பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் மாபெரும் சாதனை படைத்து வருகிறார்

 

பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் மாபெரும் சாதனை படைத்து வருகிறார்...

பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி அமைந்திருந்தால் முப்பது முதல் 35 இடங்கள் வரை அந்தக் கூட்டணி பிடித்து இருக்கும் என்ற கருத்தை வெளியிட்டிருக்கும் அதிமுக எம்எல்ஏ எஸ் பி வேலுமணியின் கருத்தை வரவேற்றும் ஆமோதித்தும் இருக்கின்றார் திரு தமிழிசை சௌந்தர்ராஜன் ... 


இவுஹ நாலு வருஷம் கவர்னரா பதவியை அனுபவிச்சிட்டு இருப்பாஹளாம், பாரதிய ஜனதா கட்சி தமிழ்நாட்டில் தனித்து போட்டி என்றவுடன் தொபக்கிடீர்னு மக்களுக்கு சேவை செய்யப் போறேன்னு வந்து குதிப்பாஹளாம், உடனே இவருக்கு போட்டியிட மேலிடம் சீட்டும் கொடுக்குமாம், மூணு வருஷம் தெருத்தெருவா நாயா சுத்தி ஒவ்வொருத்தரையா பார்த்து பாஜகவை பிரபலப்படுத்திய மாநில தலைவர் இவுஹகூட பிரச்சாரத்திற்கு வரணுமாம், வந்து இரண்டரை லட்சம் ஓட்டு வாங்கி இரண்டாம் இடத்திற்கு வந்து இரண்டாவது நாளே அதிமுக கட்சியை சேர்ந்த வேலுமணி சொன்ன கருத்துக்கு இவ்வுஹ உடன்படுறாங்களாம், என்ன கொடுமை இது.


தென் சென்னையில தெருத்தெருவா  உங்க கூட சுத்தி வார்த்தைக்கு வார்த்தை உங்களை அக்கா என்று அழைத்து உங்களுக்காக பிரச்சாரம் செய்து நீங்கள் வகித்த கவர்னர் பதவியை துறந்து மக்களுக்கு சேவை செய்ய வந்தீர்கள் என்று உங்களை பெருமைப்படுத்தி பேசிய அந்த அண்ணாமலைக்கு நீங்கள் கொடுக்கும் அங்கீகாரம் பேஷ் பேஷ் நீங்களும் ஒரு சுயநல அரசியல்வாதி என்று நிரூபித்து விட்டீர்கள். 


அதிமுகவுடன் கூட்டணி வைத்திருந்தால் ஒப்புக்கு ஐந்தோ அல்லது ஆறு தொகுதிகள் மட்டும் தான் கிடைத்திருக்கும் அதுவும் எங்கே பாஜகவின் தேர்வில் அந்தத் தொகுதிகள் இருக்காது அதிமுக கொடுப்பதையே வாங்கிக் கொள்ள வேண்டும். குறிப்பாக கோயம்புத்தூரோ தென் சென்னையோ கொடுத்து இருக்க மாட்டார்கள், ஆனால் முன்னாள் கவர்னர் தமிழிசை அக்கா உங்களுக்கு தெரியுமா பாஜக தனியாக களம் கண்டதினால் தான் உங்களால் தென் சென்னையில் உரிமையோடு மேலிடத்தில் ஒப்புதல் வாங்கி போட்டியிட முடிந்தது. இன்னும் சொல்லப்போனால் எனக்கு தெரிந்தவரை பாஜகவின் S.H. சூர்யா என்ற நபர் தான் தென் சென்னையில் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது ஆனால் அவருடைய வாய்ப்பையும் தட்டி பறித்துவிட்டு சீனியர் என்ற முறையில் உங்களுக்கு வழங்கப்பட்டது. ஆனால் இன்றோ நீங்கள் வேலுமணியின் கருத்தை ஆதரிப்பதோடு மட்டுமல்லாமல் "அண்ணாமலை ஏனோ தெரியவில்லை கூட்டணிக்கு மறுப்பு தெரிவித்து விட்டார்" என்று சொல்லி இருக்கின்றீர்கள்.... இதிலிருந்தே அவர் மீது உங்களுக்கு இருக்கும் காழ்ப்புணர்ச்சி வெட்ட வெளிச்சமாக தெரிகின்றது.


எட்டு தொகுதிகளில் டெபாசிட் காலி 12 தொகுதிகளில் பாஜக கூட்டணி அதிமுகவை பின்னுக்கு தள்ளி விட்டது இதையெல்லாம் பார்த்து உங்களால் பாஜக வளர்ந்து விட்டது என்று மனதளவில் கூட நினைக்கத் தோன்றவில்லையா வெட்கக்கேடான மனோநிலை.... எப்படி உங்களால் தாமரை மலர்ந்தே தீரும் என்று கூப்பாடு போட தோணுகிறது?

 "அடுத்த முறை தேர்தல் வந்தால் தாமரை மலர்ந்தே தீரும் ஆனால் இரட்டை இலை உதவியுடனு இன்னும் சத்தமா கூவுங்க.."


ஒரு ஜெயலலிதா இருந்து பாஜகவுடன் கூட்டணி வைத்து ஏழு தொகுதிகளோ அல்லது ஆறு தொகுதிகள் கிடைத்திருந்து அவர்களுடன் இணைந்து போராடி இருந்தால் கூட நிச்சயம் ஒரு ஆறுதல் இருந்திருக்கும்... தன்னை ஜெயலலிதா என்று நினைத்துக் கொண்டு தான்தோன்றித்தனமாக முடிவெடுத்து சக கட்சி உறுப்பினர்களை வெளியே தள்ளி கூட்டணி கட்சியும் வெளியே தள்ளி ,பாரதிய ஜனதா கட்சி கடைசி நிமிடம் வரை கூட்டணிக்காக கதவு திறந்தே இருக்கின்றது என்று தன்னுடைய நிலைப்பாட்டிலிருந்து இறங்கி கீழே வந்த பொழுது கூட எந்த காலத்திலும் பாஜகவுடன் கூட்டு சேர மாட்டோம் ...இன்று மட்டுமல்ல இனி வருங்காலங்களில் கூட்டு என்பது இல்லை என்று சொல்லிக் கொண்டு சிறுபான்மை இன மக்களின் ஓட்டுக்கள் பறிபோனதே எங்களுக்கு பாரதிய ஜனதா கட்சியால்தான் என்று அறைகூவல் விடுத்த பழனிசாமியுடனா உங்களுக்கு கூட்டு வைத்திருக்க வேண்டும் என்று தோன்றுகின்றது?


ஒன்றரை வருடம் பாதயாத்திரை நடத்தி தெருத்தெருவாக மக்களை சந்தித்து ஒவ்வொருத்தரின் மனோநிலையை அறிந்து பாஜகவின் சின்னத்தையும் பாஜகவின் சித்தாந்தத்தையும் ஊழலற்ற ஆட்சியை கொடுப்பதாகவும் மக்களின் மனதில் பதிய வைத்து தேர்தல் நெருங்கும் நேரத்தில் கூட்டணி தர்மம் என்று சொல்லி அதிமுக காரன் சொல்லும் கோமாளி வேட்பாளர்களை ஆதரித்து மேடை ஏறி பேச வேண்டும் என்பதுதான் உங்களது எண்ணமா? தன்மானம் என்பது உங்கள் ரத்தத்தில் இல்லையா? 


பழனிசாமியும், வேலு மணியும், முனுசாமியும் ஓட்டாண்டியாகிப் போன அதிமுகவை, மக்கள் மத்தியில் எடுபடாமல், எம்ஜிஆரால் உருவாக்கப்பட்டு ஜெயலலிதாவால் அரும்பாடு பட்டு காப்பாற்றப்பட்டு வந்த அதிமுகவை

 இன்று தேர்தலில் மொத்தமாக நக்கிட்டு போன அதிமுகவை தூக்கி நிறுத்துவது போல் ஒன்றாக குரல் கொடுக்கின்றனர் அதை பார்த்தாவது உங்களுக்கு ரத்தம் கொதிக்க வேண்டாமா? 

அதற்குப் பின்பாவது நீங்கள் உங்கள் மாநிலத் தலைவர் அண்ணாமலையுடன் பாஜகவின் இரண்டாம் இட வெற்றியை பற்றி குரல் கொடுக்கக் கூடாதா?


உங்களோடு பயணித்த மாநிலத் தலைவர் உங்களுக்காக தெருத்துறைவாக சுற்றியவர் சுயநலமின்றி கட்சிக்காக உழைக்கின்றவர் குறைந்தபட்சம் அவருக்காகவாது அல்லது அதிமுக போலாவது கட்சியை விட்டுக் கொடுக்காமல் பேச வேண்டாமா? இப்படியா ஒரு மாநில தலைவரை விட்டுக் கொடுப்பது?


உண்மையைச் சொல்லப்போனால் நீங்களும் திரு பொன் ராதாகிருஷ்ணனும் நின்றிருக்காவிட்டால் பாஜகவில் வேறு ஒருவர் நிறுத்தப்பட்டிருந்தால் நிச்சயமாக தோற்று இருந்தால் கூட இன்னும் ஒரு லட்சம் ஓட்டு கண்டிப்பாக கிடைத்திருக்கும். 


தேர்தலின் முடிவுகளுக்கு பின்னர் வந்த புள்ளி விவரங்களின்படி பல இடங்களில் பாஜக இரண்டாம் இடத்தில் உள்ளது, உங்களைப் போன்றோர் பாஜகவினுடைய தொண்டர்களுக்கும் ,ஆர்வமாக உழைக்க காத்திருக்கும் இளைஞர்களுக்கும் இதை மேற்கோள் காட்டி இன்னும் வெறித்தனமாக வேலை செய்தால் இந்த இரண்டு திராவிட கட்சிகளையும் விரட்டி விடலாம் என்று அண்ணாமலை கூறியது போல் நீங்களும் கூறியிருந்தால் உண்மையில் நீங்கள் கட்சியை பலப்படுத்துவதற்கு உறுதுணையாக இருப்பீர்கள் என்று எண்ணம் தோன்றும் ஆனால் நீங்களோ கேவலம் அதிமுக கொடுக்கப் போகும் ஆறு அல்லது ஏழு தொகுதிகளுக்காக உங்களுக்காக உங்களுடன் பயணித்த மாநில தலைவரை அவமானப்படுத்துவது போல் நீங்கள் கருத்து கூறியிருப்பது மிகவும் வேதனை அளிக்கிறது. 


ஒரு போரில் முதலில் தனக்கு எதிரி என்பவன் யார் என்பதை உணர்பவனே உண்மையான வீரன்.‌  எதிரியுடன் போரிட்டுக் கொண்டிருக்கும் பொழுது தனக்கு ஆதரவாக தனது அருகில் போரிட்டுக் கொண்டிருக்கும் ஒரு சக வீரனை தன்னைவிட இவன் மிகப்பெரிய வீரனாக மாறிவிடுவான் என்று நினைத்து கத்தியை எடுத்து அவனுடைய கழுத்தை அறுப்பது போல் இங்கே பழனிசாமி அண்ட் கோ ஆண்டாண்டு காலமாக தங்களுக்கு எதிரியாக இருக்கின்ற திமுகவை விட்டுவிட்டு ஐந்தாண்டு காலம் தன்னை காப்பாற்றியும், மற்றும் திமுகவை முழு பலத்தோடு எதிர்த்து வந்த வந்த பாரதிய ஜனதா கட்சியை எதிரியாக பாவித்து  வெட்டி விட்ட அதிமுகவுடனா உங்களுக்கு கூட்டு வைக்காமல் போனது தப்பு  என்று சொல்லத் தோன்றுகிறது?


ஒவ்வொரு பத்திரிக்கை நிருபர்களிடமும் நான் தோற்கக்கூடிய நபர் அல்ல, நான் தோற்றதே பாஜகவினுடைய கூட்டணியில் இருந்ததால் தான், நான் ராஜா மாதிரி இருந்தேன், தோற்கக் கூடிய ஆளா நான்? என்று தன் தகுதி தெரியாமல் கொக்கரித்து மிகக் கேவலமாக பாஜகவை பேசிய அதிமுகவின் ஜெயக்குமாரின் மகனை அண்ணாமலையின் உழைப்பால் டெபாசிட் இழக்க செய்த உங்களுக்கு சரியான பதிலடி கொடுக்க வேண்டும் என்று தோன்றவில்லையே.. முதல் அடி நீங்கள் அல்லவா இடி போல் இறக்கி இருக்க வேண்டும் ஆனால் அதற்கு மாறாக எஸ்பி வேலுமணியின் கருத்தை ஆதரிக்கிறீர்கள், இந்த க்ஷண நேரத்தில் ஏன் நீங்கள் இரண்டாம் இடத்திற்கு வந்தீர்கள் என்று எங்களது மனம் கேட்கின்றது? 


தேர்தல் முடிவுக்கு பின்னர்  வந்த புள்ளி விவரங்களின்படி 2019 ஆம் வருட தேர்தலில் அதிமுகவுடன் கூட்டு வைத்து கிடைத்த ஓட்டுக்களை விட 2024 ஆம் ஆண்டு பாஜக தனித்து நின்று கிடைத்த ஓட்டுக்கள் மிக மிக அதிகம். அதைப் பார்த்தாவது உங்களுக்கு நம்பிக்கை வர வேண்டாமா? உண்மையில் இந்த அதிகப்படியான ஓட்டு திமுகவிற்கும் அதிமுகவிற்கும் மாற்றுக் கட்சியாக பாஜக தான் என்ற எண்ணத்தை மக்கள் மனதில் தோற்றுவித்ததினால் தான் இந்த பெறுவாரியான ஓட்டுக்கள் பாஜகவிற்கு கிடைத்தது அதற்கு காரணம் நிச்சயமாக அண்ணாமலையின் முயற்சியை தவிர வேறு எதுவுமே இல்லை. 


பாஜக இன்று தோற்று இருந்தாலும் மிகப்பெரிய அங்கீகாரம் கிடைத்திருக்கின்றது 15 சதவீத வாக்குகள் என்பது மிகப்பெரிய விஷயம். 

எல்லாம் சரி கூட்டணி என்பது அரசியலில் சகஜம் என்று ஏற்றுக் கொள்ளலாம், அரசியலில் நிரந்தர எதிரியும் அல்ல நிரந்தர நண்பனும் அல்ல இதன் அடிப்படையில் மறுபடியும் அதிமுகவுடன் கூட்டணி வரலாம் அதை வரவேற்போம் ஆனால் மறுபடியும் அதிமுகவின் கீழ் பாஜக கூட்டணி இல்லாமல் பாஜகவின் கீழ்தான் அ தி மு க கூட்டணி என்கின்ற அந்தஸ்தை பெற்றுக் கொடுத்தது இந்த மாபெரும் மனிதன் அண்ணாமலையின் முயற்சியால்தான்.

 தயவுசெய்து மறுபடியும் அதிமுகவின் காலடியில் நின்று இந்த இரண்டாம் இடம் கிடைத்த அந்தஸ்தை பழனிசாமியிடமும், முனுசாமியிடமும், ஜெயக்குமாரிடமும் அடகு வைத்து விடாதீர்கள். 


நேற்றைய தினம் மிகக் கொடூரமாக ஒரு ஆட்டை நடு ரோட்டில் வைத்து அதன் தலையை துண்டித்து அதன் ரத்தம் சாலை முழுவதும் வழிய வழிய இழுத்துச் சென்று அதன் மேல் அண்ணாமலையின் புகைப்படத்தை வைத்து தங்களுடைய வெறியை தீர்த்துக் கொண்ட திமுகவினரை பார்த்து ஒரு கண்டன குறலாவது நீங்கள் கொடுத்தீர்களா? திமுக காரன் மட்டும் ஆனந்தப்படவில்லை அண்ணா திமுக காரணம் சேர்ந்து தான் அந்த காட்சியை பார்த்து ஆனந்தப்பட்டிருப்பான். ஆனால் அந்த அண்ணாமலை உங்களுக்காக தன் தொகுதிக்கு மட்டும் செல்லாமல் தென் சென்னையை தெருத்தெருவாக சுற்றினார், கேவலம் அதற்காகவாவது உங்கள் தலைவரை நீங்கள் விட்டுக் கொடுக்காமல் இருந்திருக்கலாம் அல்லவா?

கடைசியாக:- 

எம்ஜிஆரிடம் இருந்த அசைக்க முடியாத தன்னம்பிக்கை

 ஜெயலலிதாவிடம் இருந்த இரும்பை போன்ற உறுதி இதுதான் அவர்களது தலைமை பண்பு இந்த தலைமை பண்பு தான் ஒரு கட்சியையும் அல்லது ஒரு மிகப்பெரும் படையையும் நிச்சயமாக வழிநடத்தும் அந்த தலைமை பண்பு அண்ணாமலைக்கு நிறையவே உண்டு தயவு செய்து அதை சீர் குலைத்து அல்பமான 20 அல்லது30 சட்டமன்ற தொகுதிகளுக்காக அடங்கிப் போகும் படி வைத்து விடாதீர்கள்..

Comments

Popular posts from this blog

8th August 11am, Delhi: MAHA PANCHAYAT- 100Cr HINDU Movement for Abolition of totally Discrminatory HR&CE Act.1951, all over India. Temples should function as independently as MOSQUES & CHURCHES. Money taken/swindled should be given back by Govts.

*RSS ப்ரார்தனா - RSS Prayer* *தமிழ் ஸ்லோகம் - தமிழ் மொழிபெயர்ப்பு* *நமஸ்தே ஸதா வத்ஸலே மாத்ரு பூமே* அன்பு காட்டும் தாய் நாடே! உன்னை நான் எப்பொழுதும் வணங்குகிறேன்🔥🙏🪷

*TENT DECOR CATERING EXPO 2024* - 4,5,6-Oct-2024 - Chennai Trade Centre, Nandambakkam Chennai