சனாதனம் அப்படினா ஏதோ பெரிய பெரிய அர்த்தம் நிறைந்த வார்த்தை எல்லாம் இல்லீங்க.. ~~ நாம , நம்ம அம்மா அப்பா தினமும் நம்ம பூஜை அறையில் சாமி கும்பிடுறோம் பாருங்க அது சனாதனம். ~~ ஊர்ல திருவிழா நடக்கும் போது காப்பு கட்டி ஒன்னுகூடி சாமி கும்பிடுறோம்ல அதுவும் சனாதனம்தான். ~~ அமாவாசை ஆடி பௌர்ணமிக்கு விரதம் இருந்து காக்கைக்கு உணவு கொடுத்துட்டு அதுக்கு அப்புறம் நாம சாப்பிடுறோம்ல அது சனாதனம்.

 



சனாதனம் அப்படினா ஏதோ பெரிய பெரிய அர்த்தம் நிறைந்த வார்த்தை எல்லாம் இல்லீங்க..


~~ நாம , நம்ம அம்மா அப்பா தினமும் நம்ம பூஜை அறையில் சாமி கும்பிடுறோம் பாருங்க அது சனாதனம்.


~~ ஊர்ல திருவிழா நடக்கும் போது காப்பு கட்டி ஒன்னுகூடி சாமி கும்பிடுறோம்ல அதுவும் சனாதனம்தான். 


~~ அமாவாசை ஆடி பௌர்ணமிக்கு விரதம் இருந்து காக்கைக்கு உணவு கொடுத்துட்டு அதுக்கு அப்புறம் நாம சாப்பிடுறோம்ல அது சனாதனம்.


~~ பழனிக்கு மாலை போட்டு போவதும் சனாதனம் தான். ஐயப்பனுக்கு விரதம் இருந்து நடந்து செல்வதும் சனாதனம்தான். 


சனாதனம் என்பது இந்த மண் சார்ந்தது. 

இந்த மண்ணுக்கு சொந்தமானது. 

நம் முன்னோர் , பெரிய பெரிய ஞானிகள் பின்பற்றியது.


கிருஸ்தவர்களுக்கு ஒரு வழிபாட்டு முறை உள்ளது.‌‌ இஸ்லாமியர்களுக்கு ஒரு வழிபாட்டு முறை உள்ளது அதே போல் தான் ஹிந்துக்களுக்கும். 


ஆனால் இங்கு இருக்கும் திராவிட கும்பலுக்கு ஹிந்து என்றால் மட்டும் எரியக்கூடாத இடமெல்லாம் எரியும் போல.


இந்தியாவிலேயே ஏன் உலகிலேயே ஹிந்து அறநிலையத்துறை அமைச்சர் ஒருவர் ஹிந்துக்களுக்கு எதிராக சனாதன ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்கும் அறிய நிகழ்வு இங்குதான் நடக்கும். 


வீணாப்போன வீரமணிக்கு சனாதனத்தை எதிர்த்து பேசினால்தான் சோறே... 

ஆனால் ஹிந்து அறநிலையத்துறை அமைச்சர் இந்த நிகழ்ச்சியில் பங்கு பெற்றது சரியா...???

.

.

.

கேட்டால் "ஆரியன் பார்ப்பான்னு" உருட்டுவானுங்க . ஏன்டா இந்த கலியுகத்துல எத்தனை நாளைக்குதான் நமத்து போன இதே வரியை சொல்லி உருட்டுவீங்க. பிரசாந்த் கிஷோர் என்னும் பார்ப்பானோ , துர்கா அம்மா கோவில் கோவிலா ஏறவில்லை எனில் இந்த ஆட்சி ஏது. 


~பாஜக பிடிக்கவில்லையா , பாஜகவை எதிர்த்து  நேரடியா அரசியல் சண்ட செய்‌ அதுதான் துணிச்சல். 


அதைவிட்டுவிட்டு எதுக்கெடுத்தாலும் பார்ப்பான் , சனாதனாம், ஹிந்து கடவுள் இல்லைனு...... மலிவு அரசியல் எத்தனை நாளைக்கு இதை வச்சே உருட்ட முடியும்‌ .


கிருஸ்தவத்தில் பணம் சம்மாதிப்பற்காக மட்டும் ஒரு கூட்டம் சுற்றி திரிகிறது அதை எதிர்த்து மாநாடு போட வேண்டாம்   திராவிடத்தால் எதிர்த்து அறிக்கை விட முடியுமா....??  முடியவே முடியாது காரணம் சிறுபான்மையினர் ஓட்டு போயிரும்ல 


.." அவன் பொருளை எடுத்து அவனையே போடனும்னு " படத்தில் ஒரு காட்சி வரும் அதே மாதிரி ஹிந்துக்கள் முழிக்கும் போது திராவிடம் புதையும் சூழ்நிலை உருவாகும்‌. ரொம்ப நாள் இல்ல ராசா...... இதே மாதிரி மேடை போட்டு  அதிகமான கூட்டம் போடு தன்னால ஹிந்து மக்கள் யோசிக்க ஆரம்பிச்சுருவாங்க. 💯

Comments

Popular posts from this blog

*RSS ப்ரார்தனா - RSS Prayer* *தமிழ் ஸ்லோகம் - தமிழ் மொழிபெயர்ப்பு* *நமஸ்தே ஸதா வத்ஸலே மாத்ரு பூமே* அன்பு காட்டும் தாய் நாடே! உன்னை நான் எப்பொழுதும் வணங்குகிறேன்🔥🙏🪷

*TENT DECOR CATERING EXPO 2024* - 4,5,6-Oct-2024 - Chennai Trade Centre, Nandambakkam Chennai

எனது பாட்டி -விஜயா பாரதி மகாகவி பாரதியின் பெயர்த்தியான திருமதி. விஜயா பாரதி, கனடாவில் வசிக்கிறார். பாரதியின் புகழ் பரப்பும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் அன்னாரது கட்டுரை இது... உங்களுக்கு என் தாத்தா பாரதியை நன்கு தெரிந்திருக்கலாம். அவரின் இறுதிக் காலத்தைப் பற்றி பலர் எழுதி இருக்கிறார்கள். ஆனால் என் பாட்டி செல்லம்மாள், என் தாத்தாவின் மரணத்துக்குப் பிறகு எப்படி வாழ்ந்தார், மறைந்தார் என்பது பலருக்கும் தெரியாது