அமெரிக்க ஆயுதங்களை திருப்பி அனுப்பி அசிங்கப்படுத்திய இந்தியா!

 


அமெரிக்க ஆயுதங்களை திருப்பி அனுப்பி அசிங்கப்படுத்திய இந்தியா! 


ஒரு நாடு ஆயுதங்களை இன்னொரு நாட்டிற்கு கொடுக்கிறது என்பது அதை கொடுத்தவுடன் முடிந்துவிடாது. அதை தாண்டி ஒப்பந்தப்படி கொடுக்கும் சப்போர்ட், அதற்கு மேலான நம்பிக்கை ஆகியன மிக முக்கியம். அதை விற்ற நாடு  செய்யாவிட்டால், அதற்கு மேல் அதை அந்த நாடு வாங்காது. 


ஆனால் வாங்கிய ஆயுதங்களை  ஒரு நாடு திருப்பி கொடுக்கிறது என்றால் உன் பொருளில் தரமில்லை அல்லது உன் மீது நம்பிக்கையில்லை என்பதுதான் அர்த்தம். அப்படி அதை ஒரு நாடு செய்துவிட்டால் விற்ற நாட்டிற்கு அசிங்கம் மட்டுமல்ல, மற்ற நாடுகள் அதனிடம் இருந்து ஆயுதம் வாங்காது. 


அப்படி ஒரு நிகழ்வை இந்தியா செய்துள்ளது. அதைத்தான் இன்று உலகெங்கும் விவாதிக்கிறார்கள். பல பதிவுகள், மீடியா விவாதம் என்று தொடங்கி மற்ற அமெரிக்க ஆதரவு நாடுகள் கிசுகிசுப்பதும், அமெரிக்க அதிகாரிகள் முனுமுனுப்பதையும் பார்க்க முடிகிறது. 


இந்தியா அமெரிக்காவிடம் சமீபத்தில் வாங்கிய ஆயுதங்களில் 50% திருப்பி கொடுத்துள்ளது என்று சொல்வதைவிட அதன் மூஞ்சியில் விட்டெரிந்துள்ளது என்பதுதான் அர்த்தம். அதற்கான பணத்தை நாம் கொடுத்து வாங்கிய பின்னரும், அது பில்லியன்களில் இந்தியாவிற்கு இழப்பாக இருந்தும் இது ஏன் நடந்தது?


இந்தியாவிற்கு Critical Energy கொண்டு வந்த சரக்கு கப்பலை International Water Ways ல் அமெரிக்க கப்பற்படையால் தடுத்து நிறுத்தப்பட்டது. அதை இந்தியா தெரிந்து கொண்டவுடன், பிரதமர் மோடி தலைமையிலான ஒரு அவசர எமெர்ஜென்ஸி மீட்டிங் போடப்பட்டது. 


அதன்படி அமெரிக்காவிடம் வாங்கிய ஆயுதங்களில் 50% ஆயுதங்களை அமெரிக்காவிடம் திரும்ப கொடுப்பதென முடிவு செய்யப்பட்டது. அதனால் அதை விற்ற நிறுவனங்களுக்கு மட்டுமல்ல, அமெரிக்காவிற்கே அது அசிங்கம். அதுவும் வல்லரசான அமெரிக்காவிற்கு என்றால் அது பேரசிங்கம். 


சீனா தனது J-10 விமானங்களை பாகிஸ்தான் மூலம் விற்றபின், அது வேலை செய்யவில்லை. அதற்கான சப்போர்ட், ஸ்பேர்ஸ் என்று எதுவும் சீனாவால் கொடுக்க முடியவில்லை. அதுபோன்ற சூழலில் வாங்கிய நாடுகள் அதை இவ்வாறு திருப்பி கொடுத்திருக்க வேண்டும். 


ஆனால் சீனாவிற்கு பயந்துகொண்டு அதை செய்யாதபோது உலக வல்லரசான அமெரிக்காவிடம் இந்தியா இதை செய்திருப்பது ஆச்சரியமென உலகெங்கும் பேசப்படுகிறது.


அதனால் அமெரிக்க ஆயுத நிறுவனங்களும், அது சார்ந்த கார்ப்ரேட் நிறுவனங்களும் பதைபதைத்து ட்ரம்ப் நிர்வாகத்திடம் ஓடினார்கள். அதற்கான காரணத்தை புரிந்துகொண்ட அமெரிக்கா, இந்தியாவின் கப்பலை let it go என்று போக அனுமதித்தது. 


அதனால் அந்த உத்தரவை இந்தியா திரும்ப பெற்றுக்கொள்ளும் என நினைதத ட்ரம்ப் அரசாங்கத்திற்கு, அரல்து நடக்காததால் மேலும் அசிங்கம்தான் நடந்தேறியது.


அதனால், இந்தியா இதை செய்யும்போது அதை நாம் ஏன் செய்யக்கூடாது என்று F-16 விமாங்களை ஆர்டர் செய்திருந்த ஸ்வீடன், பல்கேரியா, வியட்நாம் நாடுகள், அமெரிக்கா கடுமையான வரி விதித்ததால் ஒப்பந்தத்தை கேன்சல் செய்துள்ளது. இதை மற்ற நாடுகளும் தொடர்ந்தால் நிலை படு மோசமாகலாம்.


அது மட்டுமல்ல, அமெரிக்காவின் 5 F-16 போர் விமானங்களையும், Saab AWACS விமானத்தையும் ஆபரேஷன் சிந்தூரின் போது இந்தியா ஏவுகணை மூலம் அழித்த விபரங்களை, நமது இராணுவம் வெளியிட்டுள்ளது. இது அதன் திறனை மேலும் வீழ்த்தும் என்பதால், புதிய ஆயுத ஒப்பந்தங்கள் நடப்பது குறையும்.


இதில் மிக முக்கியமானது, தான் சொன்னதுதான் சட்டம் என்று உலகின் மிகப்பெரிய ரவுடியான அமெரிக்காவை பகைத்த ரஷ்யா, ஈராக், ஈரான், லிபியா என்று பல நாடுகளை மண்டியிட வைத்த அமெரிக்காவின் கண்ணத்தில் இதன் மூலம் அறைந்த இந்தியாவின் செயல் உலகெங்கும் மீடியாக்களில் மட்டுமல்ல, அரசாங்கங்களில் விவாதிக்கப்படுகிறது.


இந்தியா தனது நட்பு நாடு, மோடி எனது நண்பர் என்று சொல்லி 25% வரி விதித்தை ட்ரம்பை, ரஷ்யாவிடம் ஏன் அமெரிக்கா இன்னும் வர்த்தகம் செய்கிறது என்று கேட்டதற்காக மேலும் 25% வரி விதித்ததும், அவரின் ஈகோவை அப்பட்டமாக காட்டியது. அதற்கு பதிலாக இந்தியாவிற்கும் ஈகோ இருக்கிறது, மரியாதை இல்லாத நட்பு நட்பல்ல என்று இந்தியா கொடுத்த செருப்படி, வல்லரசை இல்லா அரசாக்கிவிட்டது!


இதற்கிடையில் அமெரிக்காவின் ஜெனரிக் மெடிஷின்களில் 60% இந்தியாவில் இருந்து ஏற்றுமதியாவதுதான். ட்ரம்ப் நிர்வாகம் வரி விதித்த பின்பு, அமெரிக்கா அதற்கு விலக்கு கொடுத்தாலும், இந்தியா ஏற்றுமதியை குறைதுவிட்டது. அதனால் பல உயிர்காக்கும் மருந்துதகள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதுபற்றி அடுத்த பதிவில் விரிவாக எழுதுகிறேன். 


Comments

Popular posts from this blog

SUGA Elite Cruise Travellers Club* SUGA Elite Cruise Travellers Club is in tie-ups with international Cruise T I'll keep you ours and Travels companies. We can travel with the following major cruise lines:

சிறுகதை: *வெங்கட்ராமன் முடிவு சரியா தப்பா??* வெங்கட்ராமன் நன்கு படித்த பிராமண பையன். நல்ல வேலை. ஆள் பார்க்க மிக நன்றாக இருப்பான். வயது 38. ஆனால் திருமணத்திற்கு பிராமண பெண் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இன்னும் சரியாக அமையவில்லை. அவர்கள் குடும்பம் பழமையான பிராமண குடும்பம். வெங்கட்ராமன் வீட்டுக்கு வந்து அம்மா அப்பாவிடம் பேசினான். "அப்பா, எல்லாம் நல்லபடியா முடிஞ்சது அந்த ஆபீசுக்கு போய் அந்த பொண்ணோட பேசிட்டேன்...

எனது பாட்டி -விஜயா பாரதி மகாகவி பாரதியின் பெயர்த்தியான திருமதி. விஜயா பாரதி, கனடாவில் வசிக்கிறார். பாரதியின் புகழ் பரப்பும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் அன்னாரது கட்டுரை இது... உங்களுக்கு என் தாத்தா பாரதியை நன்கு தெரிந்திருக்கலாம். அவரின் இறுதிக் காலத்தைப் பற்றி பலர் எழுதி இருக்கிறார்கள். ஆனால் என் பாட்டி செல்லம்மாள், என் தாத்தாவின் மரணத்துக்குப் பிறகு எப்படி வாழ்ந்தார், மறைந்தார் என்பது பலருக்கும் தெரியாது