மோடி நாட்டுக்கு என்ன செய்தார் என சில பதர்கள் அடிக்கடி கேட்பதுண்டு, இப்போது தேர்தல் காலம் அது மழைக்கால தவளைசத்தம் போல அதிகரித்திருக்கின்றது. மோடி ஒரு கர்மவீரர், அவர் அதிகம் பேசுவதில்லை, வாயால் பிரியாணி கிண்டும் திராவிட பரம்பரை வியாதியும் அவருக்கில்லை. அவர் எந்த சவாலையும் நாட்டுக்காக எடுக்கும் செயல்வீரர், அவரின் துணிச்சலும் சாதுர்யமும் கொஞ்சமல்ல‌.

 


மோடி நாட்டுக்கு என்ன செய்தார் என சில பதர்கள் அடிக்கடி கேட்பதுண்டு, இப்போது தேர்தல் காலம் அது மழைக்கால தவளைசத்தம் போல அதிகரித்திருக்கின்றது.


மோடி ஒரு கர்மவீரர், அவர் அதிகம் பேசுவதில்லை, வாயால் பிரியாணி கிண்டும் திராவிட பரம்பரை வியாதியும் அவருக்கில்லை.


அவர் எந்த சவாலையும் நாட்டுக்காக எடுக்கும் செயல்வீரர், அவரின் துணிச்சலும் சாதுர்யமும் கொஞ்சமல்ல‌.


அதைத்தான் ரஷ்ய புட்டீனே ஆச்சரியமாக சொன்னார் "மோடி என்பவர் எப்படியான உலக அழுத்தத்தை தாங்குபவர் என்பதை எண்ணிபார்க்கும் போது எனக்கே ஆச்சரியமாக உள்ளது, இப்படி ஒரு மனிதன் துணிந்து நிற்பதெல்லாம் இந்திய வரலாற்றிலே முதல் முறை".


ஆம், உலக அரசியல் அப்படியானது, அதுவும் ஆயிரம்  ஆண்டு அந்நிய ஆட்சியால் சீரழிக்கபட்ட இந்தியா எக்காலமும் எந்நேரமும் எழுந்துவிட கூடாது, உலக அரங்கில் அது இறக்குமதி செய்யும் தரித்திர தேசமாக மட்டும் இருக்கவேண்டும் என்பது அவர்களின் வியாபார சிந்தனை.


இதனால் இந்தியாவில் எதையும் உருப்படவிடமாட்டார்கள், இதனை 1800களிலே பிரிட்டிசார் செய்தார்கள், இந்திய கல்விமுறை ஒரு அடிமை சிந்தனையில் சொன்னதை செய்யும்படி இருக்கவேண்டுமே தவிர சுயசிந்தனையோ சுயதயாரிப்போ கொண்டதாக இருக்கவே கூடாது என்பதில் கவனமாக இருந்தார்கள்.


காங்கிரஸ் அதை அப்படி பின்பற்றியது, மோடிதான் அதை உடைத்து புதிய கல்வி கொள்கையினை உருவாக்கினார் அது இனி பெரும் திருப்பத்தை கொடுக்கும்.


இது இன்னொரு கோணம் வருங்கால எதிர்காலம்.


சரி, இப்போது என்ன மோடி அப்படி செய்துவிட்டார் என்றால் எதிர்கால இந்திய தலைமுறை பெரும் இடம் எட்டும்படி பெரிய காரியங்களை செய்துள்ளார்.


அதுதான் "அக்னிகுல்" என இன்று உலகை அதிரவைக்கின்றது, எலன் மஸ்க் போன்ற பெரும் பிம்பங்களே வாய்பிளந்து நிற்கும் சாதனை அது.


விஷயம் சுருக்கமாக இதுதான், சிறிய ரக செயற்கை கோள்களை எப்படி விண்ணுக்கு ஏவுவது என்பது.


இதுவரை உலகில் மிகபெரிய எடை கொண்ட செயற்கைகோள்களை ஏவும் ராக்கெட்டுகள்தான் உண்டு, அவற்றின் செலவு மிக அதிகம்.


ஒரு ராக்கெட்டை ஏவி செயற்கை கோளை மேல் நிறுத்த பலநூறு கோடி , ஆயிரம் கோடி வேண்டும் அந்த செலவு அப்படி.


ராக்கெட் பெரியதோ சிறியதோ விஷயம் அல்ல, ஏவும் செலவு அதிகம்.


சுருக்கமாக சொன்னால் ஒரு கொரியரை டெல்லியில் இருந்து குமரிக்கு அனுப்ப தனி வாகனம் இல்லை, கொரியர் லாரி கண்டெய்னர் அல்லது விமானம்தான் வேண்டும்.


இந்த விமானமோ லாரியோ ஒரே ஒரு துண்டுசீட்டுக்கோ, சில கிராம் கொண்ட பார்சலுக்ககோ தனியே கிளம்பாது அப்படி கிளம்பினால் பெரும்நஷ்டம்.


10 லிட்டர் கச்சா எண்ணெயுடன் ஒரு கப்பல் அராபியாவில் இருந்து வரமுடியாது.


அவர்கள் சரக்குகள் குவியும் வரை காத்திருந்து பெரும் சரக்கோடு வந்தால்தான் லாபம், செலவு மிஞ்சும்.


அதேதான் ராக்கெட் விவகாரமும், பெரிய ராக்கெட்டோ இல்லை சிறிய ராக்கெட்டுகளோ சில சேர்ந்தல்தான் ஏவும் செலவு கட்டுபடியாகும்.


ஆனால் மாறிவிட்ட்ட உலகம் இது, ஒரு போன் என்பது கூட மோதிரம் அளவுக்கு சுருங்கிவிட்ட நாட்கள் இவை, ஐசி சிப் எனும் எலெக்ட்ரானிக்ஸ் யுகம் அந்த அதிசயத்தை செய்கின்றது.


இதனால் எடைகுறைந்த் சிறிய ராக்கெட்டுகள் உருவாக்கபடுகின்றன, ஒவ்வொருவரும் நில ஆய்வு, தனிபட்ட தேவைகள், இன்னும் பல காரணங்களுக்காக அரச நிர்வாகங்களும் தனியார் கம்பெனிகளும் சொந்த செய்றகை கோள் சிறிய கோள்களை ஏவ விரும்புகின்றன‌.


ஆனால் ஏவும் செலவுதான் மலைக்க வைக்கின்றது.


இங்கேதான் உலகுக்கு வழிகாட்டியது இந்தியாவின் சென்னை ஐஐடி, இரு தமிழக இந்திய மாணவர்கள் அந்த சாதனையினை செய்திருக்கின்றார்கள்.


மார்க்கர், பில்கேட்ஸ், எலன் மஸ்க் என்ற வரிசையில் அச்சால்ட்டாக இடம்பிடித்து நிற்கின்றார்கள் அவர்கள்.


 ஸ்ரீநாத் ரவிசந்திரன், மோயின் சக்ரவர்த்தி என இந்த‌ இருவரும் சென்னை ஐஐடியில் படித்தவர்கள், பின் மேற்படிப்புக்காக அதாவது ராக்கெட் நுட்பம் தொடர்பாக மேல்நாட்டில் படித்தவர்கள், வயது 30க்கும் குறைவு.


இந்த சிந்தனை அதாவது மிக குறைந்த செலவில் எடை குறைந்த ராக்கெட்டுகளை ஏவும் சிந்தனை அவர்களுக்கு வந்தது ஆனால் இந்தியாவில் அது முன்பு நடக்காத ஒன்றாக இருந்தது.


ஜிடி நாயுடு காலம் அல்ல அதற்கு முன்பே இந்தியன் விமானம் தயாரிக்க முயன்று அதை தடுத்து ஐரோப்பியர் தட்டிசென்ற கொடுமை உண்டு.


ஜிடிநாயுடு பட்டபாடு கொஞ்சமல்ல‌.


அதுவும் ராக்கெட் விவகாரம் என்றால் விக்ரம் சாராயாக்கு என்ன நிகழ்ந்தது என்பதும், நம்பி நாராயணனுக்கு என்ன நிகழ்ந்தது என்பதும் உலகறியும்.


இன்னும் பல மர்மங்கள் வெளிதெரியவில்லை, நடந்த கொடுமைகள் ஏராளம்.


ஆம், இந்தியாவில் எதுவும் உருபடகூடாது, திறமை இருந்தால் அந்நியருக்கு அடிமை சேகவம் செய்யவேண்டும் அது அல்லாமல் நாட்டுக்காக செய்தால் விடமாட்டார்கள்.


ஒன்று அரசியலில் புகுந்து குழப்புவார்கள் அல்லது மர்மமாக தொலைப்பார்கள்.


இந்த இளைஞர்களின் திட்டம் மிக மிக புரட்சியனாது எதிர்காலத்தை புரட்டி போட கூடியது,  மிக குறைந்த செலவில் 700 கிமீ உயரத்துக்கு சிறிய ரக செயற்கை கோள்களை எடுத்து நிறுத்துவது.


இவர்களுக்கான முதல் வழியினை மோடிதான் திறந்தார்.


 அவரின் மேக் இன் இந்தியா, இந்திய நிறுவணங்களுக்கு முன்னுரிமை, விண்வெளி வளர்ச்சியில் தனியாருக்கு பங்களிப்பு என அவர் அதுவரை மூடியிருந்த கதவுகளை திறந்துவிட்டார்.


மேற்கொண்டு சென்னை ஐஐடிக்கு பெரும் நிதி அளித்து ஆய்வுகளை மேற்கொள்ள வழிசெய்தார்.


அவர் கொடுத்த வழியில்தான் ஒளியில்தான் இந்த இளைஞர்களின் பெரும் கனவும் மெய்பிக்க தொடங்கிற்று.


2017ல் இவர்கள் அக்னிகுல் என்ற நிறுவணம் தொடங்கினார்கள், அது அக்னிபான் எனும் ராக்கெட்டை தயாரித்தது.


மோடி அரசின் தொடர் பாதுகாப்பிலும் அது கொடுத்த உற்சாகத்திலும் அவர்கள் ஆய்வு தொடர்ந்தது.


கடந்தவாரம் அவர்கள் தங்கள் ராக்கெட்டை ஆந்திராவின்

 ஸ்ரீ ஹரி கோட்டாவில் மார்ச் 20 வாக்கில் சோதித்திருக்கின்றார்கள், ராக்கெட் முழு வெற்றி.


இனி மிக சிறிய செயற்கை கோளை கூட இந்த ராக்கெட் எளிதில் எடுத்து செல்லும், இதனால் உலகின் மிக மிக நவீன தொழில்நுட்பம் கொண்ட நாடாக இந்தியா மாறும்.


இதனை இனி இந்தியாவின் கனவான சொந்த விண்வெளி நிலையம் என்பதற்கு எளிதாக பயன்படுத்தலாம்.


வர்த்தகம், ராணுவம், விண்வெளி ஆய்வு என எல்லாவற்றுக்கும் இது மிகபெரிய திருப்பமாக அமையும்.


இந்தியா தன் தொழில்நுட்பத்தால் உலகை ஆள ஆரம்பித்திருக்கும் தருணம் இது.


கார் தயாரிப்பு, இதர வாகன தயாரிப்பு, படகுகள், கப்பல்கள் தயாரிப்பில் வெளிநாடுகள் என்ன இடம் பிடித்ததோ அதை இனி இந்தியா ராக்கெட் உலகில் பிடிக்கும்.


இந்தியா இனி விண்வெளி வர்த்தகத்தின் தலைநகரமாக மாறும்.


இது பெரும் சாதனை உலகை திருப்பிபோடும் அரிய சாதனை, உலகமே அடுத்தகட்ட விண்வெளி பாய்ச்சலுக்கு இந்தியா வழிகாட்டிவிட்டது என ஒப்புகொள்ளும் சாதனை.


இச்சாதனையினை படைக்க விஞ்ஞானிகள் அவசியம், அது எப்போதும் இங்கு உண்டு.


ஆனால் வலுவான அரசு இல்லாமல் எதும் செய்யமுடியாது, இந்தியாவில் எப்போதுமே வளங்களும் அறிவும் எலலா வடிவிலும் உண்டு, அற்புதமான அறிவாளிகள் உண்டு.


ஆனால் நல்ல தலைவன் பாதுகாப்பான அரசு இல்லாமல் எல்லாமே நாசமாகி அந்நியர் ஆட்டம்போட ஏதுவாய் இருந்தது.


இந்தியர்கள் கல்வி கற்ற அடிமைகளாக அந்நிய தேசம் இழுத்து செல்லபட்டனர், தேசம் பின்னடைந்து கொண்டே சென்றது.


மோடி இதனை மாற்றியிருக்கின்றார், அவரின் மேக் இன் இந்தியா, விண்வெளி ஆய்வில் தனியார் பங்களிப்பு, ஐஐடிக்கு அதிக நிதி, ஆய்வு செய்ய உதவி.


மேற்கொண்டு அந்த ஸ்ரீஹரிகோட்டாவில் இந்திய மாணவர்கள் தங்கள் ராக்கெட்டை ஆய்வு செய்ய வசதி என எல்லாம் அவர் கொடுத்தது.


குலசேகர பட்டின திட்டமும் அவர் தொடங்கி வைத்தது.


இன்னும் 20 ஆண்டுகளில் கோவை, குலசேகரபட்டினம், தூத்துகுடி பக்கமெல்லாம் பெரிய பெரிய ராக்கெட் தொழில்கள் வரும்.


இளம் ஆய்வாளர்கள், விஞ்ஞானிகள், தொழிலதிபர்கள் என பலர் வருவார்கள்.


எலன் மஸ்க்கும், பில்கேட்ஸும், மார்க்கும் அமெரிக்காவில் மட்டுமல்ல இங்கும் வருவார்கள் என்பதை உலகம் அறியும்.


மோடி அதனை செய்திருக்கின்றார்.


திராவிட ஆட்சியில் கண்டதெல்லாம் சாராய ஆலைகள், அதிக தனியார் டிவிகள், இம்சை ஊடகங்கள், கல்குவாரி மண்குவாரி கொள்ளைகள் இன்னபிற‌...


மோடி அரசு தருவதெல்லாம் உலக விஞ்ஞான சாதனைகள், பெரும் பெரும் விஞ்ஞான் தொழிலக்ள், நாட்டுக்கும் உலகுக்கும் தேவையான அவசிய உறுதியான வழிகள்.


இனி இந்தியா உலகுக்கே ராக்கெட் நுட்பத்தில் வழிகாட்டும், மோடி ஏன் "விஸ்வகுரு"என அழைக்கபடுகின்றார் என்றால் இதனால்தான்.


எங்கோ எலன் மஸ்க்கிடம் கூலிக்கு வேலை செய்து, இந்த சாதனையின அமெரிக்க சாதனை, ஐரோப்பிய விண்வெளி மைய சாதனை என அமைய இருந்ததை இந்திய சாதனை, இந்திய சென்னை மைந்தரின் சாதனை என யார் மாற்றிகாட்டியிருக்கின்றார் என்றால் மோடிதான்.


அந்த கர்மவீரன், பெரும் தலைவனுக்கு நன்றி கூறி அந்த இளம் விஞ்ஞானிகளை, அதுவும் சென்னை விஞ்ஞானிகளை வாழ்த்துவோம்.


அதே சென்னையில் 100 ஆண்டுக்கு முன்னால் இளைய சமூகத்தை நோக்கி அழைத்து பாடிய அந்த பாரதியின் வரிகளோடு பாடுவோம்.


அவனும் அப்படி கனவு கண்டான், அவன் வழியில்தான் சாஸ்திரி, காமராஜ்ர், அப்துல்கலாம், வாஜ்பாய் என எல்லோரும்  இளைஞர்களை அழைத்தார்கள்.


மோடியின் இந்தியா அந்த பாரதியின் வரிகளோடு அவர்களை வாழ்த்தி அவர்கள் பெரும் இடம் பிடித்து தேசத்தின் பெருமை காக்க பிரார்த்திக்கின்றது.


"இளையபார தத்தினாய் வா வா வா 

எதிரிலா வலத்தினாய் வா வா வா 


ஒளியிழந்த நாட்டிலே-நின்றேறும் 

உதய ஞாயிரறோப்ப  வா வா வா 


களையிழந்த நாட்டிலே-முன்போலே 

கலைசிறக்க வந்தனை 


விளையுமாண்பு யாவையும் -பார்த்தன் போல் 

விழியினால் விளக்குவாய் வா வா வா 


விந யநின்ற நாவினாய்  வா வா வா 


முற்றிநின்ற வடிவினாய் வா வா வா 

முழுமைசேர் முகத்தினாய வா வா வா 


கற்றலொன்று பொய்கிலாய் வா வா வா 

கருதிய தியற்றுவாய் வா வா வா 


ஒற்றுமைக்கு ளுய்யவே -நாடெல்லாம் 

ஒரு பெருஞ் செயல்செய்வாய் வா வா வா"


பிரம்ம ரிஷியார்

Comments

Popular posts from this blog

நான் கிட்டத்தட்ட 22 வயது வரை நாத்திகனாக இருந்தேன். கோவில்களுக்குச் செல்வது பிடிக்க வில்லை. நான் அவற்றை பிராமணர்கள் மற்றும் பிறர் பணம் சம்பாதிக்கும் இயந்திரங்களாகவே கருதினேன். ஒவ்வொரு அடியிலும் அவர்கள் எப்படி பணம் கேட்டார்கள் என்பதை நான் வெறுத்தேன்.

8th August 11am, Delhi: MAHA PANCHAYAT- 100Cr HINDU Movement for Abolition of totally Discrminatory HR&CE Act.1951, all over India. Temples should function as independently as MOSQUES & CHURCHES. Money taken/swindled should be given back by Govts.

1961 ஆம் வருடம் வெளிவந்த தேன்நிலவு படத்தில் உள்ள பாட்டு பாடவா என்ற மிக இனிய பாடல்... ஜெமினி கணேசன் வைஜெயந்தி மாலா நடித்த பாடல்.... அவ்வளவு இனிமையான பாடல்... ஆனால் படத்தில் பார்த்தால் இரண்டு பேரும் குதிரை மேல் உட்கார்ந்து கொண்டு மெல்ல குதிரை ஓட்டிக்கொண்டு செல்வார்கள்... ஆனால் இந்த காலத்து பசங்களும் அந்த பாட்டுக்கு கலக்கலாக நடனமாடி விட்டார்கள்... சில பல சாட்களை நான் இங்கே பப்ளிஷ் செய்துள்ளேன் பாருங்கள்... அந்தப் பாடலில் நடித்த வைஜெயந்திமாலா அப்போது எவ்வளவு அழகாக இருந்துள்ளார் பாருங்கள் மேலே போட்டோக்களை பார்க்கவும்