கவிஞர் வாலி எம்.ஜி ஆரைப் பற்றி எழுதிய கவிதை. நீ இந்தியாவில் பிறந்து இலங்கைக்கு சென்ற- இராமச்சந்திரனல்ல; இலங்கையில் பிறந்து இந்தியா வந்த இராமச்சந்திரன்

 


கவிஞர் வாலி எம்.ஜி ஆரைப் பற்றி

எழுதிய கவிதை.


நீ

இந்தியாவில் பிறந்து

இலங்கைக்கு சென்ற-

இராமச்சந்திரனல்ல;

இலங்கையில் பிறந்து

இந்தியா வந்த

இராமச்சந்திரன்.!


அந்த இராமச்சந்திரன்

சூரிய குலத்தில் வந்தவன்.


நீயும்-

உதய சூரியனின்

வழித்தோன்றல்தான்.


அவனும் 

ஜானகி மணாளன்.

நீயும்

ஜானகி மணாளன்.


அவனும்

பதவி ஆசை பிடித்தவர்களால்

வெளியேற்றப்பட்டான்.

நீயும் அப்படியே.


அவனும்

நாடோடியாகத் திரிந்து

மன்னனானான்.

நீயும்-

நாடோடி மன்னன்தான்.


அவனிடத்தில்

இருந்தது போலவே

உன்னிடத்திலும்

"வில் பவர்" இருந்தது.


அந்த இராமச்சந்திரன்

தெய்வமாக இருந்து

மனிதனாக மாறியவன்.


நீ-

மனிதனாக இருந்து

தெய்வமாக மாறியவன்.

இதனால்தான் உன்னை

இதய தெய்வம் என்கிறோம்.


ஆனால் ஒன்று

அவன்

வாலியை

அம்பு கொண்டு வீழ்த்தியவன்.


நீயோ

வாலியை

அன்பு கொண்டு வாழ்த்தியவன்.🙏🌹


வாலி

Comments

Popular posts from this blog

*RSS ப்ரார்தனா - RSS Prayer* *தமிழ் ஸ்லோகம் - தமிழ் மொழிபெயர்ப்பு* *நமஸ்தே ஸதா வத்ஸலே மாத்ரு பூமே* அன்பு காட்டும் தாய் நாடே! உன்னை நான் எப்பொழுதும் வணங்குகிறேன்🔥🙏🪷

*TENT DECOR CATERING EXPO 2024* - 4,5,6-Oct-2024 - Chennai Trade Centre, Nandambakkam Chennai

எனது பாட்டி -விஜயா பாரதி மகாகவி பாரதியின் பெயர்த்தியான திருமதி. விஜயா பாரதி, கனடாவில் வசிக்கிறார். பாரதியின் புகழ் பரப்பும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் அன்னாரது கட்டுரை இது... உங்களுக்கு என் தாத்தா பாரதியை நன்கு தெரிந்திருக்கலாம். அவரின் இறுதிக் காலத்தைப் பற்றி பலர் எழுதி இருக்கிறார்கள். ஆனால் என் பாட்டி செல்லம்மாள், என் தாத்தாவின் மரணத்துக்குப் பிறகு எப்படி வாழ்ந்தார், மறைந்தார் என்பது பலருக்கும் தெரியாது