தமிழகம் ; இரண்டரை இலட்சம் ஏக்கர் கோவில் நிலங்களை ஆட்டையை போட்ட டிவிஎஸ்., தினமலர், சிவசைலம், ராம்கோ சிமெண்ட், திருவாடுதுறை ஆதினம் உள்ளிட்ட ஐந்து கோமான்கள்- 75 வயது முதியவர் ஹரிஹரன் ஆலய பாதுகாப்பு இயக்கம் பரபரப்பு குற்றச்சாட்டு..!?

 


🇸‌🇹‌🇲‌ 🇳‌🇪‌🇼‌🇸‌

     *_16 DEC 2024_*


_*தமிழகம் ; இரண்டரை இலட்சம் ஏக்கர் கோவில் நிலங்களை ஆட்டையை  போட்ட டிவிஎஸ்., தினமலர், சிவசைலம், ராம்கோ சிமெண்ட், திருவாடுதுறை ஆதினம் உள்ளிட்ட ஐந்து கோமான்கள்- 75 வயது முதியவர் ஹரிஹரன் ஆலய பாதுகாப்பு இயக்கம் பரபரப்பு குற்றச்சாட்டு..!?*_ 


*தலைமை செயலாளரே, ”இந்து அற நிலையத் துறை கோவில்கள், சமய நிறுவனங்கள் சி.ஏ.ஜி., மற்றும் டி.பி.சி., சட்டத்தின் கீழ் வராதா? இது என்ன கொடுமை.* 


*கோவில் சொத்தை செல்வாக்கான தனி நபர்கள் அபகரிக்கிறார்கள் என்பதால் இந்து மக்கள் வரிப்பணத்தில் இந்து சமய அறநிலையத் துறை ஏற்படுத்தப்பட்டு, இத்துறையின் வழிவரும் அனைத்து ஊழியர்களுக்கும் மாத ஊதியமும் வழங்கிக் கொண்டிருக்கிறது.* 


*அவ்வாறான இந்து சமய அறநிலையத்துறை இருந்தும் கூட அது தற்போது எலிப்புழுக்கை அளவிற்கு கூட பிரயோஜனம் இல்லை என்பதே நிதர்சனமான உண்மை.* 


*இதை மெய்ப்பிக்கும் விதமாக, டிவிஎஸ், தினமலர், சிவசைலம், ராம்கோ சிமெண்ட், திருவாவடுதுறை ஆதீனம் போன்றவர்கள்  கோயில் சொத்தான சுமார் இரண்டு லட்சம் ஏக்கர் நிலங்களை எப்படி ஆட்டையை போட்டனர்?* 


*_மேற்கண்ட இவர்கள் எல்லாம் எம் இந்துக்களது  கோயில் சொத்தை வைத்து, விற்று தொழிலதிபர்கள் ஆனார்களா? கோயில் சொத்தை அபகரிக்கவே தொழிலதிபர்கள் எனும் அவதாரம் எடுத்தார்களா?_* 


_*இங்கே எம் மக்கள் வாழ வழியின்றி தெருவில் வசிக்கிறார்கள் உங்களுக்கு கோயில் சொத்தான 140 ஏக்கரில் சொகுசாய் ஆடம்பரமாய் பண்ணை வீடு ஓர் கேடா?*_ 


*அந்த காலத்தில் தர்ம சிந்தனையுள்ள நல்லோர்கள் தங்கள் சொத்தின் ஒரு பகுதியை கோவிலுக்கு தருவது ஒரு வழக்கமாக கடைபிடிக்கப்பட்டது.* 


*அந்த வகையில் லட்சக்கணக்கான ஏக்கர் நிலங்கள் தமிழ் நாட்டில் கோவில்களுக்கு தானமாக தரப்பட்டுள்ளது.*


*அவற்றை அந்தக் கோவிலில் உள்ள அர்ச்சகர்களும், உள்ளூர் முக்கியஸ்தர்களும் அபகரித்து வந்தனர் என்ற குற்றச்சாட்டு பலமாக எழுந்ததையடுத்து இந்து அறநிலையத் துறை உருவானது.* 


*அப்படி உருவான  இந்து அறநிலையத்துறை ஓரளவு நில அபகரிப்பை கட்டுப்படுத்தினாலும், பெரும் செல்வாக்கு மிக்க சில செல்வாக்கான நபர்கள் கோவில் சொத்துக்களை அபகரித்ததை அரசால் மீட்கவே முடியவில்லை என்பது தான் வருத்தமான உண்மையாகும்.* 


*இந்த உண்மைகள் வெளியே தெரியக் கூடாது என்பதால் தான் ”சிஏஜி, டிபிசி சட்டத்தின் கீழ் அறநிலையத் துறை வராது” என்கிறதா எனத் தெரியவில்லை.* 


*முதன்மை கணக்காய்வுத் தலைவர் (தணிக்கை2) கோ.ப.ஆனந்த் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசும் போது ஒரு அதிர்ச்சி தகவலை வெளிப்படுத்தினார்.* 


*அது என்னவென்றால், ”நாங்கள் இந்து சமய அற நிலையத் துறையின் சொத்துக்களின் மேளாண்மை என்ற தலைப்பில் தணிக்கை மேற்கொள்ள முயன்றோம்.*


*இது குறித்து நாங்கள் இந்து சமய அற நிலையத்துறை அதிகாரிகளிடம்  ஆவணங்கள் கோரிய போது,* 


*சி.ஏ.ஜி., தணிக்கை செய்ய அவர்கள் ஒத்துழைப்பு தரவில்லை. எந்த ஆவணங்களையும் வெளிப்படுத்த தயாரில்லாதவர்களாக இருந்தனர்.* 


*இது குறித்து நாங்கள் தலைமை செயலாளரிடம் முறையிட்ட போது அவர், ”இந்து அற நிலையத் துறை கோவில்கள், சமய நிறுவனங்கள் சி.ஏ.ஜி., மற்றும் டி.பி.சி., சட்டத்தின் கீழ் வராது.* 


*ஆகவே, நாங்கள் உடன் பட மாட்டோம் என தமிழ்நாடு அரசு மறுக்கிறது” எனக் கூறியுள்ளார்.* 


*இது குறித்து  திருமலைக் கொழுந்துபுரம் பிராமண மஹாஜனத்தின்(Kadayanallur Braamana Mahaajnam Manippa Kattalai) டிரஸ்டியும், ஆலய பாதுகாப்பு இயக்கத்தின் தலைவருமான எஸ்.ஹரிகரனிடம் (75) பேசிய போது,* 


*”கோவில் சொத்துக்களை மீட்கக் கோரி பல ஆண்டுகளாக நான் நீதிமன்றப் படிகளில் ஏறி, இறங்கி வருகிறேன். காவல்துறையில் பல முறை புகார் மனுக்களை ஆதாரத்துடன் அளித்துள்ளேன்.* 


*அந்த வகையில் அன்றைய டிஜிபி லத்திகாசரண், ஏடிஜிபி உமா மகேஷ்வரி ஆகியோர் நான் தந்த ஆவணங்கள்படி தீவிர விசாரணை நடத்தி அறிக்கை தயாரித்து அரசாங்கத்திடம் அளித்துள்ளனர்.* 


*அதன் சாராம்சம் என்னவென்றால், திருநெல்வேலி மாவட்டத்தில் மட்டுமே சுமார் இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்களை இந்து சமய அற நிலையத் துறையிடம் இருந்து செல்வாக்கான ஐவர் அபகரித்து ஏஜெண்ட்களை வைத்து போலி பட்டா, சிட்டாக்களை உருவாக்கி,* 


*அந்த போலி ஆவணங்கள் மூலமாக கணிசமான நிலங்களை விற்றும் விட்டனர்.* 


*இந்த வகையில் எங்கள் திருமலை கொழுந்துபுரம் பிராமண மகாஜன அறக்கட்டளைக்கு அன்றைய திருவாங்கூர் சமஸ்தானத்தால் வழங்கட்ட கோவில் சொத்துக்கள் பலவற்றை எங்கள்  நெருங்கிய உறவினர்களான தினமலர் குழுமத்தாரே அபகரித்துள்ளது தான் என்னை அடங்கமாட்டா ஆற்றாமையில் ஆழ்த்தியுள்ளது.* 


*மேலும், தினமலர் குழுமத்துடன் பாரம்பரிய தொழில் நிறுவனமான டிவிஎஸ் , சிவசைலம், ராம்கோ சிமெண்ட், திருவாவடுதுறை ஆதினம்  ஆகியவை தான் இந்த இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட கோவில் நிலங்களை அபகரித்தவர்கள்.* 


*இது எப்படி நிகழ்ந்தது என்றால், திருநெல்வேலியில் வைகை சுப்பிரமணிய தம்பிரான் அவர்கள் கண்காணிப்பில் இருந்த ஆலய சொத்துக்களை எங்கள் திருமலைக் கொழுந்து மகாஜன அறக்கட்டளைக்குரிய இடங்களையும் நாங்கள் பராமரிப்பு பணி மேற்கொள்கிறோம் என கேட்டு வாங்கி,* 


*கூட்டுச்சதி, போலி ஆவணம் உள்ளிட்ட மோசடிகளை அரங்கேற்றி, தினமலர் வைத்தியநாத ஐயரும் , ஏ.சிவசைலமும், ராம்கோ ராமசாமி ராஜாவும், டிவிஎஸ் ஐயங்காரும், திருவாவடுதுறை ஆதீனம் அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சாமிகளும் அபகரித்துள்ளனர்.* 


*இதை நான் நீதிமன்றத்திலேயே பகிரங்கமாக தெரிவித்துள்ளேன். கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக நான் ஏறாத கோர்ட் இல்லை. பேசாத அதிகாரி இல்லை. காவல் துறையிலும், அற நிலையத் துறையிலும் தான்,* 


*இதில் என் நெருங்கிய உறவினர்களான தினமலர் குழுமம் மட்டுமே 70,000 ஏக்கர் நிலங்களை அபகரித்து ஏஜெண்டுகளை வைத்து விற்றுள்ளனர்.* 


*தற்போது அவர்கள் வசம் சுமார் 200 ஏக்கர் நிலங்களை மட்டும் வைத்துக் கொண்டு  மற்றவற்றை விற்றுவிட்டது தினமலர் குழுமம்.* 


*இவர்கள் மீது எப்.ஐ.ஆர் எல்லாம் போட்டு விசாரணைகள் நடந்து நீதிமன்றமே ஆணையிட்டும் கூட எந்த ஆட்சியாளர்களும் தினமலர் மீது நடவடிக்கை எடுக்கவில்லை.* 


*காரகுறிச்சியில் தினமலர் குடும்பத்தினர் வைத்திருக்கும் சொகுசு பண்ணை 140 ஏக்கர் நிலம் என்பது மூன்று கோவில்களுக்கு பாத்தியப்பட்டதாகும்.* 


*அம்பா சமுத்திரத்தில் சிவசைலம் வசம் உள்ள ஜவுளி மில் என்பது கோவில் சொத்து தான்.* 


*இந்த சிவ சைலத்திடம் வேலைக்கு சேர்ந்து அவரிடம் ஆட்டையை போட்டு நிலத்தை அபகரித்துக் கொண்டவர் இந்தியா சிமெண்ட் சீனிவாசனின் அப்பா நாராயணசாமியாகும்.* 


*மதுரை இரயில்வே ஸ்டேசன் எதிரில் கோவிலுக்கு வரும் யாத்தீரீகள் தங்குவதற்காக உருவாக்கப்பட்ட மங்கம்மா சத்திரத்தை டிவிஎஸ் குழுமம் ஆட்டையை போட்டதை இன்று வரை யாராலும் மீட்க முடியவில்லை.* 


*முன்னாள் தேனி மாவட்ட ஆட்சித் தலைவரும், அறநிலையத் துறை ஆணையரான  க.வீ. முரளிதரன் இருந்த போது அவர்  நேர்மையாக சில நடவடிக்கை எடுத்ததன் பலனாக, அவரை தூக்கிவிட்டு குமரகுருபனை போட்டு கண்ட்ரோலர் ஆப் அத்தாரிட்டி ஆக்கினார்கள்.* 


*அவருக்கு ரூ.250 கோடிகள் தந்து பெரும்புள்ளிகள் சமாளித்து விட்டனர்.* 


*இதை நான் பலமுறை எழுதியும், பேசியும் எந்த நடவடிக்கையும் இல்லை.* 


*இதனால் என் மீது மூன்று முறை கொலை முயற்சி நடந்துள்ளன.* 


*அறநிலையத் துறை கட்டிடங்கள் மற்றும் நிலங்களை அபகரித்து வைத்திருக்கும் பெரிய மனிதர்களிடம் இவர்களால் வாடகை கூட வசூலிக்க முடிவதில்லை.* 


*அப்புறம் எதற்கு அரசாங்கம், அதிகாரிகள்? அவர்களுக்கு மக்கள் வரிப்பணத்தில் சம்பளம்? என்று தான் கேட்கத் தோன்றுகிறது.* 


*தமிழ்நாட்டில் யார் ஆட்சிக்கு வந்தாலும் சரி, இந்த பெரும் புள்ளிகளை நெருங்கவே முடியாத நிலையே இன்று வரை தொடர்கிறது.* 


*என்னைப் போன்ற சாமானியனால் மனு ஆயுதப் போராட்டம் நடத்தி புகார்கள் மட்டுமே தர முடியும் வேறென்ன செய்ய முடியும் என புலம்பி வருகிறார்.* 


*கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக கோயில் சொத்துக்களை மீட்க போராடும் 75 வயது பெரியவர் ஆலய பாதுகாப்பு இயக்கத்தின் மாநில துணை தலைவர் எஸ்.ஹரிகரன்.*


*கோயில் சொத்தை விற்று தொழிலதிபர்கள் ஆனார்களா..?* 


*கோயில் சொத்துக்களை அபகரிக்கவே தொழிலதிபர்கள் அவதாரம் எடுத்தார்களா..?*


_*தேனி மாவட்ட நிருபர் & மக்கள் அதிகாரம்/சட்ட தமிழ் மாத இதழ்களின் இணை ஆசிரியர் & தமிழ்நாடு சமூகநல பத்திரிக்கையாளர் கூட்டமைப்பின் மாநில பொது செயலாளர்- வேப்பம்பட்டி சுகன்யா த.முரளிதரன்.*_ 

9597226752

6380097960

Comments

Popular posts from this blog

Om NAMO NArendra MOdi Namaha*🔥🙏🪷 Shri Narendra Modi Ashtotra Namavali ஓம் ஸ்ரீ நரேந்த்ராய நமஹ (Salutations to the revered Narendra) 1. ஓம் விஶ்வ-நேத்ரே நமஹ – Salutations to the leader of the world stage. 2. ஓம் பாரத-பக்தாய நமஹ – Salutations to India’s devoted champion. 3. ஓம் ஜடூ-ஜப்பி-ப்ரதாய நமஹ – Salutations to the giver of world-famous hugs.

The sound of gunfire pierced the air of the quiet valleys. A terrorist attack took place near the Pahalgam market area — *turning a place like paradise into hell.* People screamed. Blood flowed. There was chaos everywhere. *👺 "The terrorists were asking for names and religions and then firing bullets."*

SUGA Elite Cruise Travellers Club* SUGA Elite Cruise Travellers Club is in tie-ups with international Cruise T I'll keep you ours and Travels companies. We can travel with the following major cruise lines: