சனாதனம் அப்படினா ஏதோ பெரிய பெரிய அர்த்தம் நிறைந்த வார்த்தை எல்லாம் இல்லீங்க.. ~~ நாம , நம்ம அம்மா அப்பா தினமும் நம்ம பூஜை அறையில் சாமி கும்பிடுறோம் பாருங்க அது சனாதனம். ~~ ஊர்ல திருவிழா நடக்கும் போது காப்பு கட்டி ஒன்னுகூடி சாமி கும்பிடுறோம்ல அதுவும் சனாதனம்தான். ~~ அமாவாசை ஆடி பௌர்ணமிக்கு விரதம் இருந்து காக்கைக்கு உணவு கொடுத்துட்டு அதுக்கு அப்புறம் நாம சாப்பிடுறோம்ல அது சனாதனம்.

 



சனாதனம் அப்படினா ஏதோ பெரிய பெரிய அர்த்தம் நிறைந்த வார்த்தை எல்லாம் இல்லீங்க..


~~ நாம , நம்ம அம்மா அப்பா தினமும் நம்ம பூஜை அறையில் சாமி கும்பிடுறோம் பாருங்க அது சனாதனம்.


~~ ஊர்ல திருவிழா நடக்கும் போது காப்பு கட்டி ஒன்னுகூடி சாமி கும்பிடுறோம்ல அதுவும் சனாதனம்தான். 


~~ அமாவாசை ஆடி பௌர்ணமிக்கு விரதம் இருந்து காக்கைக்கு உணவு கொடுத்துட்டு அதுக்கு அப்புறம் நாம சாப்பிடுறோம்ல அது சனாதனம்.


~~ பழனிக்கு மாலை போட்டு போவதும் சனாதனம் தான். ஐயப்பனுக்கு விரதம் இருந்து நடந்து செல்வதும் சனாதனம்தான். 


சனாதனம் என்பது இந்த மண் சார்ந்தது. 

இந்த மண்ணுக்கு சொந்தமானது. 

நம் முன்னோர் , பெரிய பெரிய ஞானிகள் பின்பற்றியது.


கிருஸ்தவர்களுக்கு ஒரு வழிபாட்டு முறை உள்ளது.‌‌ இஸ்லாமியர்களுக்கு ஒரு வழிபாட்டு முறை உள்ளது அதே போல் தான் ஹிந்துக்களுக்கும். 


ஆனால் இங்கு இருக்கும் திராவிட கும்பலுக்கு ஹிந்து என்றால் மட்டும் எரியக்கூடாத இடமெல்லாம் எரியும் போல.


இந்தியாவிலேயே ஏன் உலகிலேயே ஹிந்து அறநிலையத்துறை அமைச்சர் ஒருவர் ஹிந்துக்களுக்கு எதிராக சனாதன ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்கும் அறிய நிகழ்வு இங்குதான் நடக்கும். 


வீணாப்போன வீரமணிக்கு சனாதனத்தை எதிர்த்து பேசினால்தான் சோறே... 

ஆனால் ஹிந்து அறநிலையத்துறை அமைச்சர் இந்த நிகழ்ச்சியில் பங்கு பெற்றது சரியா...???

.

.

.

கேட்டால் "ஆரியன் பார்ப்பான்னு" உருட்டுவானுங்க . ஏன்டா இந்த கலியுகத்துல எத்தனை நாளைக்குதான் நமத்து போன இதே வரியை சொல்லி உருட்டுவீங்க. பிரசாந்த் கிஷோர் என்னும் பார்ப்பானோ , துர்கா அம்மா கோவில் கோவிலா ஏறவில்லை எனில் இந்த ஆட்சி ஏது. 


~பாஜக பிடிக்கவில்லையா , பாஜகவை எதிர்த்து  நேரடியா அரசியல் சண்ட செய்‌ அதுதான் துணிச்சல். 


அதைவிட்டுவிட்டு எதுக்கெடுத்தாலும் பார்ப்பான் , சனாதனாம், ஹிந்து கடவுள் இல்லைனு...... மலிவு அரசியல் எத்தனை நாளைக்கு இதை வச்சே உருட்ட முடியும்‌ .


கிருஸ்தவத்தில் பணம் சம்மாதிப்பற்காக மட்டும் ஒரு கூட்டம் சுற்றி திரிகிறது அதை எதிர்த்து மாநாடு போட வேண்டாம்   திராவிடத்தால் எதிர்த்து அறிக்கை விட முடியுமா....??  முடியவே முடியாது காரணம் சிறுபான்மையினர் ஓட்டு போயிரும்ல 


.." அவன் பொருளை எடுத்து அவனையே போடனும்னு " படத்தில் ஒரு காட்சி வரும் அதே மாதிரி ஹிந்துக்கள் முழிக்கும் போது திராவிடம் புதையும் சூழ்நிலை உருவாகும்‌. ரொம்ப நாள் இல்ல ராசா...... இதே மாதிரி மேடை போட்டு  அதிகமான கூட்டம் போடு தன்னால ஹிந்து மக்கள் யோசிக்க ஆரம்பிச்சுருவாங்க. 💯

Comments

Popular posts from this blog

நான் கிட்டத்தட்ட 22 வயது வரை நாத்திகனாக இருந்தேன். கோவில்களுக்குச் செல்வது பிடிக்க வில்லை. நான் அவற்றை பிராமணர்கள் மற்றும் பிறர் பணம் சம்பாதிக்கும் இயந்திரங்களாகவே கருதினேன். ஒவ்வொரு அடியிலும் அவர்கள் எப்படி பணம் கேட்டார்கள் என்பதை நான் வெறுத்தேன்.

8th August 11am, Delhi: MAHA PANCHAYAT- 100Cr HINDU Movement for Abolition of totally Discrminatory HR&CE Act.1951, all over India. Temples should function as independently as MOSQUES & CHURCHES. Money taken/swindled should be given back by Govts.

1961 ஆம் வருடம் வெளிவந்த தேன்நிலவு படத்தில் உள்ள பாட்டு பாடவா என்ற மிக இனிய பாடல்... ஜெமினி கணேசன் வைஜெயந்தி மாலா நடித்த பாடல்.... அவ்வளவு இனிமையான பாடல்... ஆனால் படத்தில் பார்த்தால் இரண்டு பேரும் குதிரை மேல் உட்கார்ந்து கொண்டு மெல்ல குதிரை ஓட்டிக்கொண்டு செல்வார்கள்... ஆனால் இந்த காலத்து பசங்களும் அந்த பாட்டுக்கு கலக்கலாக நடனமாடி விட்டார்கள்... சில பல சாட்களை நான் இங்கே பப்ளிஷ் செய்துள்ளேன் பாருங்கள்... அந்தப் பாடலில் நடித்த வைஜெயந்திமாலா அப்போது எவ்வளவு அழகாக இருந்துள்ளார் பாருங்கள் மேலே போட்டோக்களை பார்க்கவும்