ரஞ்சனாநாச்சியார் இந்தம்மா யாரு என்னன்னு எல்லாம் தெரியாது* பெயரை பார்த்தா தென் மாவட்ட வீரமங்கையா இருக்கலாம்னு நினைக்குறேன் ஆனா பேருந்தில் படிக்கட்டிலும் & ஒருபடி மேலே போய் மேல் கூரையை பிடித்து தொங்கி செல்லும் மாணவர்களை கண்டித்ததார். *இது ஒவ்வொரு குடிமகனுக்கும் இருக்க வேண்டிய அக்கறை*

 


*ரஞ்சனாநாச்சியார் இந்தம்மா யாரு என்னன்னு எல்லாம்  தெரியாது*

பெயரை பார்த்தா தென் மாவட்ட வீரமங்கையா இருக்கலாம்னு நினைக்குறேன் 

ஆனா பேருந்தில் படிக்கட்டிலும் &  ஒருபடி மேலே போய் மேல் கூரையை பிடித்து தொங்கி செல்லும் மாணவர்களை கண்டித்ததார்.

*இது ஒவ்வொரு குடிமகனுக்கும் இருக்க வேண்டிய அக்கறை*

இப்பிடி தொங்கிட்டு வாராங்க நீ கண்டுக்காம வண்டி ஓட்டுறியே உன் வீட்டு பிள்ளை தொங்குனா இப்பிடி தான் பார்பியான்னு டிரைவர் & நடத்துரை கேள்வி கேட்டது என்ன தவறு

கொஞ்சம் கோவம் தூக்கலாச்சு.  ஆனால் சட்ட வார்த்தையில் சொன்னால் *குற்றமனம் (Mens rea)* இல்லாத செயல் அது 

அந்தம்மாவை ஏதோ தீவிரவாதிய கைது பண்ணுற மாதிரி அஞ்சாறு போலீஸ் வீட்டுக்கே போய் கைது பண்ணியிருக்காங்க

*காவல்துறை கைது பண்ண வேண்டிய பல பேர் தமிழ்நாட்டுல சுதந்திரமா சுத்திட்டு இருக்குது*

ஏற்கெனவே நாட்டுல என்னவும் நடக்குது நமக்கென்னன்னு பெரும்பாலும் மக்கள் போவதற்கு காரணமே நல்லது செய்ய போயி நமக்கு பிரச்சனை வருமோங்கிற பயம் தான்

இனி தைரியமா கேக்குற ஒருத்தன் ரெண்டு பேரும் *"நாடும் நாட்டு மக்களும் நாசமா போகட்டும்"* னு வசனம் பேசிட்டு  போயிட்டே இருப்பான்

போலீசுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு கொடுங்கன்னா எப்படி கொடுப்பான்

*ஆமா இவ்வளவு ஆபத்தா அந்த  பஸ் ஓட்டுன நடத்துனர் , ஓட்டுனர் தொங்கிட்டு போன பசங்கள கைது பண்ணுணீங்களா ஆபீசர்*

ஆயிரம் ரஞ்சனாநாச்சியார் வந்தாலும் உங்கள திருத்த முடியாதுப்பா

*கா.குற்றாலநாதன்*

வழக்கறிஞர்

நெல்லை

Comments