ரஞ்சனாநாச்சியார் இந்தம்மா யாரு என்னன்னு எல்லாம் தெரியாது* பெயரை பார்த்தா தென் மாவட்ட வீரமங்கையா இருக்கலாம்னு நினைக்குறேன் ஆனா பேருந்தில் படிக்கட்டிலும் & ஒருபடி மேலே போய் மேல் கூரையை பிடித்து தொங்கி செல்லும் மாணவர்களை கண்டித்ததார். *இது ஒவ்வொரு குடிமகனுக்கும் இருக்க வேண்டிய அக்கறை*

 


*ரஞ்சனாநாச்சியார் இந்தம்மா யாரு என்னன்னு எல்லாம்  தெரியாது*

பெயரை பார்த்தா தென் மாவட்ட வீரமங்கையா இருக்கலாம்னு நினைக்குறேன் 

ஆனா பேருந்தில் படிக்கட்டிலும் &  ஒருபடி மேலே போய் மேல் கூரையை பிடித்து தொங்கி செல்லும் மாணவர்களை கண்டித்ததார்.

*இது ஒவ்வொரு குடிமகனுக்கும் இருக்க வேண்டிய அக்கறை*

இப்பிடி தொங்கிட்டு வாராங்க நீ கண்டுக்காம வண்டி ஓட்டுறியே உன் வீட்டு பிள்ளை தொங்குனா இப்பிடி தான் பார்பியான்னு டிரைவர் & நடத்துரை கேள்வி கேட்டது என்ன தவறு

கொஞ்சம் கோவம் தூக்கலாச்சு.  ஆனால் சட்ட வார்த்தையில் சொன்னால் *குற்றமனம் (Mens rea)* இல்லாத செயல் அது 

அந்தம்மாவை ஏதோ தீவிரவாதிய கைது பண்ணுற மாதிரி அஞ்சாறு போலீஸ் வீட்டுக்கே போய் கைது பண்ணியிருக்காங்க

*காவல்துறை கைது பண்ண வேண்டிய பல பேர் தமிழ்நாட்டுல சுதந்திரமா சுத்திட்டு இருக்குது*

ஏற்கெனவே நாட்டுல என்னவும் நடக்குது நமக்கென்னன்னு பெரும்பாலும் மக்கள் போவதற்கு காரணமே நல்லது செய்ய போயி நமக்கு பிரச்சனை வருமோங்கிற பயம் தான்

இனி தைரியமா கேக்குற ஒருத்தன் ரெண்டு பேரும் *"நாடும் நாட்டு மக்களும் நாசமா போகட்டும்"* னு வசனம் பேசிட்டு  போயிட்டே இருப்பான்

போலீசுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு கொடுங்கன்னா எப்படி கொடுப்பான்

*ஆமா இவ்வளவு ஆபத்தா அந்த  பஸ் ஓட்டுன நடத்துனர் , ஓட்டுனர் தொங்கிட்டு போன பசங்கள கைது பண்ணுணீங்களா ஆபீசர்*

ஆயிரம் ரஞ்சனாநாச்சியார் வந்தாலும் உங்கள திருத்த முடியாதுப்பா

*கா.குற்றாலநாதன்*

வழக்கறிஞர்

நெல்லை

Comments

Popular posts from this blog

நான் கிட்டத்தட்ட 22 வயது வரை நாத்திகனாக இருந்தேன். கோவில்களுக்குச் செல்வது பிடிக்க வில்லை. நான் அவற்றை பிராமணர்கள் மற்றும் பிறர் பணம் சம்பாதிக்கும் இயந்திரங்களாகவே கருதினேன். ஒவ்வொரு அடியிலும் அவர்கள் எப்படி பணம் கேட்டார்கள் என்பதை நான் வெறுத்தேன்.

8th August 11am, Delhi: MAHA PANCHAYAT- 100Cr HINDU Movement for Abolition of totally Discrminatory HR&CE Act.1951, all over India. Temples should function as independently as MOSQUES & CHURCHES. Money taken/swindled should be given back by Govts.

1961 ஆம் வருடம் வெளிவந்த தேன்நிலவு படத்தில் உள்ள பாட்டு பாடவா என்ற மிக இனிய பாடல்... ஜெமினி கணேசன் வைஜெயந்தி மாலா நடித்த பாடல்.... அவ்வளவு இனிமையான பாடல்... ஆனால் படத்தில் பார்த்தால் இரண்டு பேரும் குதிரை மேல் உட்கார்ந்து கொண்டு மெல்ல குதிரை ஓட்டிக்கொண்டு செல்வார்கள்... ஆனால் இந்த காலத்து பசங்களும் அந்த பாட்டுக்கு கலக்கலாக நடனமாடி விட்டார்கள்... சில பல சாட்களை நான் இங்கே பப்ளிஷ் செய்துள்ளேன் பாருங்கள்... அந்தப் பாடலில் நடித்த வைஜெயந்திமாலா அப்போது எவ்வளவு அழகாக இருந்துள்ளார் பாருங்கள் மேலே போட்டோக்களை பார்க்கவும்