ரஞ்சனாநாச்சியார் இந்தம்மா யாரு என்னன்னு எல்லாம் தெரியாது* பெயரை பார்த்தா தென் மாவட்ட வீரமங்கையா இருக்கலாம்னு நினைக்குறேன் ஆனா பேருந்தில் படிக்கட்டிலும் & ஒருபடி மேலே போய் மேல் கூரையை பிடித்து தொங்கி செல்லும் மாணவர்களை கண்டித்ததார். *இது ஒவ்வொரு குடிமகனுக்கும் இருக்க வேண்டிய அக்கறை*

 


*ரஞ்சனாநாச்சியார் இந்தம்மா யாரு என்னன்னு எல்லாம்  தெரியாது*

பெயரை பார்த்தா தென் மாவட்ட வீரமங்கையா இருக்கலாம்னு நினைக்குறேன் 

ஆனா பேருந்தில் படிக்கட்டிலும் &  ஒருபடி மேலே போய் மேல் கூரையை பிடித்து தொங்கி செல்லும் மாணவர்களை கண்டித்ததார்.

*இது ஒவ்வொரு குடிமகனுக்கும் இருக்க வேண்டிய அக்கறை*

இப்பிடி தொங்கிட்டு வாராங்க நீ கண்டுக்காம வண்டி ஓட்டுறியே உன் வீட்டு பிள்ளை தொங்குனா இப்பிடி தான் பார்பியான்னு டிரைவர் & நடத்துரை கேள்வி கேட்டது என்ன தவறு

கொஞ்சம் கோவம் தூக்கலாச்சு.  ஆனால் சட்ட வார்த்தையில் சொன்னால் *குற்றமனம் (Mens rea)* இல்லாத செயல் அது 

அந்தம்மாவை ஏதோ தீவிரவாதிய கைது பண்ணுற மாதிரி அஞ்சாறு போலீஸ் வீட்டுக்கே போய் கைது பண்ணியிருக்காங்க

*காவல்துறை கைது பண்ண வேண்டிய பல பேர் தமிழ்நாட்டுல சுதந்திரமா சுத்திட்டு இருக்குது*

ஏற்கெனவே நாட்டுல என்னவும் நடக்குது நமக்கென்னன்னு பெரும்பாலும் மக்கள் போவதற்கு காரணமே நல்லது செய்ய போயி நமக்கு பிரச்சனை வருமோங்கிற பயம் தான்

இனி தைரியமா கேக்குற ஒருத்தன் ரெண்டு பேரும் *"நாடும் நாட்டு மக்களும் நாசமா போகட்டும்"* னு வசனம் பேசிட்டு  போயிட்டே இருப்பான்

போலீசுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு கொடுங்கன்னா எப்படி கொடுப்பான்

*ஆமா இவ்வளவு ஆபத்தா அந்த  பஸ் ஓட்டுன நடத்துனர் , ஓட்டுனர் தொங்கிட்டு போன பசங்கள கைது பண்ணுணீங்களா ஆபீசர்*

ஆயிரம் ரஞ்சனாநாச்சியார் வந்தாலும் உங்கள திருத்த முடியாதுப்பா

*கா.குற்றாலநாதன்*

வழக்கறிஞர்

நெல்லை

Comments

Popular posts from this blog

*RSS ப்ரார்தனா - RSS Prayer* *தமிழ் ஸ்லோகம் - தமிழ் மொழிபெயர்ப்பு* *நமஸ்தே ஸதா வத்ஸலே மாத்ரு பூமே* அன்பு காட்டும் தாய் நாடே! உன்னை நான் எப்பொழுதும் வணங்குகிறேன்🔥🙏🪷

*TENT DECOR CATERING EXPO 2024* - 4,5,6-Oct-2024 - Chennai Trade Centre, Nandambakkam Chennai

எனது பாட்டி -விஜயா பாரதி மகாகவி பாரதியின் பெயர்த்தியான திருமதி. விஜயா பாரதி, கனடாவில் வசிக்கிறார். பாரதியின் புகழ் பரப்பும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் அன்னாரது கட்டுரை இது... உங்களுக்கு என் தாத்தா பாரதியை நன்கு தெரிந்திருக்கலாம். அவரின் இறுதிக் காலத்தைப் பற்றி பலர் எழுதி இருக்கிறார்கள். ஆனால் என் பாட்டி செல்லம்மாள், என் தாத்தாவின் மரணத்துக்குப் பிறகு எப்படி வாழ்ந்தார், மறைந்தார் என்பது பலருக்கும் தெரியாது