப்பாவிற்கு மன அழுத்தங்கள் இல்லை..


ஒரே சோப்பை குடும்பம் முழுதும் உபயோகித்தும் தோல் நோய்கள் வரவில்லை..


கண்டதை உண்டாலும் செரித்தது.


தொலைக்காட்சி செய்திகளில் உண்மை இருந்தது..


ஃபேன் இல்லாமல் உறக்கம்.வந்தது..


எங்கோ ஏதோ ஒரு மூலையில் மருத்துவமனையும் ஹோட்டலும். இருந்தது..


வெயிலாலும் மழையாலும் பாதிப்பு இல்லை..


பிள்ளைப்பேறு செலவில்லாமல் சுகமாய் இருந்தது..


கல்வி கட்டணம் இல்லாமல் கிடைத்தது..


மாணவர்கள் ஆசிரியரிடம் அன்பாய் பணிவாய் இருந்தார்கள்..ஆசிரியைகளிடம்.


எளிமை இருந்தது.. பெரிவர்களின் உடையைப் போட தயங்கியதில்லை..


அப்பா சொன்னால் அந்த வார்த்தை மறுக்காமல் ஏற்கப்பட்டது..


பெண் பார்க்க வந்தவனை பிடித்திருக்கிறது என்று சொல்ல வெட்கப்பட்டோம்...


காவிரிக் கரையில் பயமின்றி குளித்தோம் ஆற்று நீர் சுத்தமாய் இருந்தது..


ஆண்கள் தான் சைக்கிள் ஓட்ட கற்றுக் கொடுத்தார்கள்..


மிகச்சிறிய வயதில் எல்லாம் பால் பேதங்கள் தோன்றவில்லை..


மொத்தத்தில் அப்போது வாழ்ந்தோம் இப்பொழுது வசிக்கிறோம் அவ்வளவே...


ஆமாம் தானே???

Comments

Popular posts from this blog

*RSS ப்ரார்தனா - RSS Prayer* *தமிழ் ஸ்லோகம் - தமிழ் மொழிபெயர்ப்பு* *நமஸ்தே ஸதா வத்ஸலே மாத்ரு பூமே* அன்பு காட்டும் தாய் நாடே! உன்னை நான் எப்பொழுதும் வணங்குகிறேன்🔥🙏🪷

*TENT DECOR CATERING EXPO 2024* - 4,5,6-Oct-2024 - Chennai Trade Centre, Nandambakkam Chennai

எனது பாட்டி -விஜயா பாரதி மகாகவி பாரதியின் பெயர்த்தியான திருமதி. விஜயா பாரதி, கனடாவில் வசிக்கிறார். பாரதியின் புகழ் பரப்பும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் அன்னாரது கட்டுரை இது... உங்களுக்கு என் தாத்தா பாரதியை நன்கு தெரிந்திருக்கலாம். அவரின் இறுதிக் காலத்தைப் பற்றி பலர் எழுதி இருக்கிறார்கள். ஆனால் என் பாட்டி செல்லம்மாள், என் தாத்தாவின் மரணத்துக்குப் பிறகு எப்படி வாழ்ந்தார், மறைந்தார் என்பது பலருக்கும் தெரியாது