1907 ¶இல் கஸியாபாத்தில் ஒரு வசதியான பிராமண குடும்பத்தில் பிறந்து, சிறு வயதில் பெற்றோரை இழந்து, சித்தியால் வளர்க்கப்பட்டு,படித்து, ,பகவதி சரண் வோரா என்ற படித்த, பணக்கார பிராமண இளைஞ்ஞரை 13 ம் வயதில் கைபிடித்து.. அவருடைய சுதந்திர போராட்ட, காரியம் யாவிலும் கை கொடுத்து, ஒரு குழந்தைக்கு 18 ம் வயதில் தாயாகி, 23ம் வயதில் கணவரை இழந்து, துப்பாக்கி பிடித்து நாட்டு விடுதலைக்காக போராடி, அப்பழுக்கற்ற வீர தேசபக்தி/தியாக வாழ்வு வாழ்ந்து.. தன் 92ம் வயதில் 1999 இல் கஸியாபாத்தில் மறைந்தார்.

 



இந்த படத்தில் உள்ள பெண்மணி பற்றி நம்மவர்களுக்கு தெரியுமா?


அறிந்து கொள்வது மட்டுமல்ல 

அடுத்த தலைமுறைக்கும் அறிமுகப்படுத்துவோம்.


19 டிசம்பர், 1928, நள் இரவு,, லாகூர்.. அந்த   பங்களாவின்   திட்டி வாசல்  போன்ற  ரகசிய கதவு  ,  சங்கேத மொழியில் தட்டப் படுகிறது.. ...


 கதவை திறந்தது ஒரு அழகிய இளம் பெண், இடுப்பில்  குழந்தையுடன்.. வந்த நால்வரை  பார்த்த உடன் அவர் முகம் மலர்கிறது. ,


 உள்ளே.. அமரச் செய்து உணவளிக்கிறர். வந்தவர்கள் எல்லோரும், இளைஞர்கள் HSRA  (ஹிந்துஸ்தான் ஸோஷியலிஸட் ரிப்பப்ளிக் அஸோசியேஷன்) என்ற தேச விடுதலை இயக்கத்தை சேர்ந்தவர்கள்.  அவர்கள் தாழ்ந்த குரலில்  பேசிக் கொள்ளுகிறார்கள,


என்ன பிரச்சினை? அவர்களை இன்றைய தேதியில்   லாகூரில்   500 போலீசார் வலை வீசி தேடிக்கொண்டு இருக்கிறார்கள்... ,


காரணம்? இரண்டு நாட்கள் முன் தான் இந்த நால்வரும்  லாகூரின்  டெபுட்டி  போலீஸ்  சூப்பிரன்டென்டன்ட்  John P Saunders மற்றும் ஒரு கான்ஸடேபிளை சுட்டு கொன்று விட்டு   தப்பியவர்கள்... . .


 ( அவர்கள் குறி வைத்தது என்னமோ பஞ்சாப்   சிங்கம்   லாலா லஜ்பத் ராய் அவர்களின் வீர மரணத்திற்குக்கு காரணமான  போலீஸ்  சூப்பிரன்டென்டன்ட்  "ஜேம்ஸ் A. ஸ்காட்டுக்கு" குறி தப்பியது, . "Mistaken identity," )


 நால்வருக்கும். லாகூர்  இப்போது   HOT POT.. ... இங்கிருந்து  தப்பியே , ஆக வேண்டும்... இருக்கும் ஒரே எஸ்கேப் ரூட் விடியற்க் காலை கிளம்பும் "லாகூர்   -via "லக்னோ / கான்பூர்  டிரைன்" தான், "


திட்டம் தயார்..   இளைஞர்களில்  ஒருவரான" பகத் சிங் "தன் தாடி மீசை எடுத்து விட்டு  ஒரு பணக்கார  பிரபு  வேஷத்திலும் , மற்றொரு வரான  ராஜ்குரு ..... அவருடைய வேலைக்காரன் போலவும்... ,


 போலீசை ஏமாற்ற.. அவர்களால் மரியாதையாக  துர்கா Bhabhi  . என அழைக்கப்பட்ட இளம் பெண் (துர்காவதி தேவி) பகத் சிங்கின் மனைவி, போல் கை குழந்தை சச்சின் வோரா  உடனும்.... 


மற்ற இளைஞர் சந்திரசேகர ஆசாத்  தங்கள் சஹா வான  சுக் தேவின்  தாய், மற்றும் தங்கையை காசிக்கு புனித யாத்திரை  அழைத்தப் போகும் சன்யாசி வேஷத்தில்.... .


 கான்பூருக்கு   .போய்.. . அங்கிருந்து பகத் சிங் போலி தம்பதி, குழுவினர் கல்கட்டாவிற்கு... ஆசாத், குழுவினர்  காசிக்கு  ரயில் மாறி  நழுவி  விட வேண்டும்


 இதற்க்கு தேவையான,மாறு வேட  உடைகள் போதுமான (5000 ரூபாய் ) , பணம... தேவையானால் பயன் படுத்த   துப்பாக்கிகள் (துர்கா Bhabhi க்கு ) .. எல்லாம் துர்கா Bhabhi  தயாராக வைத்திருந்தார் .....


ஏன் கல்கட்டாவிற்க்கு,? அங்குதான் துற்கா. Bhabhi யின் 26 வயது, கணவர் "பகவதி சரண் ஓரா" ,BA, செல்வந்தர், HSRA இயக்கத்தின் முக்கிய ரகசிய நபர், , இயக்கத்தின்  மீட்டிங்கில் கலந்து கொள்ள போய் இருக்கிறார்...


துர்கா Bhabhi யே  தன் கைப் பட தயாரித்து கொடுத்து அனுப்பியுள்ள ஒரு  வெடி குண்டுடன்.(அதில் அவர் ஒரு நிபுணர்) அடுத்த தாக்குதலுக்கு....


, திட்டம் அச்சு பிசகாமல் ,. நடந்தேறுகிறது, பறவைகள் லாகூர்  விட்டு சிட்டாக   பறந்து விடுகின்றன. (இது பற்றிய என் பதிவு ஒன்று உண்டு)... 


கல்கட்டாவில், மனைவியை சந்தித்த ஓரா, அவருடைய தீரச் செயலை கேட்டு மகிழ்ந்து, எல்லோர் முன்பும் கை குலுக்கினாராம், இவர் முகம் சிவக்க.


சில நாட்கள் கழித்து ஒரு ஏழை பெண் வேஷத்தில்  அதே டிரைனில் குழந்தையுடன் இரண்டாம் பேர் அறியாமல் லாகூர் திரும்பி விடுகிறார் துர்கா Bhabhi.


வந்து, வழக்கம் போல் அவர்கள் நடத்தும் ஹிமாலையன் ஸ்டோரஸ். என்ற கடையின் வியாபரத்தை கவனிக்கிறார்.


உண்மையில்... ஹிமாலையன் ஸ்டோரஸ் ஒரு திரை தான், அதன்  திரை மறைவில்   இயங்குவது ஒர் வெடிகுண்டு தொழில் சாலை.  அதன் Chieh Technician துர்கா Bhabhi தான்...


1929  டிசம்பர் இல்  வைசிராய் லார்ட் இர்வின் பிரயாணம் செய்த ரயிலின் அடியில், கணவர் ஓராவினால் வைக்கப்பட்டு வெடித்த குண்டு இவர் கையால் செய்யப்பட்டது தான்.


கல்கட்டாவில் இருந்து திரும்பி வருகிறார் ஓரா, பின்னாலேயே அந்தச் செய்திகளும் , வருகின்றன... சுக் தேவ், ராஜ் குரு, பகத் சிங், அசெம்பிளி யில்  குண்டு வீசியது. (Smoke bomb) பின் அவர்கள் பிடி பட்டு   லாகூர்  சிறையில் அடைக்கப்பட்டு லாகூர் சதி வழக்கு என்ற பெயரில் வழக்கு பதிவு செய்யப்பட்டது முதலியன....


ஓரா தம்பதியினரும்.. HSRA இயக்கமும்  சிறைப்பட்ட  புரட்சியாளர்களை சிறை மீட்கக்  சிறையை வெடி  குண்டு வைத்து தகர்க்க   திட்டம் இடுகின்றனர், மாதிரி வெடி குண்டு ஒன்றை  துர்கா Bhabhi தயாரிக்கிறார் .


 ஆனால் என்ன துர் அதிஷ்ட்டம் ... மாதிரி  குண்டை  ரவி  நதிக்கரையில் பரிசோதிக்க ஓரா  முயலும் போது, அது எதிர் பாராமல் சீக்கிரமே வெடித்து, ஓரா இறந்து விடுகிறார்... வயது 26 தான்.


துர்கா Bhabhi தன் 23ம் வயதிலேயே கைம்பெண்... மனம் உடைத்தாலும் அவர், "தன் நம்பிக்கை" , "தேசபக்தியை" இழக்க வில்லை.


அரசாங்கம் லாகூர் சதி வழக்கு குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை விதிக்கிறது, குற்றவாளிகள்  24 வயது கூட  நிரம்பாத ததால் அவர்களின்  இளமை கருதி அதை ஆயுள் தண்டனையாக குறைக்க வேண்டும் என சட்ட, வீதி போராட்ட ங்கள் வெடிக்கின்றன.


ஆனால் , பஞ்சாப் கவர்னர்   லார்ட், ஹெய்லி   தூக்கு தண்டனையை உறுதி செய்ய கடும் முயற்ச்சி  எடுக்கிறார்... கூடக்   குரல் கொடுப்பது யார்? அட, அது, நம். M. K. காந்தீஜீ, ஹரிஜனில்.அடக் கொடுமையே


துர்கா Bhabhi தன் நகைகளை விற்று,  (4000 ரூபாய்) குற்றவாளிகளின்  தண்டனை குறைப்பதற்கு சட்டப் போராட்டம்... பலன்  இல்லை,


 அவர்கள் . மூவரும் 23 rd மார்ச் 1931 அன்று சிறை வளாகத்தில் தூக்கில் இடப்படுகிறர்கள. 


கொதித்து எழுகிறார் துர்கா Bhabhi , பழிக்கு, பழி, பஞ்சாப் கவர்னர் பழி வாங்கப்பட வேண்டும்.. ...... அன்று  கவர்னர் மாளிகை அருகில் மறைந்திருந்து.. , கவர்னர் வெளிவரும் போது துப்பாக்கியால் சுட ( நான்கு ரவுண்டு ) துர் அதிஷ்ட வசமாக?? அந்த  நேரத்தில் குறுக்கே வந்த வேறு இரு பிரிட்டீஷ் அதிகாரிகள் கொல்லப்பட்டு கவர்னர் தப்பி விடுகிறார்...


துர்கா Bhabhi கைது  செய்யப்பட்டு, ஆயுள் தண்டனை வழங்கப்படுகிறது, ஆனல் பஞ்சாப் மக்களின் வீதி, சர்தார் படேலின்  சட்டப்  போராட்டம்  , அவருடைய இளம் வயது,... குழந்தை  என்ற காரணங்களினால்  , தண்டனை ஐந்தாண்டு காலமாக குறைக்கப் பட்டு, பின் விடுதலை..


விடுதலை ஆன பிறகும் அவருடைய உதவி, பங்களிப்பு தீவிரவாத விடுதலை போராளிகளுக்குத் தொடர்கிறது...


குறிப்பாக, 1926 . இல்... அவர்   HSRA போராளி, தியாகி  கத்தார் சிங் அவர்களின் நினைவு நான் அனுசரிப்பில் அவர்  பெரும் கூட்டத்திற்க்கு. லாகூரில் தலைமை தாங்கியது....


 மற்றொன்று 

போராளி ஜித்ரேந்ததிர நாத் தாஸ் சிறையில் 65  நாட்கள் உண்ணாவிரதம் இருந்து, இறந்தபோது, அவருடைய இறுதி உர்வலத்திற்க்கு லாகூரில் இருந்து , கல்கட்டா  வரை ரயிலிலும். நடந்தும்  தலைமை தாங்கியது... , பின் தொடர்ந்த மக்கள் கூட்டம் 4 /5 மைல் நீளம் இருந்ததாம்..


 15. ஆகஸட் 1947,  இந்தியாவிற்கு சுதந்திரம்...


ஏராளமானவர்கள் சுதந்திர போராட்ட தியாகிகள் என்று, பட்டம், பதவி, பணம், செல்வாக்கு, நிலம் பெற்றனர்,


 சரோஜனி நாயுடு, அருணா ஆசப் அலி, விஜயலட்சுமி பண்டிட், ருக்மணி லட்சுமிபதி போன்ற பெண்மணிகள்  உட்பட...


துர்கா Bhabhi போன இடம் தெரிய வில்லை.... அரசுக்கு எந்த துப்பும் இல்லை, அரசை எந்த விதத்திலும் அவர் நெருங்கவும்  இல்லை,


 சில வருடங்கள் கழித்து அவர் கஸியாபாத்தில் இருப்பதாக கேழ்விப்பட்டு. சர்தார் வல்லபாய் படேல் அவர்கள் அவரை சந்தித்து அரசு உதவி, பதவி  offer  பண்ணிய போது, மறுத்து விட்டாராம். 

 நேரு மாமாவை  அவர் சந்திக்க கூட... மறுப்பு 


பிற்க்காலத்தில் ஒரு நேர்காணலில்  அவர் குறிப்பிட்டது....


"பாரத்தின் சுதந்திரத்திற்க்காக தன் உடல், பொருள், ஆவி, இளமை,, எல்லாவற்றையும் மனப்பூர்வமாக, என் கணவர் போல் தியாகம் செய்த நூற்றுக் கணக்கானவர்களை சந்தித்து உள்ளேன்.. . அவர்கள் தியாகத்தின் முன் என்னுடையது கால் தூசி கூட இல்லை... அதை காட்டி எந்த சலுகையும் அடைய என் மனசாட்சி ஒப்பாது .. ,அதுவும் காங்கிரஸ் இடம்.

 அந்த வீரர்கள் புகழ் பரப்புவது,... நினைவை போற்றுவது  தான்  என் பணி. " என்றார்


தன் சொத்துக்களை  விற்று லக்னோவில் ஒரு பெண்கள்  பள்ளி ஆரம்பித்து , அதே பள்ளியில் ஒரு சதாரண ஆசிரியை ஆகவே இறுதி வரை பணி ஆற்றுகிறார்  .... 


1907   ¶இல் கஸியாபாத்தில் ஒரு வசதியான  பிராமண குடும்பத்தில் பிறந்து, சிறு வயதில் பெற்றோரை இழந்து, சித்தியால் வளர்க்கப்பட்டு,படித்து, ,பகவதி சரண் வோரா என்ற படித்த, பணக்கார பிராமண  இளைஞ்ஞரை 13 ம் வயதில் கைபிடித்து.. அவருடைய சுதந்திர  போராட்ட, காரியம் யாவிலும் கை கொடுத்து, ஒரு குழந்தைக்கு 18 ம் வயதில் தாயாகி,  23ம் வயதில் கணவரை  இழந்து, துப்பாக்கி பிடித்து நாட்டு  விடுதலைக்காக போராடி, அப்பழுக்கற்ற  வீர தேசபக்தி/தியாக  வாழ்வு வாழ்ந்து.. தன் 92ம் வயதில்  1999 இல்  கஸியாபாத்தில் மறைந்தார். 


அவர் இறுதி விருப்பப்படி  அவர் மறைவிற்க்குப் பின்  அவர் நிறுவிய  அந்தப்  பள்ளிக்கு  அவர்  பெயரோ , அவர் கணவர் பெயரோ,  .வைக்கப் பட வில்லை. . அது வெறும் "பெண்கள் பள்ளி" என்றே அழைக்கப்பட்டது. 

 

அந்தப் பள்ளி இன்றும் உள்ளது பெயர், .... "பெண்கள் பள்ளி " 


இதுவல்லவோ, வீர தியாக வாழ்வு


வாழ்க அவர் புகழ்.. வந்தே மாதரம்

Comments

Popular posts from this blog

*RSS ப்ரார்தனா - RSS Prayer* *தமிழ் ஸ்லோகம் - தமிழ் மொழிபெயர்ப்பு* *நமஸ்தே ஸதா வத்ஸலே மாத்ரு பூமே* அன்பு காட்டும் தாய் நாடே! உன்னை நான் எப்பொழுதும் வணங்குகிறேன்🔥🙏🪷

*TENT DECOR CATERING EXPO 2024* - 4,5,6-Oct-2024 - Chennai Trade Centre, Nandambakkam Chennai

எனது பாட்டி -விஜயா பாரதி மகாகவி பாரதியின் பெயர்த்தியான திருமதி. விஜயா பாரதி, கனடாவில் வசிக்கிறார். பாரதியின் புகழ் பரப்பும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் அன்னாரது கட்டுரை இது... உங்களுக்கு என் தாத்தா பாரதியை நன்கு தெரிந்திருக்கலாம். அவரின் இறுதிக் காலத்தைப் பற்றி பலர் எழுதி இருக்கிறார்கள். ஆனால் என் பாட்டி செல்லம்மாள், என் தாத்தாவின் மரணத்துக்குப் பிறகு எப்படி வாழ்ந்தார், மறைந்தார் என்பது பலருக்கும் தெரியாது