தமிழ் புத்தாண்டு* இனிய புத்தாண்டு திருநாள் நல்வாழ்த்துக்கள்.. ஒரு ஆரவாரம் இல்லை.... நள்ளிரவு நாய்கள்போல் ஊளைஇல்லை. டாஸ்மாக்கில் கூட்டம் அலை மோதவில்லை குடித்துவிட்டு கும்மாளமிடும் கூட்டமில்லை பார்ட்டிகுடுடா மச்சி என்று பல்இளிக்கும் பரதேசிகள் இல்லை. குடித்துவிட்டு வாகனங்களில் பந்தயம் வைத்து பறந்துசென்று உயிரைவிடும் பைத்தியக்காரத்தனமில்லை.

 







*தமிழ் புத்தாண்டு*


ஒரு ஆரவாரம் இல்லை....


நள்ளிரவு நாய்கள்போல் ஊளைஇல்லை.


டாஸ்மாக்கில் கூட்டம் அலை மோதவில்லை


குடித்துவிட்டு கும்மாளமிடும் கூட்டமில்லை


பார்ட்டிகுடுடா மச்சி என்று பல்இளிக்கும்

பரதேசிகள் இல்லை.


குடித்துவிட்டு வாகனங்களில் பந்தயம் வைத்து பறந்துசென்று  உயிரைவிடும்

பைத்தியக்காரத்தனமில்லை...


நட்சத்திர விடுதியில் நடன அரங்கில்லை


நள்ளிரவு முழுதும்

காமகளியாட்டங்கள் இல்லை...


தூங்கிக்கொண்டு இருக்கும்

தொட்டில்குழந்தையை துடித்து அழவைக்கும் பட்டாசு வெடி இல்லை..


என்னதான் புத்தாண்டாய் இருந்தாலும்


காலையில் யாரிடமாவது இலவசமாக

காலண்டர் கிடைக்குமா என்கிற

எதிர்பார்ப்புமில்லை


அதனால் ஏமாற்றமுமில்லை...


வருடத்திலேயே டாஸ்மாக் வியாபாரம்

மந்தமான நாள்


ஆனால்.....?

இத்தனையும்தாண்டி.....


மனதில் ஓர் அமைதி......

நல்லநாள் எனும் 

நம்பிக்கையோடு மகிழ்ச்சி......


எல்லோர் மனதிலும்,எல்லா வீட்டிலும்

ஒரு தெய்வீக உணர்வு.

குழந்தைகள்முதல் பெரியவர் வரை கோவில் தரிசனம் 

இதில் 


ஜாதிகள் வேறுபடுத்தவில்லை...


ஏற்றதாழ்வு இல்லை. 

ஏமாற்றம் இல்லை...


தமிழ்த்தாயையே 

வரவேற்று உபசரிப்பதாய் ஒவ்வொருவருக்கும் பூரிப்பு


என் தமிழ்

என் தாய்மண்

என் வீரம்

என் கலாசாரம்

என் பண்பாடு.......

என் அமைதி....

என் மக்கள்....


தலை நிமிர்கிறேன் நான்.....

இந்தியத் தமிழனாக...


என் அன்பு சொந்தங்கள் அனைவருக்கும் 


இனிய புத்தாண்டு திருநாள் நல்வாழ்த்துக்கள்..

Comments

Popular posts from this blog

*RSS ப்ரார்தனா - RSS Prayer* *தமிழ் ஸ்லோகம் - தமிழ் மொழிபெயர்ப்பு* *நமஸ்தே ஸதா வத்ஸலே மாத்ரு பூமே* அன்பு காட்டும் தாய் நாடே! உன்னை நான் எப்பொழுதும் வணங்குகிறேன்🔥🙏🪷

*TENT DECOR CATERING EXPO 2024* - 4,5,6-Oct-2024 - Chennai Trade Centre, Nandambakkam Chennai

எனது பாட்டி -விஜயா பாரதி மகாகவி பாரதியின் பெயர்த்தியான திருமதி. விஜயா பாரதி, கனடாவில் வசிக்கிறார். பாரதியின் புகழ் பரப்பும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் அன்னாரது கட்டுரை இது... உங்களுக்கு என் தாத்தா பாரதியை நன்கு தெரிந்திருக்கலாம். அவரின் இறுதிக் காலத்தைப் பற்றி பலர் எழுதி இருக்கிறார்கள். ஆனால் என் பாட்டி செல்லம்மாள், என் தாத்தாவின் மரணத்துக்குப் பிறகு எப்படி வாழ்ந்தார், மறைந்தார் என்பது பலருக்கும் தெரியாது