இனிமேல்* *வரும் காலங்களில்* *மரணங்கள் இப்படித்தான் இருக்கும்*....😟. *சென்னை பெசண்ட் நகரில்* *அமைந்திருந்தது அந்த பங்களா*...! *காலை 8மணி* *என்பதால்* *சாலை வழக்கப்படி பரபரப்பாக இருந்தது*..! *சரியாக 8.15க்கு அந்த வீட்டின் முன்*

 




*இனிமேல்*

*வரும் காலங்களில்* 

 *மரணங்கள் இப்படித்தான் இருக்கும்*....😟. 



*சென்னை பெசண்ட் நகரில்* *அமைந்திருந்தது அந்த பங்களா*...!


*காலை 8மணி* *என்பதால்*

*சாலை வழக்கப்படி பரபரப்பாக இருந்தது*..! 


*சரியாக 8.15க்கு அந்த வீட்டின் முன்* 

*நகரின் பிரபலமான மருத்துவமனைக்கு*

*சொந்தமான ஆம்புலன்ஸ் வந்து நின்றது*..! 


*அதிலிருந்து ஐஸ்பெட்டியில் வைக்கப்பட்டிருந்த* *உடலை* *மருத்துவமனை ஊழியர்கள் இறக்கி வீட்டிற்குள் வைத்துவிட்டு பணத்தைப்பெற்றுக்கொண்டு புறப்பட்டனர்*....! 


*ஆம்*...!!

*அநத குடும்பத்தலைவர் சுப்பிரமணிதான் நேற்றிரவு மாஸிவ் அட்டாக்கில் உயிர் விட்டிருந்தார்*...


*பிணத்தின் கால்மாட்டில் வந்து நின்ற அவர் மனைவி மாலா கணவரின் முகத்தைப்பார்த்து கண் கலங்கினாள்*..,.! 


*மணி 8.45*-

*நகரின் பிரபலமான பிரௌசிங் சென்டரிலிருந்து* *வந்த இரு நபர்கள் கேமிராவை பொருததி வீடியோ கான்பரன்சில்* 

*அவரது உடல் உலகெங்கும் தெரிய*

*செய்துவிட்டு*

*சென்றனர்*...!!


*பக்கத்துவீட்டு*

 *ராவ் வந்து துக்கம் விசாரித்துவிட்டு*

*சென்றார்*....! 


*ஆஸ்திரேலியா*-


*சிட்னியில் ஒதுக்குப்புறமான இடத்தில் அமைந்திருந்த அநத வீட்டின் வீடியோ கான்பரன்சிங்கில்* *தெரிந்த தன் தந்தையின்* *உடலைப்பார்த்து விசும்பினாள்*  *சுப்பிரமணியத்தின் மகள் மஞ்சு*..! 


*மதியம் 1மணிக்கு வீட்டுக்கு சாப்பிட வந்த அவள் கணவன்* *ஈஸ்வரன்* *என்ன? Body தெரியறதா*? 

*சரிசரி, எனக்கு சாப்பாடு போடு*. 

*நான் அர்ஜெண்டா போகணும்*" 

*என்று கூறிய படியே சாப்பாடு மேஜையில் உட்கார்ந்து சாப்பிட ஆரம்பித்தான்*...


*சிங்கப்பூர் நகரின் சற்றே ஒதுக்குப்புறமான பகுதியில் அமைந்திருந்தது கோபாலன் வீடு*....! 

*சுப்பிரமணியத்தின் இரணடாவது புத்திரன்*..!!


*ஏண்டி! நாம ஒரு எட்டு போய்ட்டு வந்திருக்கலாமோ*..?" *என்றான் கோபாலன்*, 

*சற்றே கவலையுடன்*..! 


*சும்மா இருங்க*.! 

*போன வருஷம்தானே போய்ட்டு வந்தோம்*..? *நாம போனா மட்டும் போன உயிர் வந்திடவா போகுது*..?

*பேசாம நெட்லயே பார்த்துக்கங்க*..!" 

*என அழகாகப்பேசினாள் அவனது சகதர்மினி பாமா*..

*கோபாலன் மௌனமானான்*...!!


*USAவில் லாஸ்ஏஞ்சல்ஸ் அருகேயுள்ள* *ஏஞ்சல்ஸ்  அபார்ட்மெண்டில்* 

*45 வது மாடியில்*  *இருந்தான் சீனிவாசன்*..! 

*சுப்ரமணியத்தின் ஜேஷ்ட குமாரன்*..!!

*காலை செய்தியை கேட்டபோதிருந்தே* *கலங்கி போயிருந்தான்*.! 

*கிருஷ்ணனின் மனைவி லிண்டா அவன் அருகே வந்து நின்று* 

*அவனது கையைப்பிடித்து*

*கொண்டாள்*..

*Don't worry dear* 

*You know, we can't do anything against the nature!!*" என்று *ஆறுதல் கூறினாள்*..! 

*அவளைத்திருமணம் செய்துகொண்டதால்தான்* 

*இன்று அவன் கிரீன்கார்டு சிட்டிசனாக அங்கே நிரந்தரமாகி இருக்கிறான்*...!!


*why are you looking sad dad*?

*Is anything going wrong*? " என்று *அவனைப்பார்த்து பாசத்துடன் கேட்டாள்* *அவனது 5வயது மகள் ரோஸலின்*..! 

*அவனது கண்கள் மானிட்டர் மீதே நிலைத்திருந்தது*.......!!


*சென்னையில் காலை 10.30*..! 

*பெசண்ட் நகரில் சுப்பிரமணியம் உடல் மீது* 

*ஒரு பெரிய மாலையை*

*கொண்டுவந்து* *போட்டார் ராவ்*..! 

*வெளியே யாரோ வரும் அரவம் கேட்டது*..! 


*தான் போனவாரம் புதிதாய் வாங்கிய*

*BMW ல் சம்பந்தி சாந்தமூர்த்தியுடன்*

(*யெஸ், தட் பாமாவின் அப்பா*) *வந்து இறங்கினார் நீலகண்ட சாஸ்திரிகள்*....! 


*அவரது கையில் லேப்டாப்பும்* 

*சிலபல எலக்ட்ரானிக் டிவைஸ்களும் இருந்தன*....! 


*சுப்பிரமணியத்தின் உடலைப்பார்த்ததும்* *கடந்த ஓரிரு மாதங்களுக்கு முன்* *அவர் தன்னிடம் கூறியது சாஸ்திரிகள் நினைவுக்கு வந்தது*.   *எப்படியாவது என் பெரிய மகன் கையால எனக்கு கொள்ளி வைக்கணும்* ‌!  *அதுதான் எனக்கு கடைசி ஆசை சாஸ்திரிகளே*!" என்று *தம்மிடம் கூறியதை நினைவு கூர்ந்து நீண்ட பெருமூச்சு விட்டார்*..!...


*நேரம் பிற்பகல்*

 *3..மணியை*

*தாண்டியது*.! 


*இறுதி ஊர்வலத்திற்கு சாஸ்திரிகள் ஏற்பாடு செய்தபடி* 

*அட்வான்ஸ் டெக்னாலஜியுடன் கூடிய* 

*தனியார் வாகனம் வந்து நின்றது*.

*காரியங்கள் மளமளவென நடந்தன*.! 


*ஓரிரு சடங்குகளை செய்தபின் உடல் வாகனத்தில் ஏற்றப்பட்டது*..! 


*BMWகாரில் வந்திருந்த நான்கைந்து உறவினர்கள்* *ஏறிக்கொள்ள அடுத்த பத்தாவது நிமிடம் சடலம் சுடுகாட்டை அடைந்தது*...


*மணி 4.30* 

*சுடுகாட்டில் இருந்த உதவியாளன்*   

*என்ன சாமி, இந்தக்காலத்துல யாருமே விறகு வெச்சி பொணத்தை எரிக்கறதே இல்ல*..! *கரண்ட்லயும்* 

*gasலயும் தான்* *எரிக்கறாங்க* ...

*நீங்க என்னடான்னா வெறகே வேணும்னு கேக்கறீங்க*!" *என்றான் சாஸ்திரிகளிடம்*..! 


*நீ தொணதொணன்னு பேசாம வேலையை பாருப்பா*!" என்றார் *சாஸ்திரிகள்*.


*விறகுக்கட்டைகள் அடுக்கப்பட்டு* *அதன்மீது சுப்பிரமணியம் உடல் வைக்கப்பட்டது*..


 *சிலபல எலக்ட்ரானிக் வேலைகளை செய்தபிறகு* 

*தனது லேப்டாப்பை ஆன் செய்து* *யாருடனோ வீடியோவில் பேசினார்*....

*உடலைச்சுற்றி பெட்ரோல் ஊற்றினார்*.

*பெட்ரோல் மீது பட்டாசு போன்ற ஒரு டிவைசை வைத்தார்*...


*வீடியோ காமிராவில்* *சில மந்திரங்களை சொல்லியபடி* 

*சரி சீனிவாசன்*, 

*நீ இக்னிட்டரை ஆன் பண்ணு*...!" *என்றார்*.


*திரையில் தெரிந்த* *அமெரிக்காவிலிருந்த சீனிவாசன் தன் கையிலிருந்த கேஸ் அடுப்பின் லைட்டர் போன்ற ஒரு வஸ்துவை* 

*கம்ப்யூட்டர் மானிட்டரை நோக்கி* *கண்களில் கண்ணீருடன் அழுத்த* 


*அடுத்த கணம் சென்னை பெசண்ட் நகரில் சுடுகாட்டில் கிடத்தப்பட்டிருந்த சுப்பிரமணியத்தின் உடலின் மீது ஊற்றியிருந்த பெட்ரோல் குபுக்கென பற்றியது*..! 

ஒரு இரண்டு நிமிடம் அமைதியாக நின்றிருந்த அனைவரும்* 

*பின் ஒவ்வொருவராக கலைந்தனர்கொள்ளி வைத்த சீனிவாசன் தன் தந்தையின் மீது பாசம் மேலிட அமெரிக்காவில் குமுறிக்குமுறி அழுதான்*...

இண்டர்நெட்டில் அப்பாவின் முகம் பல பழைய நினைவுகளை அவன் கண் முன் கொண்டு வந்தது*...! 

சுப்பிரமணியத்தின் கடைசி ஆசையை நிறைவேற்றிய மனநிறைவுடன்* *தானும் வீட்டுக்கு கிளம்பினார் சாஸ்திரிகள்படித்தேன் பகிர்ந்தேன்* 😭😭😭😭😭😭😭😭😭😭

Comments

Popular posts from this blog

SUGA Elite Cruise Travellers Club* SUGA Elite Cruise Travellers Club is in tie-ups with international Cruise T I'll keep you ours and Travels companies. We can travel with the following major cruise lines:

சிறுகதை: *வெங்கட்ராமன் முடிவு சரியா தப்பா??* வெங்கட்ராமன் நன்கு படித்த பிராமண பையன். நல்ல வேலை. ஆள் பார்க்க மிக நன்றாக இருப்பான். வயது 38. ஆனால் திருமணத்திற்கு பிராமண பெண் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இன்னும் சரியாக அமையவில்லை. அவர்கள் குடும்பம் பழமையான பிராமண குடும்பம். வெங்கட்ராமன் வீட்டுக்கு வந்து அம்மா அப்பாவிடம் பேசினான். "அப்பா, எல்லாம் நல்லபடியா முடிஞ்சது அந்த ஆபீசுக்கு போய் அந்த பொண்ணோட பேசிட்டேன்...

எனது பாட்டி -விஜயா பாரதி மகாகவி பாரதியின் பெயர்த்தியான திருமதி. விஜயா பாரதி, கனடாவில் வசிக்கிறார். பாரதியின் புகழ் பரப்பும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் அன்னாரது கட்டுரை இது... உங்களுக்கு என் தாத்தா பாரதியை நன்கு தெரிந்திருக்கலாம். அவரின் இறுதிக் காலத்தைப் பற்றி பலர் எழுதி இருக்கிறார்கள். ஆனால் என் பாட்டி செல்லம்மாள், என் தாத்தாவின் மரணத்துக்குப் பிறகு எப்படி வாழ்ந்தார், மறைந்தார் என்பது பலருக்கும் தெரியாது