இனிமேல்* *வரும் காலங்களில்* *மரணங்கள் இப்படித்தான் இருக்கும்*....😟. *சென்னை பெசண்ட் நகரில்* *அமைந்திருந்தது அந்த பங்களா*...! *காலை 8மணி* *என்பதால்* *சாலை வழக்கப்படி பரபரப்பாக இருந்தது*..! *சரியாக 8.15க்கு அந்த வீட்டின் முன்*

 




*இனிமேல்*

*வரும் காலங்களில்* 

 *மரணங்கள் இப்படித்தான் இருக்கும்*....😟. 



*சென்னை பெசண்ட் நகரில்* *அமைந்திருந்தது அந்த பங்களா*...!


*காலை 8மணி* *என்பதால்*

*சாலை வழக்கப்படி பரபரப்பாக இருந்தது*..! 


*சரியாக 8.15க்கு அந்த வீட்டின் முன்* 

*நகரின் பிரபலமான மருத்துவமனைக்கு*

*சொந்தமான ஆம்புலன்ஸ் வந்து நின்றது*..! 


*அதிலிருந்து ஐஸ்பெட்டியில் வைக்கப்பட்டிருந்த* *உடலை* *மருத்துவமனை ஊழியர்கள் இறக்கி வீட்டிற்குள் வைத்துவிட்டு பணத்தைப்பெற்றுக்கொண்டு புறப்பட்டனர்*....! 


*ஆம்*...!!

*அநத குடும்பத்தலைவர் சுப்பிரமணிதான் நேற்றிரவு மாஸிவ் அட்டாக்கில் உயிர் விட்டிருந்தார்*...


*பிணத்தின் கால்மாட்டில் வந்து நின்ற அவர் மனைவி மாலா கணவரின் முகத்தைப்பார்த்து கண் கலங்கினாள்*..,.! 


*மணி 8.45*-

*நகரின் பிரபலமான பிரௌசிங் சென்டரிலிருந்து* *வந்த இரு நபர்கள் கேமிராவை பொருததி வீடியோ கான்பரன்சில்* 

*அவரது உடல் உலகெங்கும் தெரிய*

*செய்துவிட்டு*

*சென்றனர்*...!!


*பக்கத்துவீட்டு*

 *ராவ் வந்து துக்கம் விசாரித்துவிட்டு*

*சென்றார்*....! 


*ஆஸ்திரேலியா*-


*சிட்னியில் ஒதுக்குப்புறமான இடத்தில் அமைந்திருந்த அநத வீட்டின் வீடியோ கான்பரன்சிங்கில்* *தெரிந்த தன் தந்தையின்* *உடலைப்பார்த்து விசும்பினாள்*  *சுப்பிரமணியத்தின் மகள் மஞ்சு*..! 


*மதியம் 1மணிக்கு வீட்டுக்கு சாப்பிட வந்த அவள் கணவன்* *ஈஸ்வரன்* *என்ன? Body தெரியறதா*? 

*சரிசரி, எனக்கு சாப்பாடு போடு*. 

*நான் அர்ஜெண்டா போகணும்*" 

*என்று கூறிய படியே சாப்பாடு மேஜையில் உட்கார்ந்து சாப்பிட ஆரம்பித்தான்*...


*சிங்கப்பூர் நகரின் சற்றே ஒதுக்குப்புறமான பகுதியில் அமைந்திருந்தது கோபாலன் வீடு*....! 

*சுப்பிரமணியத்தின் இரணடாவது புத்திரன்*..!!


*ஏண்டி! நாம ஒரு எட்டு போய்ட்டு வந்திருக்கலாமோ*..?" *என்றான் கோபாலன்*, 

*சற்றே கவலையுடன்*..! 


*சும்மா இருங்க*.! 

*போன வருஷம்தானே போய்ட்டு வந்தோம்*..? *நாம போனா மட்டும் போன உயிர் வந்திடவா போகுது*..?

*பேசாம நெட்லயே பார்த்துக்கங்க*..!" 

*என அழகாகப்பேசினாள் அவனது சகதர்மினி பாமா*..

*கோபாலன் மௌனமானான்*...!!


*USAவில் லாஸ்ஏஞ்சல்ஸ் அருகேயுள்ள* *ஏஞ்சல்ஸ்  அபார்ட்மெண்டில்* 

*45 வது மாடியில்*  *இருந்தான் சீனிவாசன்*..! 

*சுப்ரமணியத்தின் ஜேஷ்ட குமாரன்*..!!

*காலை செய்தியை கேட்டபோதிருந்தே* *கலங்கி போயிருந்தான்*.! 

*கிருஷ்ணனின் மனைவி லிண்டா அவன் அருகே வந்து நின்று* 

*அவனது கையைப்பிடித்து*

*கொண்டாள்*..

*Don't worry dear* 

*You know, we can't do anything against the nature!!*" என்று *ஆறுதல் கூறினாள்*..! 

*அவளைத்திருமணம் செய்துகொண்டதால்தான்* 

*இன்று அவன் கிரீன்கார்டு சிட்டிசனாக அங்கே நிரந்தரமாகி இருக்கிறான்*...!!


*why are you looking sad dad*?

*Is anything going wrong*? " என்று *அவனைப்பார்த்து பாசத்துடன் கேட்டாள்* *அவனது 5வயது மகள் ரோஸலின்*..! 

*அவனது கண்கள் மானிட்டர் மீதே நிலைத்திருந்தது*.......!!


*சென்னையில் காலை 10.30*..! 

*பெசண்ட் நகரில் சுப்பிரமணியம் உடல் மீது* 

*ஒரு பெரிய மாலையை*

*கொண்டுவந்து* *போட்டார் ராவ்*..! 

*வெளியே யாரோ வரும் அரவம் கேட்டது*..! 


*தான் போனவாரம் புதிதாய் வாங்கிய*

*BMW ல் சம்பந்தி சாந்தமூர்த்தியுடன்*

(*யெஸ், தட் பாமாவின் அப்பா*) *வந்து இறங்கினார் நீலகண்ட சாஸ்திரிகள்*....! 


*அவரது கையில் லேப்டாப்பும்* 

*சிலபல எலக்ட்ரானிக் டிவைஸ்களும் இருந்தன*....! 


*சுப்பிரமணியத்தின் உடலைப்பார்த்ததும்* *கடந்த ஓரிரு மாதங்களுக்கு முன்* *அவர் தன்னிடம் கூறியது சாஸ்திரிகள் நினைவுக்கு வந்தது*.   *எப்படியாவது என் பெரிய மகன் கையால எனக்கு கொள்ளி வைக்கணும்* ‌!  *அதுதான் எனக்கு கடைசி ஆசை சாஸ்திரிகளே*!" என்று *தம்மிடம் கூறியதை நினைவு கூர்ந்து நீண்ட பெருமூச்சு விட்டார்*..!...


*நேரம் பிற்பகல்*

 *3..மணியை*

*தாண்டியது*.! 


*இறுதி ஊர்வலத்திற்கு சாஸ்திரிகள் ஏற்பாடு செய்தபடி* 

*அட்வான்ஸ் டெக்னாலஜியுடன் கூடிய* 

*தனியார் வாகனம் வந்து நின்றது*.

*காரியங்கள் மளமளவென நடந்தன*.! 


*ஓரிரு சடங்குகளை செய்தபின் உடல் வாகனத்தில் ஏற்றப்பட்டது*..! 


*BMWகாரில் வந்திருந்த நான்கைந்து உறவினர்கள்* *ஏறிக்கொள்ள அடுத்த பத்தாவது நிமிடம் சடலம் சுடுகாட்டை அடைந்தது*...


*மணி 4.30* 

*சுடுகாட்டில் இருந்த உதவியாளன்*   

*என்ன சாமி, இந்தக்காலத்துல யாருமே விறகு வெச்சி பொணத்தை எரிக்கறதே இல்ல*..! *கரண்ட்லயும்* 

*gasலயும் தான்* *எரிக்கறாங்க* ...

*நீங்க என்னடான்னா வெறகே வேணும்னு கேக்கறீங்க*!" *என்றான் சாஸ்திரிகளிடம்*..! 


*நீ தொணதொணன்னு பேசாம வேலையை பாருப்பா*!" என்றார் *சாஸ்திரிகள்*.


*விறகுக்கட்டைகள் அடுக்கப்பட்டு* *அதன்மீது சுப்பிரமணியம் உடல் வைக்கப்பட்டது*..


 *சிலபல எலக்ட்ரானிக் வேலைகளை செய்தபிறகு* 

*தனது லேப்டாப்பை ஆன் செய்து* *யாருடனோ வீடியோவில் பேசினார்*....

*உடலைச்சுற்றி பெட்ரோல் ஊற்றினார்*.

*பெட்ரோல் மீது பட்டாசு போன்ற ஒரு டிவைசை வைத்தார்*...


*வீடியோ காமிராவில்* *சில மந்திரங்களை சொல்லியபடி* 

*சரி சீனிவாசன்*, 

*நீ இக்னிட்டரை ஆன் பண்ணு*...!" *என்றார்*.


*திரையில் தெரிந்த* *அமெரிக்காவிலிருந்த சீனிவாசன் தன் கையிலிருந்த கேஸ் அடுப்பின் லைட்டர் போன்ற ஒரு வஸ்துவை* 

*கம்ப்யூட்டர் மானிட்டரை நோக்கி* *கண்களில் கண்ணீருடன் அழுத்த* 


*அடுத்த கணம் சென்னை பெசண்ட் நகரில் சுடுகாட்டில் கிடத்தப்பட்டிருந்த சுப்பிரமணியத்தின் உடலின் மீது ஊற்றியிருந்த பெட்ரோல் குபுக்கென பற்றியது*..! 

ஒரு இரண்டு நிமிடம் அமைதியாக நின்றிருந்த அனைவரும்* 

*பின் ஒவ்வொருவராக கலைந்தனர்கொள்ளி வைத்த சீனிவாசன் தன் தந்தையின் மீது பாசம் மேலிட அமெரிக்காவில் குமுறிக்குமுறி அழுதான்*...

இண்டர்நெட்டில் அப்பாவின் முகம் பல பழைய நினைவுகளை அவன் கண் முன் கொண்டு வந்தது*...! 

சுப்பிரமணியத்தின் கடைசி ஆசையை நிறைவேற்றிய மனநிறைவுடன்* *தானும் வீட்டுக்கு கிளம்பினார் சாஸ்திரிகள்படித்தேன் பகிர்ந்தேன்* 😭😭😭😭😭😭😭😭😭😭

Comments

Popular posts from this blog

Om NAMO NArendra MOdi Namaha*🔥🙏🪷 Shri Narendra Modi Ashtotra Namavali ஓம் ஸ்ரீ நரேந்த்ராய நமஹ (Salutations to the revered Narendra) 1. ஓம் விஶ்வ-நேத்ரே நமஹ – Salutations to the leader of the world stage. 2. ஓம் பாரத-பக்தாய நமஹ – Salutations to India’s devoted champion. 3. ஓம் ஜடூ-ஜப்பி-ப்ரதாய நமஹ – Salutations to the giver of world-famous hugs.

The sound of gunfire pierced the air of the quiet valleys. A terrorist attack took place near the Pahalgam market area — *turning a place like paradise into hell.* People screamed. Blood flowed. There was chaos everywhere. *👺 "The terrorists were asking for names and religions and then firing bullets."*

SUGA Elite Cruise Travellers Club* SUGA Elite Cruise Travellers Club is in tie-ups with international Cruise T I'll keep you ours and Travels companies. We can travel with the following major cruise lines: