அமெரிக்கா இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தானில் ஒரு ராணுவபுரட்சிக்கு வழி செய்து அதன் மூலம் தொல்லை கொடுக்க விரும்புகின்றது.

 


அமெரிக்காவ்க்கு இரண்டாம் முறையாக அழைக்கபட்டிருக்கின்றார் பாகிஸ்தானிய ஜெனரல் முனீர்.


 இது முன்பு பூட்டோ காலத்தில் ஜியா உல்ஹக் எனும் ஜெனரலை அமெரிக்கா வளர்த்து பின் உல்ஹக் நாட்டை கைபற்றி இந்தியாவுக்கு பெரும் தலைவலியான காட்சியின் சாயல்.


அதாவது அமெரிக்கா இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தானில் ஒரு ராணுவபுரட்சிக்கு வழி செய்து அதன் மூலம் தொல்லை கொடுக்க விரும்புகின்றது.


இந்த முனீர் சென்ற விவகாரம் அமெரிக்க சென்ட்காம் எனப்படும் அராபிய பிராந்திய கட்டளை தளபதியின் பிரிவு உபச்சாரம் மற்றும் புதிய தளபதியின் பொறுப்பேற்பு விழாவில் பங்கேற்க‌.


அதாவது இனி அமெரிக்க ராணுவமும் பாகிஸ்தான் ராணுவமும் இணைந்து செயலாற்றும், அங்கே ஓய்வு பெற்ற  அமெரிக்க ஜெனரல் சொன்னதுதான் விஷயம்.


"தீவிரவாதிகளை ஒழிக்க எங்களுக்கு முழு ஒத்துழைப்பு தந்தவர் முனீர்".


இதை சிரிக்காமல் அவர் சொன்னார்.


 பின்லேடன் பாகிஸ்தான் ராணுவ முகாம் அருகே காவலில் இருந்தான்.


இப்போது இந்தியாவில் தாக்குதல் நடத்தும் தீவிரவாதிகளுக்கு ஆதரவாக பாகிஸ்தான் ராணுவமே வருகின்றது.


 அப்படியான நிலையில் இந்த கூற்று பலரை வாயினை பொத்தி சிரிக்க வைத்தது.


அமெரிக்காவுக்கும் மானத்துக்கும் வெகுதூரம்.


 அங்கு எல்லாமே பணம்.


இந்த கூட்டத்தில்தான் "அணுகுண்டு வைத்திருக்கும் நாங்கள் யாருக்கும் அஞ்சமாட்டோம் எங்கள் சக்தியினை காட்டுவோம், இந்தியா சிந்துநதியில் அணைகட்டினால் ஏவுகனையால் உடைப்போம்" என முழங்கிய முனீர் வாக்கியத்தை எப்படி முடித்தார் என்றால்

மதவாதிகள் முழங்கும், ஜிகாதிகள் முழங்கும் வார்த்தைகளுடன் முடித்தார்.


அதாவது அமெரிக்க ராணுவ கூட்டத்திலே ஒரு மதவாத முழக்கத்தை அவர் வைத்தபோது எல்லோரும் உள்ளுக்குள் நடுங்கினாலும் வெளியே சிரித்து கொண்டார்கள்.


இதை அமெரிக்காவில் பலர் ரசிக்கவில்லை.


 அமெரிக்க ராணுவ மற்றும் சர்வதேச அரசியல் நிபுணர்களெல்லாம் தலையில் அடித்து கொண்டார்கள்.


இதன் பின்பே அன்னார் பாகிஸ்தானில் இருக்கும் மாபெரும் எண்ணெய் புதையலை அமெரிக்காவோடு இணைந்து எடுப்போம் என சொன்னார்.


அதாவது அமெரிக்கா பாகிஸ்தான் எண்ணெயினை கையில் எடுக்க நினைப்பதும் அதற்கு பாகிஸ்தானிய அரசோ மக்களோ எதிர்ப்பு தெரிவித்தால் பாகிஸ்தான் ராணுவத்தை கொண்டே நசுக்க திட்டமிடுவதும் புரிகின்றது.


இதை பாகிஸ்தானில் இருந்து கேட்ட அவர்கள் பிரதமர் உள்ளிட்டோர் ஆடிபோனார்கள்.


நம் அரச உத்தரவு இல்லாமல் தளபதி இப்படி அமெரிக்காவில் பேசுவது கிட்டதட்ட பாகிஸ்தான் ராணுவ ஆட்சிக்குள் செல்வதை உறுதிபடுத்தினார்கள்.


இனி வழக்கம்போல் பாகிஸ்தானிய பிரதமர் விரைவில் துபாய், பிரிட்டன் என தப்பி ஓடலாம்.


 இந்தியா அவரை வரவேற்கின்றது.


 வந்தால் வங்கதேச முன்னாள் பிரதமர்போல் நாமும் பாதுகாக்கலாம்.


சரி, பாகிஸ்தானில் அபப்டி எண்ணெய் உண்டா என்றால் இதுவரை நிருபிக்கபடவில்லை.


ஈரானிய எல்லை ஒட்டி நிலத்திலும் கடலிலும் மிககுறைந்த எண்ணெய் உண்டு.


 ஆனால் அது பலனில்லாதது.


இங்கே எண்ணெய் இருப்பதாக சொல்லி அமெரிக்கா வந்து அட்டகாசம் செய்யுமா இல்லை பாகிஸ்தான் அப்படி ஒரு பொய்யை சொல்லி டிரம்பரை குழப்புகின்றதா, குவெட்டா பக்கம் இருக்கும் சீனாவை விரட்ட இந்த நாடகம் நடத்தபடுகின்றதா என்பது இனி தெரியும்.


 மற்றபடி சில கரண்டி எண்ணெய் கூட அங்கு இல்லை.


இந்த கூட்டத்தில் பாகிஸ்தான் பிரதமர் சொன்னதுதான் விஷயம்.


"இந்தியா பளபளக்கும் பென்ஸ்கார் போல் ஓடுகின்றது, நாங்கள் கல் ஏற்றிய டாரஸ் லாரிபோல் நகர்கின்றோம் ஆனால் நாங்கள் மோதினால் அவர்கள் தாங்கமாட்டார்கள்".


அதாவது இந்தியா ஜொலிக்கின்றது பாகிஸ்தானை விட பன்மடங்கு பலமும் செல்வமும் கொண்டிருக்கின்றது என்பதை அவரே ஒப்புகொள்கின்றார்.


 ஆனால் நாங்கள் மோதுவோம் எனவும் மிரட்டுகின்றார்.


பென்ஸ்கார் ஓட இந்த லாரி விடாது என அச்சுறுத்துகின்றார்.


ஆனால் லாரியின் நான்கு டயர்களும் பழுது இன்ஜினில் கோளாறு என்பதை அவர் மறைத்தும் கொண்டார்.


அந்த பழைய லாரி இனி சாலையில் வரட்டும் பார்த்து கொள்ளலாம்.


பலமுறை விட்டுவிட்டோம்.


 இனி வந்தால் புரட்டிபோட்டு எல்லாவற்றையும் கழற்றிவிடலாம் என எதிர்பார்த்து தயாராக இருக்கின்றது இந்தியா.

Comments

Popular posts from this blog

*RSS ப்ரார்தனா - RSS Prayer* *தமிழ் ஸ்லோகம் - தமிழ் மொழிபெயர்ப்பு* *நமஸ்தே ஸதா வத்ஸலே மாத்ரு பூமே* அன்பு காட்டும் தாய் நாடே! உன்னை நான் எப்பொழுதும் வணங்குகிறேன்🔥🙏🪷

*TENT DECOR CATERING EXPO 2024* - 4,5,6-Oct-2024 - Chennai Trade Centre, Nandambakkam Chennai

எனது பாட்டி -விஜயா பாரதி மகாகவி பாரதியின் பெயர்த்தியான திருமதி. விஜயா பாரதி, கனடாவில் வசிக்கிறார். பாரதியின் புகழ் பரப்பும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் அன்னாரது கட்டுரை இது... உங்களுக்கு என் தாத்தா பாரதியை நன்கு தெரிந்திருக்கலாம். அவரின் இறுதிக் காலத்தைப் பற்றி பலர் எழுதி இருக்கிறார்கள். ஆனால் என் பாட்டி செல்லம்மாள், என் தாத்தாவின் மரணத்துக்குப் பிறகு எப்படி வாழ்ந்தார், மறைந்தார் என்பது பலருக்கும் தெரியாது