ஜம்மு & காஷ்மீர் - மற்றும் லே லடாக்கை இணைக்க.....₹1.4 இலட்சம் கோடி செலவில் - 31Tunnel என All weather சாலை வேலைகள் படு அமர்க்களமாய் நடந்து வருகிறது. 2026 என்பது அரசின் கடைசி தேதி - ஆனால் 2025லேயே முடித்துக்கொடுப்பதாக கண்ட்ரக்டர்கள் உறுதி கொடுத்துள்ளனர்.

 

ஜம்மு & காஷ்மீர் - மற்றும் லே லடாக்கை இணைக்க.....₹1.4 இலட்சம் கோடி செலவில் - 31Tunnel என All weather சாலை வேலைகள் படு அமர்க்களமாய் நடந்து வருகிறது. 2026 என்பது அரசின் கடைசி தேதி - ஆனால் 2025லேயே முடித்துக்கொடுப்பதாக  கண்ட்ரக்டர்கள் உறுதி கொடுத்துள்ளனர். 


மறுபக்கம் இரயில்வே இணைப்பும் செல்கிறது என்பதை மறக்க வேண்டாம். 


31 Tunnelலில்.... ஒன்று மட்டும்(Zojila Tunnel) 14 கி‌மீ   நீளத்துக்கு அமைய உள்ளது - அதுவும் இரு வழி பாதையாக (போக வர என தனி தனியாக) - இந்தியாவில் மட்டுமல்ல ஆசியாவிலேயே இதுதான் மிக நீளமான Bipolar Tunnelஆக இது இருக்கும்!!! 


இது சுதந்திர இந்தியாவில் மிகப்பெரிய சாதனையாகவும் இருக்கும் என்கிறார்கள் பொறியாளர்கள்!!! இத்தனை உயரத்தில் இப்படியொரு All weather tunnelஐ இந்தியா இதுவரை அமைத்தது இல்லை - முதல் முயற்சிலேயே உள்ளூர் ஒப்பந்ததாரர்களை வைத்தே சாதிக்க போகிறோம்.


இதுவரை வருடத்தில் பாதிநாள் - காஷ்மீர் & லடாக்கிற்கு போகும் பாதை மூடப்படும்.... பனிப்புயல் - மலை சரிவுனு பல காரணங்களால். அப்பெல்லாம் இலகுரக ஹெலிகாப்டர்கள் மட்டுமே இராணுவத்துக்கு பொருட்களை கொண்டு செல்லும்.... அதனாலேயே பாக்கும் 1999ல் கார்கிலை பிடித்து காஷ்மீரை & லடாக்கை ப இந்தியாவிலிருந்து துண்டிக்க முயன்றது. 

அதேபோல் போரால் இறந்த இராணுவ வீரர்களை விட....... இந்த கரடு முரடான சவால் நிறைந்த குறைந்த அகலம் கொண்ட இந்த பாதையில் இராணுவ வாகனங்களில் செல்லும் போது - விபத்தில் இறந்தவர்களே அதிகம். 


இவை இரண்டுக்கும் தீர்வாகவே இந்த ₹45 ஆயிரம் கோடி சாலை திட்டம்.  வருடம் 365 நாளும் போகும் வகையிலும் - பயண தொலைவையும் நேரத்தையும் இரு மடங்காக குறைக்கும் வகையிலும்!!! அதாவது Srinagar-Kargil-Leh (NH1) பாதையில் அமைய போகும்  Zojilla Tunnel மட்டும்..... Sonamarg to Minamarg இடையே கடக்கும் தூரத்தை 4 மணி நேரத்தில் இருந்து 40 நிமிடமாக மாற்றுகிறது -  பாதுகாப்பான பயணத்தையும் உறுதி செய்கிறது!!! 


உடலுக்கு எப்படி இரத்த நாளங்களோ அப்படிதான் தேசத்துக்கு சாலைகள்!!! 


இத்தனை காலமும் தரமான சாலைகள் இல்லாமல் போனதுதான்..... காஷ்மீர் - லடாக் -  வடகிழக்கு பிரதேசங்கள் என அனைத்திலும் வளர்ச்சிகள் முடங்கிபோய் - ஆயுதம் ஏந்தும் போராட்ட குழுக்கள் அதிகமாகி - நாட்டின் வளர்ச்சியையே முடக்கி போட்டது. 


புதிய ரத்தம் பாயட்டும் இந்த பகுதிகளுக்கு - புத்துணர்ச்சியோடு இந்தியா வளரட்டும்..!!!

Comments

Popular posts from this blog

*RSS ப்ரார்தனா - RSS Prayer* *தமிழ் ஸ்லோகம் - தமிழ் மொழிபெயர்ப்பு* *நமஸ்தே ஸதா வத்ஸலே மாத்ரு பூமே* அன்பு காட்டும் தாய் நாடே! உன்னை நான் எப்பொழுதும் வணங்குகிறேன்🔥🙏🪷

*TENT DECOR CATERING EXPO 2024* - 4,5,6-Oct-2024 - Chennai Trade Centre, Nandambakkam Chennai

எனது பாட்டி -விஜயா பாரதி மகாகவி பாரதியின் பெயர்த்தியான திருமதி. விஜயா பாரதி, கனடாவில் வசிக்கிறார். பாரதியின் புகழ் பரப்பும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் அன்னாரது கட்டுரை இது... உங்களுக்கு என் தாத்தா பாரதியை நன்கு தெரிந்திருக்கலாம். அவரின் இறுதிக் காலத்தைப் பற்றி பலர் எழுதி இருக்கிறார்கள். ஆனால் என் பாட்டி செல்லம்மாள், என் தாத்தாவின் மரணத்துக்குப் பிறகு எப்படி வாழ்ந்தார், மறைந்தார் என்பது பலருக்கும் தெரியாது