ரகமி " எழுதிய " வீரவாஞ்சி " என்ற புத்தகம் படியுங்கள் அன்றைய நாளிதழ்கள் செய்தியின் அடிப்படையில் அற்புதமாக எழுதியிருப்பார்

 






👆🏾👇🏾அது காலம் 1911 ஜீன் 14

இரண்டு நாளாக தொடர்ந்து

அடைமழை


பாண்டிசேரியில் குறுகிய சந்திலோர் வீடு ... இரவு 7 மணி . 

வராண்டா உத்திரத்தில் புகைகக்கும் ஒரு ராந்தல்  


வாசல் திண்னையில் மாடத்தில் சின்னதாய் எரியும் அகல்விளக்கு

அடிக்கும் காற்றில் நான் 

அணைந்து விடட்டுமா வேண்டாமா என போராடிக்கொண்டிருந்தது. 


  அதன் மங்கலான வெளிச்சம் ஒரு அடி தூரம் கூட தெரியாத நிலை


வாசலிலே கொட்டும் மழையில் நனைந்தபடி பஞ்சகட்ச வேட்டி கட்டி , மேல் துண்டு போர்த்தி

அந்த வஸ்திரமும் கச்சல் உடம்பில் ஒட்டிக்கொள்ள மெல்லிய நடுக்கம் குளிர்

 கையில்

ஒரு துணிபையுடன் வெடவெட வென்று குடிமி வைத்த உருவம். கழுத்தில் ருத்ராஷ்ஷம்


" ஆத்துள யாராவது 

இருக்கேளா " மிகபலஹீன குரல் .


   வாசல் தின்னையில் அமர்ந்திருந்த நீலகண்ட

ஐயர்


 " யாருவாசல்ல நிக்கறது சித்த முன்னால வாங்கோ  யாருன்னு இருட்டுல தெரியலையே !


,மழைல நனையாதேள் ! முதல்ல உள்ள வாங்கோ என அழைக்க 

தயங்கி தயங்கி வந்தவர்



       நா...ன்.... என்...பேரு ரகுபதிஐயர் ....


 அதெல்லாம் இருக்கட்டும் ...


 முதல்ல திண்னையில மழை சாரல்படாம உட்காருங்கோ , நான் போய் தலைதுவட்ட துணியெடுத்துன்டு வரேன் என்று வேகமாக எழுந்த கிருஷ்ணயரை

தடுத்து .


பரவாயில்லை வேண்டாம்


நான்  செங்கோட்டை யிலேர்ந்து வரேன் என்பேர் ரகுபதிஐயர் 


நான் வாஞ்சிநாதனோட தோப்பனார் ... அவனை பார்க்கனும் . அவன் இந்த ஆத்துல தான் இருக்கான்னு விசாரிச்சு

தெரிஞ்சுண்டேன்


    ஆமாம் இது வரகூர் நீலகண்டன் 

அகம் தானே ... என பெரியவர் தயக்கதோடு 

கேட்க


      திண்னையிலே இருந்த நீலகண்டஐயர்    அவசர அவசரமாக  எழுந்து வாங்க வாங்க உள்ள ஊஞ்சல்ல  உட்காருங்க ..


..என சொல்லிவிட்டு 

ரயில்வண்டி போல் 

நீளமாக இருந்த வீட்டில்

அடே...ய்... வாஞ்சி

வாஞ்சி என கத்தி கொண்டே ஓட்டமும் நடையுமாக 

 வீட்டுன்உள்ளே முற்றம் கடந்து   ஓட ....


சிறிது நேரத்தில் கஞ்சலான உடம்பு மா நிறம் பஞ்சகட்ச வேட்டி ... உள்ளடங்கின கண்கள் ...


  கத்தையா குடுமி முடிஞ்சு பின்னால தொங்க , காதுல சின்ன கடுகண் தூக்கின புருவம் , சற்றே புடைத்த கூர் நாசி.


கண்ணுல அபார ஞானத்தோட கோவம் ...


 அந்த வாஞ்சி என்கின்ற வாஞ்சிநாத ஐயர் M.A.  வயது 32. உத்யோகம் காட்டிலாக்கா அதிகாரி கல்யாணமாகி சரியா 1 வருடம் மூணு மாதம் ,


        மூணுமாசமாச்சு வீட்டை விட்டு வந்து .


நிலைபடி தாண்டி கூடத்துல வாஞ்சி வந்து நிக்க ,  " ஓ....நீயா . நீ எதுக்குப்பா இங்க வந்த என இடைநிறுதாமல் கேட்க ....


     அந்த தகப்பன் மெதுவாக எழுந்து

வாயில துண்டு பொத்திகிட்டு குலுங்கி குலுங்கி அழ . ஏன்பா ஏன் அழற ? அழாம விஷயத்தை சொல்லு .....


அது தான் எல்லாத்துக்கும் தான் இந்த ஜனங்க அழுகை தான் தீர்வுன்னு நினைச்சின்டிருகேளே 

நீயும் ஏன் அழறே...


அழாம சொல்லி தொலை ....!


வா...ஞ்......சி......


"  குழந்தை செத்து போயிடுதுடா "

   குழந்தை நம்மவிட்டு போயிடுத்து "


" ஆத்துக்கு வாடா தகப்பனா நீ தான்டா கார்யம் பன்னனும் "


சொல்லிட்டு குலுங்கி குலுங்கி அழ


முகத்தில் எந்த உணர்ச்சியும் இல்லாம அப்பாவை வெறிச்சு பார்த்துவிட்டு , ஏதோ தீர்மானித்தவனாய்

ஆழ்ந்த உஷ்ண பெருமூச்சுடன்


    "  அ...ப்பா ஈமசட்டங்கை நீயே செஞ்சுடு , எனக்கு செய்ய வேண்டிய தேச கார்யம் பாக்கி நிறைய இருக்கு ,


வா.வே.சு.ஐயர்  கல்கத்தாலேர்ந்து வந்துருக்கார் .


கூடவே பெரியதேசபக்தாள் எல்லாம் வந்திருக்கா !


இன்னும் நிறைய பேர் வரபோறா !


அறிய காரியம் நடக்கபோகிறது !


தேசத்தை பிடிச்ச பீடை ஒழியபோறது !


நீயே எல்லாத்தையும் பார்த்துக்கோ

அப்பப்போ வந்து தொந்தரவு பண்ணாதே .


இந்தா இந்த காசை வெச்சுக்கோ என அவர் பதிலுக்கு கூட எதிர்பார்க்காமல்  கையில் சில நோட்டுகளை திணித்துவிட்டு

விருவிரு என மறுபடி வீட்டிக்குள் விரைந்த

" செங்கோட்டை வீரவாஞ்சி ....


வா.ஊ.சி க்கும் , சுப்ரமண்ய சிவத்திற்கு ஆயுள் தண்டனை கொடுத்தும் , தூத்துகுடி கலவரத்தில் பல பேர் கொல்லபட காரணமாக இருந்த " கலெக்டர் ஆஷை " சுட்டுகொள்வது என தீர்மானம் செய்யபடும் ரகசிய கூட்டத்தில் அதை யார் செய்வது என சீட்டுகுலுக்கி போட வாஞ்சியின் பெயர் வர !


   ( எல்லா துண்டுசீட்டிலும் வாஞ்சியின் பெயரையே அவர் எழுதியதே தனி கதை )


மணியாச்சி ரயில் நிலையத்தில் கலெக்டர் ஆஷை சுட்டு கொன்று விட்டு ,  ஏற்பாட்டின் படி தன் வாயில் அதே பிஸ்டலால் சுட்டுகொண்டு

மரணிக்க , 19 ஆம் நூற்றாண்டின்

பாரத தேசத்தின் விடுதலைக்கு முதல் தற்கொலை படை


" செங்கோட்டை வீர வாஞ்சிநாத ஐயர் "


ஓ ! சண்டாள பிராமணர்களே !

இழிபிறவி பாரதீயர்களே


ஒரே ஒருத்தன், இன்று வரை  அந்த மஹா புருஷனுக்கு வீர அஞ்சலி செலுத்தியதுண்டா ?


சாகும் வரை மாமிசபட்சினியாய் வாழ்ந்து மக்கள் காசை திருடி ஜெயிலுக்கு போனவளை" பிராமணத்தி " என கூஜா தூக்கிய ஜன்மங்களே


செங்கோட்டை வீர வாஞ்சியின் சரிதத்தை ஒரே ஒரு வரியேனும் பாடத்தில் சேர்க்க கோரியதுண்டா அரசிடம்  ?


நினைவு நாள் அஞ்சலி என நாளுபேர் கூட கூடவில்லையே

குலதுரோகிகளே !


இந்த கேசத்தில் என்னடா தனிகட்சி ?


மறதி நோய் தமிழர்களே !


  பாரதியும்,வாஞ்சியும், ஆயிரக்கணக்கான புரட்சியாளர்களை உருவாக்கிய வா.வே.சு.ஐயரும் பிராம்மண குலத்தில் பிறந்ததே பாவமடா !

பதர்களே !

நன்றி கெட்ட அரசுகளே !

அந்த மாமனிதனின் 

மனைவியை இறுதிவரை கண்டுகொள்ளாமல் பட்டினி போட்ட தேசமிது 


அந்த வீரதாய்க்கு சாகும் வரை சோறுபோட்டவன்

மஹாயோகி ஸ்ரீமுத்துராமலிங்க தேவர்


கூத்தாடிகளை பற்றி பள்ளி பாட புத்தகத்தில் சேர்க்கும் போது அந்த மாமனிதன் வாஞ்சியை பற்றி ஒரே ஒரு வரியேனும் சேர்க்ககூடாதா

ஈன அரசுகளே ....


உங்களுக்கு தானாடா பாடினான்  அக்ரஹாரத்தின் அதிசயம் சுப்பினீ  என்ற அக்னீ!


" அச்சமும் பேடுமையும் அடிமை சிறுமதியும் உச்சத்தில்

கொண்டாரடி கிளியே ஊமைஜனங்களடி "


சொந்த அரசும் புவிசுகமும் மான்புகளும் அந்தகர்குண்டாமோ கிளியே அலிகளுக்கு இன்பமுன்டோ என !


ஆம் வாஞ்சிநாத ஐயரை போன்ற

சர்வபரி தியாகியை , தியாகத்தை மறந்த சந்ததிகளும் , அரசுகளும்

அலிகளே !

வாழும் பிணங்களே !


இன்று பரமபூஜன்ய ஸ்ரீஸ்ரீஸ்ரீ. வீரவாஞ்சிநாத ஐயர்

பிரிட்டிஷ் கலெக்டர் ஆஷ் என்பவனை கொன்றொழித்து பலிதானியாய்

ஆன தினம் !


வீரவாஞ்சியின்  112  ஆவது நினைவு தினம் !


மன்னித்து விடடா வீரவாஞ்சி

மன்னித்துவிடு

Note ;-

வாய்ப்பு கிடைத்தால் ஆசிரியர்

" ரகமி " எழுதிய " வீரவாஞ்சி "

என்ற புத்தகம் படியுங்கள் அன்றைய நாளிதழ்கள் செய்தியின் அடிப்படையில் அற்புதமாக எழுதியிருப்பார் .

Comments

Popular posts from this blog

SUGA Elite Cruise Travellers Club* SUGA Elite Cruise Travellers Club is in tie-ups with international Cruise T I'll keep you ours and Travels companies. We can travel with the following major cruise lines:

சிறுகதை: *வெங்கட்ராமன் முடிவு சரியா தப்பா??* வெங்கட்ராமன் நன்கு படித்த பிராமண பையன். நல்ல வேலை. ஆள் பார்க்க மிக நன்றாக இருப்பான். வயது 38. ஆனால் திருமணத்திற்கு பிராமண பெண் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இன்னும் சரியாக அமையவில்லை. அவர்கள் குடும்பம் பழமையான பிராமண குடும்பம். வெங்கட்ராமன் வீட்டுக்கு வந்து அம்மா அப்பாவிடம் பேசினான். "அப்பா, எல்லாம் நல்லபடியா முடிஞ்சது அந்த ஆபீசுக்கு போய் அந்த பொண்ணோட பேசிட்டேன்...

எனது பாட்டி -விஜயா பாரதி மகாகவி பாரதியின் பெயர்த்தியான திருமதி. விஜயா பாரதி, கனடாவில் வசிக்கிறார். பாரதியின் புகழ் பரப்பும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் அன்னாரது கட்டுரை இது... உங்களுக்கு என் தாத்தா பாரதியை நன்கு தெரிந்திருக்கலாம். அவரின் இறுதிக் காலத்தைப் பற்றி பலர் எழுதி இருக்கிறார்கள். ஆனால் என் பாட்டி செல்லம்மாள், என் தாத்தாவின் மரணத்துக்குப் பிறகு எப்படி வாழ்ந்தார், மறைந்தார் என்பது பலருக்கும் தெரியாது