இந்த ஒரு வார்த்தைக்கு தான் இந்தியா 70 ஆண்டுகாலம் காத்திருந்தது.. இதெல்லாம் தேச பக்தர்களின் ஏக்கம்.. "மோடியா!, மோடியை போல் என்னால் கற்பனை செய்து கூட பார்க்க முடியலை"... தீர்க்கமான முடிவை தைரியமாக எடுப்பதில் அவர் போல் உலகில் யாரும் இல்லை. உண்மையாக சொன்னால், சில நேரங்களில் இந்திய மக்களின் தேசிய நலன்களைப் பாதுகாப்பதில் அவரது நிலைப்பாட்டைக் கண்டு நான் ஆச்சரியப்பட்டிருக்கிறேன் .. என்று ரஷ்ய அதிபர் புதின் அவர்கள் புகழ்ந்து இருக்கிறார்..

 


இந்த ஒரு வார்த்தைக்கு தான் இந்தியா 70 ஆண்டுகாலம் காத்திருந்தது.. இதெல்லாம் தேச பக்தர்களின் ஏக்கம்.. 


"மோடியா!, மோடியை போல் என்னால் கற்பனை செய்து கூட பார்க்க முடியலை"... தீர்க்கமான முடிவை தைரியமாக எடுப்பதில் அவர் போல் உலகில்  யாரும் இல்லை. உண்மையாக சொன்னால், சில நேரங்களில் இந்திய மக்களின்  தேசிய நலன்களைப் பாதுகாப்பதில் அவரது நிலைப்பாட்டைக் கண்டு நான் ஆச்சரியப்பட்டிருக்கிறேன் .. என்று ரஷ்ய அதிபர் புதின் அவர்கள் புகழ்ந்து இருக்கிறார்.. 


புதின் அவர்கள் ஒன்றும் சாதாரணமான ஆள் இல்லை ,, உலகை ஆராய்ந்து பாத்தவர்.. உலக நாட்டு தலைவர்கள் அதனை பேரையும் நன்கு அறிந்தவர்.. அவர் மனதில் உள்ள உண்மையை சொல்லி விட்டார்  


இந்திய திருநாட்டில் மோடி அவர்கள்  ஒரு தெய்வீக பிறவி. இவரை ஈன்றவள் மிகவும் பேறுபெற்றவள். தேசப்பற்றும், தெய்வபக்தியும் நிறைந்த மாமனி... இவரை ஒரு ரிஷி என்றே கூறலாம் 


இந்திய மண்ணில் இன்னோர் விவேகானந்தர் போல மோடி அவர்கள். நேதாஜியும், வாஜ்பாயியும் கலந்த கலவை என்றே சொல்ல முடியும் 


இன்றைய காலகட்டத்தில் தலைவர்கள் நல்லவர்களாக அமைந்தால் மட்டும் போதாது .. வல்லவர்களாகவும் இருக்க வேண்டும்...  அது தான் மோடி


எப்போது பேச வேண்டும், எப்போது மவுனமாக இருக்க வேண்டும் என்பது அவருக்கு கைவந்த கலை... அவரிடம் உள்ள பிரதான குணம் மிக சரியான நபர்களை, சரியான இடத்தில் வைப்பது. அதை திறம்பட தைரியமாக செய்தார்


மேலும் அவர், ஒரு போதும் தன் சொந்த நலனுக்காக, விடுமுறையோ, ஓய்வோ, எடுத்ததே இல்லை... இன்னுமொரு சிறப்பும் உண்டு


நரேந்திர மோடியின் புன்னகை ஒரு ஆற்றல் நிறைந்தது .. ஒரே சிரிப்பில் உலகை சாய்க்கும் வல்லமை கொண்டது அவரது சிரிப்பு.. 


இவரது சிரிப்புக்கு பின்னால்  ஒரு பயங்கரம் இருக்கிறது அதை அறியா விட்டால் உலகம் அவரிடம் தோல்வி அடைய வேண்டி வரும் என்று மோடியை பார்த்து கூறினார்  ஒரு அமெரிக்கா பத்திரிகையாளன் 


அவர் சொன்னது போல் உலக நாடுகள் இந்தியாவின் குரலுக்கு கட்டுபடுவதும் அவரின் சிரிப்பாற்றல் ஒரு காரணம்.  


ஆனால் சில நேரங்களில் அதே சிரிப்பில் கோபமும் கலந்து இருக்கும் ,, உதாரணமாக சீனா அதிபரை நோக்கி கைகுலுக்கி சிரிக்கும் சிரிப்பை பார்த்தால் அந்த சிரிப்பில் " நீ என்னடா செய்வாய் " என்பது போல் கோபமும் கலந்து இருக்கும்.. அந்த மயக்கும் சிரிப்பு அவருக்கே உரிய தனித்துவம்


ஒரு காலத்தில்  எனது தேசம் எதை எல்லாம் இழந்ததோ அதை எல்லாம் மிக தெளிவாக பெற்று தந்த பெருமகனார் மோடி. உதாரணம் 


இந்தியாவின் எந்த பிரதமராலும் தீர்க்க முடியாத காஷ்மீர் 370 பிரச்சனை மற்றும் ராமர் கோவில் பிரச்சனை. இந்த சிக்கல்களையெல்லாம் கத்தியில்லாமல் ரத்தம் இல்லாமல், ஒரு குண்டு கூட பாயாமல் மிக நுணுக்கமாக  தீர்த்தது மோடி அரசு தான். இது ஒரு வரலாற்று அதிசயம் 


இது காங்கிரஸ் காரனுக்கு புரியாது.. புரிந்தால் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் 370 தை திரும்ப பெறுவோம் என்று சொல்ல மாட்டான்.. அவனோட தேசபக்தி அவ்வளவுதான்


மேலும் காலத்தில் கோலத்தை புரிந்து பார்த்தால் இது இந்துநாடு, ஆனால் இந்துக்களுக்கும், இந்து மதத்துக்கும் முழு பாதுகாப்பான நாடு என்ற நிலையை உருவாக்கிய மகான் இவரே .. அதனால் தான் இவரை ரிஷி என்று கூறுகிறேன்


அன்றொருநாள் ஒரு வரலாற்று காவியம் நிகழ்ந்தது 


இந்தியாவை பார்த்து நக்கல் சிரிப்பு சிரித்த பாகிஸ்தானை, பாகிஸ்தானுக்குள் புகுந்து அடித்த முதல் பிரதமர் மோடி அவர்கள் தான் . 


மியான்மருக்குள் புகுந்து தீவிரவாதிகளை போட்டு தள்ளி, காலையில் தகவல் சொல்லி அதிர வைத்தவரும் மோடி அவர்கள் தான்,   அதன் பிறகு பாக்கிஸ்தான் கத்தவும் இல்லை.. மியான்மர் அலறவும் இல்லை.. இரண்டும் அமைதியாக தன் இருக்கைக்கு சென்று அமர்ந்து விட்டன 


நம் நாட்டில் பாகிஸ்தானை விட இந்தியா உயர்ந்து விட கூடாது என்றொரு கூட்டம் .. லண்டனை விட பலம் இந்தியா பெற்று விட கூடாது என்றொரு கூட்டம் . இப்படி எல்லாம் துரோகிகள் இருக்கும் இந்த நாட்டில், 


எங்களுக்கு உத்தமர்கள் தேவையில்லை .... சாக்கடைகளே வேண்டும் என்றிருக்கும் கோமாளிகள் நிறைந்த இந்த நாட்டில், 


இந்திய பெருநாட்டுக்கு தனி பெரும் தலைவன் வந்து விடவே கூடாது என்பது சில அந்நியசக்திகளின் பெருங்கனவு, அப்படி வந்து விட்டால் அவன் தலமையில் தேசம் சீறி எழும் பொழுது தங்களின் மேலாண்மைக்கு ஆபத்து என கணக்கீட்டு செயல் பட்டது அன்னியதேசம், 


அத்தனை களைகளையும், செடிகளுக்கு எந்த பாதிப்பும் இல்லாமல்  களைந்து,  என் நாடே எனக்கு முக்கியம் என்று கோலோச்சிய முதல் இந்திய பிரதமர் மோடி மட்டுமே


இந்த மாதிரி நாட்டில் அத்தனை விசயங்களையும் முறியடித்து ஆட்சியில் அமர்ந்து அருமையான ஆட்சி வழங்குகிறார் என்றால் 


இப்படிப்பட்ட பிரதமர் அமைவது நூற்றாண்டுகளில் மோடியை போல ஒரு அதிசயம் தான்... இன்று நம் நாட்டில் ஒரு ரிஷியின் பொற்கால ஆட்சி நடக்கிறது.. அதை காண நமக்கு கொடுத்து வைத்திருக்கிறது

Comments

Popular posts from this blog

எனது பாட்டி -விஜயா பாரதி மகாகவி பாரதியின் பெயர்த்தியான திருமதி. விஜயா பாரதி, கனடாவில் வசிக்கிறார். பாரதியின் புகழ் பரப்பும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் அன்னாரது கட்டுரை இது... உங்களுக்கு என் தாத்தா பாரதியை நன்கு தெரிந்திருக்கலாம். அவரின் இறுதிக் காலத்தைப் பற்றி பலர் எழுதி இருக்கிறார்கள். ஆனால் என் பாட்டி செல்லம்மாள், என் தாத்தாவின் மரணத்துக்குப் பிறகு எப்படி வாழ்ந்தார், மறைந்தார் என்பது பலருக்கும் தெரியாது

Om NAMO NArendra MOdi Namaha*🔥🙏🪷 Shri Narendra Modi Ashtotra Namavali ஓம் ஸ்ரீ நரேந்த்ராய நமஹ (Salutations to the revered Narendra) 1. ஓம் விஶ்வ-நேத்ரே நமஹ – Salutations to the leader of the world stage. 2. ஓம் பாரத-பக்தாய நமஹ – Salutations to India’s devoted champion. 3. ஓம் ஜடூ-ஜப்பி-ப்ரதாய நமஹ – Salutations to the giver of world-famous hugs.

The sound of gunfire pierced the air of the quiet valleys. A terrorist attack took place near the Pahalgam market area — *turning a place like paradise into hell.* People screamed. Blood flowed. There was chaos everywhere. *👺 "The terrorists were asking for names and religions and then firing bullets."*