சனாதனம்...! சனாதனத்தை புரிந்து கொள்ள யாராலும் முடியாது புரிந்தது போல் ஒருவர் அதனை இகழலாம் அல்லது புகழலாம்... *ஆனால் அது முதலும் முடிவும் அற்றது அதுவே இந்து மதம்* அதை இகழ்பவனும் , புகழ்பவனும் அதனுள்ளே அடக்கம்

 


#சனாதனம்...! 


சனாதனத்தை புரிந்து கொள்ள யாராலும் முடியாது புரிந்தது போல் ஒருவர் அதனை இகழலாம் அல்லது புகழலாம்...


*ஆனால் அது முதலும் முடிவும் அற்றது அதுவே இந்து மதம்*


அதை இகழ்பவனும் , புகழ்பவனும் அதனுள்ளே அடக்கம்


இந்த  உலகிற்கு நிகர் அன்னையும் தந்தையும் என தெரிவித்தவர் :  *விநாயகர்*


ஒருவர் சிரசினை மற்றொருவருக்கு பொருத்தும் இக்கால விஞ்ஞான முயற்சியின் ஆரம்பம்  : *விநாயகர்*


அக்கால அணுகுண்டு : *பிரம்மாஸ்திரம்*


கலப்பு திருமணம் :*முருகன்*


அன்றே பெண்ணுக்கு சம உரிமை  :  *அர்த்தநாதீஸ்வரர்*


கணவன் சொல்லை மீறியதன் விளைவு  :  *தாட்சாயிணி*


எல்லை தாண்டியதன் விளைவு  :  *சீதா*


கடவுளுக்கு பக்தியின் மிகுதியில் எச்சில் பழங்களை தந்தவர்  :  *சபரி*


தான் அணிந்த மாலையை தந்தவர்  :  *ஆண்டாள்*


அறுசுவை அற்ற உணவை அளித்தவர் : *விதுரர்*


அதையும் விரும்பி உண்டவர்  :  *பார்த்த சாரதி*


ஓர் சத்ரியன் சாமியார் ஆகலாம்  :  *விஸ்வாமித்திரர்*


ஓர் பிராமணன் ஆயுதம் ஏந்தி போர்க்களம் புகலாம் : *பரசுராமர்*


தந்தை கூறியதால் ஏன் என்று மறுகேள்வி கேட்காமல் தாயின் தலை கொய்தவர்  :  *பரசுராமர்*


ஓர் பட்டியலினத்தவர் மிகச்சிறந்த நாயன்மார் ஆகலாம்  :  *நந்தனார்*


ஓர் வேடுவனும் நாயன்மார் ஆகலாம்  :  *கண்ணப்ப நாயனார்*


*ஓர் திருடனும் இதிகாசம் எழுதலாம்  :  *வால்மீகி*


அடுத்தவர் மனைவியின் மீது ஆசை கொண்டால் அது  விலங்கானலும் , மனிதரானாலும், இராட்சசனானாலும் ஏன் தேவாதி தேவரே ஆனாலும் தண்டனை உண்டு  :  *வாலி, துட்சாதணன், இராவணன், இந்திரன்*


கொடுத்த வாக்கை காப்பாற்ற இறுதிவரை பிரம்மச்சரியம்  :  *பீஷ்மர்*


செஞ்சோற்று கடன் தீர்க்க தம்பிகள் என்று தெரிந்த பிறகும் அதே நிலையில் தொடர்வது  :  *கர்ணன்*


தர்மத்தை காக்க சாரதியாகவும்  :  *கண்ணன்*


கண்ணனும் , இராமனும் ஒருவரே என்று தெரிந்தாலும் என் பிரபு இராமர் மட்டுமே என்று பக்தி பிடிவாதமாக :  *ஹனுமன்*


தாயின் வாக்கை காப்பாற்ற அதே பிரபுவை எதிர்ப்பது  :  *ஹனுமன்*


வேடுவனும் , விலங்கும் எனது தம்பிகள் என்று பாராபட்சம் காணதிருப்பது : *இராமன்*


தனது அண்ணனுக்காக தான் கட்டிய மனைவியை பிரிந்து 14 ஆண்டுகள் துயிலடையா நிலை மேற்கொண்டது. :  *இலட்சுமணன்*


இந்த பரதத்தை விட என் பரந்தாமனின் பாதசுவடுகளே எனக்கு முக்கியம் : *பரதன்*


தன் கணவன் காணாததை தானும் கான விரும்பேல் :  *காந்தாரி*


பக்தியால் பரந்தாமனை கட்டுற செய்தவன் : *சகாதேவன்*


பக்தியால் பிரபுவை எதிர்த்து நின்றவன் : *ஹனுமன்*


தன் அண்ணன் செய்வது தவறு என்று சுட்டிக் காட்டி வெளியேறிவன் : *விபூஷ்ணன்*


தன் அண்ணன் செய்வது தவறே ஆனாலும் இறுதிவரை உடன் நின்றவன். :   *கும்பகர்ணன்*


நண்பணின் மனைவியினை அபகரித்து சென்றவனை மறைந்திருந்து தாக்கியவன். : *இராமன்*


தன் மனைவியை அபகரித்து சென்றவன் நிராயுதபாணியாக நிற்கும் பொழுது இன்று போய் நாளை வா என்று கூறிவன். : *இராமன்*


தன்னை நூறு முறை வஞ்சிக்க அனுமதி தந்தவன் : *கண்ணன்*


பக்தனின் ஹரி நாராயண எனும் ஒரு குரலுக்கு ஓடோடி வந்தவன்:  *நரசிம்மன்*


அன்றைய TEST TUBE BABY :  *தோரோணாச்சாரியார்*


அன்றைய incubator  :  *கமண்டலம்*


வந்திருப்பது கடவுளே ஆனாலும் தன் சீடன் மகாபலியை காப்பாற்ற முயற்சித்தார் :  *சுக்கிராச்சாரியார்*


வந்திருப்பது கடவுளே ஆனாலும் தன் வாக்கை காப்பாற்ற தானம் செய்தவன் :  *கர்ணன்*


தன் மனைவியும் தன் நண்பனும் பழகுவதை எள்ளளவும் சந்தேக நோக்கோடு பார்த்ததில்லை :  *துரியோதனன்*


கருவறையில் போர் அறிவு பெற்றவன்  : *அபிமன்யு*


எதிரியே ஆனாலும் தன் தொழிலில் நேர்மை தவறாதவன்  :  *சகாதேவன்*


உலகை காப்பவனே ஆனாலும் தன் திருமணத்திற்காக கடன் வாங்கியவன்  :  *சீனீவாசன்*


கடவுளுக்கே கடன் தந்தவன்  :  *குபேரன்*


தன் திறமையை நிருபிக்க பறவையின் கண்ணை கொய்தவன்  :  *அர்ஜுனன்*


மாலை நேரம் பறவையின் வாயில் உணவு உள்ளது அது நிச்சயம் தன் குஞ்சுகளுக்கு உணவினை எடுத்து செல்வதாக தோன்றுவதால் என்னால் தாக்கயிலாது  :  *கர்ணன்*


அன்றைய அதி நவீன போர் விமானம்  :  புஷ்பக விமானம்


அடுத்தவர் மண் மீது ஆசை பட்டால்  : *மகாபாரதம்*


அடுத்தவர் பெண் மீது மோகம் கொண்டால்  :  *இராமாயணம்*

Comments

Popular posts from this blog

நான் கிட்டத்தட்ட 22 வயது வரை நாத்திகனாக இருந்தேன். கோவில்களுக்குச் செல்வது பிடிக்க வில்லை. நான் அவற்றை பிராமணர்கள் மற்றும் பிறர் பணம் சம்பாதிக்கும் இயந்திரங்களாகவே கருதினேன். ஒவ்வொரு அடியிலும் அவர்கள் எப்படி பணம் கேட்டார்கள் என்பதை நான் வெறுத்தேன்.

8th August 11am, Delhi: MAHA PANCHAYAT- 100Cr HINDU Movement for Abolition of totally Discrminatory HR&CE Act.1951, all over India. Temples should function as independently as MOSQUES & CHURCHES. Money taken/swindled should be given back by Govts.

1961 ஆம் வருடம் வெளிவந்த தேன்நிலவு படத்தில் உள்ள பாட்டு பாடவா என்ற மிக இனிய பாடல்... ஜெமினி கணேசன் வைஜெயந்தி மாலா நடித்த பாடல்.... அவ்வளவு இனிமையான பாடல்... ஆனால் படத்தில் பார்த்தால் இரண்டு பேரும் குதிரை மேல் உட்கார்ந்து கொண்டு மெல்ல குதிரை ஓட்டிக்கொண்டு செல்வார்கள்... ஆனால் இந்த காலத்து பசங்களும் அந்த பாட்டுக்கு கலக்கலாக நடனமாடி விட்டார்கள்... சில பல சாட்களை நான் இங்கே பப்ளிஷ் செய்துள்ளேன் பாருங்கள்... அந்தப் பாடலில் நடித்த வைஜெயந்திமாலா அப்போது எவ்வளவு அழகாக இருந்துள்ளார் பாருங்கள் மேலே போட்டோக்களை பார்க்கவும்